Latest Updates
-
எவிலின் சர்மாவின் திடீர் பிரிவு! கசப்பான விவாகரத்தை விட இது எவ்வளவோ மேல் தெரியுமா? -
கல்யாணத்துக்குப் பின் 'சிச்சுவேஷன்ஷிப்' - வைரலாகும் இந்த டிரெண்ட் எதை உணர்த்துகிறது? -
வெயிலுக்கு ஏசி தேவையில்லை! இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடு ஜில்லுனு இருக்கும்! -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..! -
வீட்டில் இந்த செடிகளை வையுங்க… கோடை வெயில் பறந்து போகும், பணமும் கொட்டும்! -
வெயிலுக்கு இப்படி ஒருடைம் தக்காளி ரசம் செய்யுங்க.. தட்டு சோறை நொடியில் காலி பண்ணுவாங்க..! -
May 2026 Calendar: மே மாதத்தில் வரப்போகும் முக்கியமான பண்டிகைகள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 01 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் மே மாதம் இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
வாஸ்து படி உங்க வீட்டில் துடைப்பம் இந்த இடத்தில் இருந்தால் உங்கள் வீட்டுக்கு அதிர்ஷ்டம் எப்பவுமே வராதாம்
உலகிற்கு தமிழ் கலாச்சாரம் அளித்த நான்கு அற்புத பங்களிப்பு
உலகிற்கு முன்னோடியாக திகழும் தமிழ் கலாச்சாரத்தின் 4 அற்புத பங்களிப்பு பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
குமரியில் தோன்றிய இனம், கன்னியாகுமரியின் எல்லையில் வள்ளுவனை இன்றும் கண்டு வியக்கும் பெருமை கொண்ட மொழியை பேசும் மக்கள். உலகம் இன்றும் வியக்கும் விஷயங்களை அன்றே பாக்களில் பாடி சென்றவர்கள் நமது முன்னோர்கள்.
இன்று பெரிதாக நமது கவனத்தை ஈர்க்காத சில விஷயங்கள் உலகம் வியக்கும் விஷயங்களாக, அறியா விஷயங்களாக திகழ்கின்றன. தமிழனின் பெருமை கூட பலநூறு விஷயங்கள் இருக்கின்றன. இந்த நான்கு அற்புத விஷயங்களாக திகழ்கின்றன...

மூத்தகுடி தமிழன்!
உலகம் மொழி அறியாது, உறவு அறியாது சுழன்று கொண்டிருந்த போது வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்து. முத்தமிழ் சங்கம் உருவாக்கி சிறந்து விளங்கியவன் தமிழன் என்பதில் நாம் பெருமை அடைய வேண்டும்.

யாதும் ஊரே...
சங்கக்கால புலவர் கனியன் பூங்குன்றனார் சங்க காலத்தில் "யாதும் ஊரே, யாவரும் கேளீர்" என பாடியவர். இதை ஐரோப்பிய பாராளுமன்றத்தில் மறைந்த மக்கள் ஜனாதிபதி டாக்டர். அப்துல் கலாம் அவர்கள் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகெங்கும் இருப்பவர்கள் அனைவரும் ஒருவர் என்ற உயர்ந்த கொள்கையை பாராட்டும் வாக்கியம் இது.

பஞ்சலோகம்!
ஐந்து உலோகங்களை சேர்த்து உருவாக்கப்படும் சிலைகள் தான் இந்த பஞ்சலோக சிலைகள். கும்பகோணத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் இந்த பஞ்சலோக சிலைகளை காணலாம்.

நவபாஷனம்!
நவபாஷாணம் என்பது சித்தர்களால் அறியப்பட்ட ஒரு அற்புதம். ஒன்பது வகை பாஷனங்களை சேர்த்து உருவாக்கப்பட்டது. பழனி முருகனின் சிலை இதனால் உருவாக்கப்பட்டது ஆகும்.

நாடி ஜோதிடம்!
ஓலைசுவடியில் ஒரு மனிதனின் எதிர்காலம் பற்றி குறிக்கப்பட்ட ஜோதிட முறை. வைத்தீஸ்வரன் கோவில் இதற்கு புகழ்பெற்றது.

தமிழ் வழி பின்பற்றுவோம்...
இயற்கையே மருந்து, இயற்கையே உணவு என வாழ்ந்தவர்கள் நாம். இனிமேலும், வெளிநாட்டு பானங்கள், கெமிக்கல் உணவுகள், மேற்கத்திய கலாச்சாரம் போன்றவற்றை ஆதரிக்காமல், தமிழ் வழி நிற்போம். இதுவே, தமிழையும், தமிழ் கலாச்சாரத்தையும் சிறந்தோங்க செய்யும்.



Click it and Unblock the Notifications