Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
உலகிற்கு தமிழ் கலாச்சாரம் அளித்த நான்கு அற்புத பங்களிப்பு
உலகிற்கு முன்னோடியாக திகழும் தமிழ் கலாச்சாரத்தின் 4 அற்புத பங்களிப்பு பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
குமரியில் தோன்றிய இனம், கன்னியாகுமரியின் எல்லையில் வள்ளுவனை இன்றும் கண்டு வியக்கும் பெருமை கொண்ட மொழியை பேசும் மக்கள். உலகம் இன்றும் வியக்கும் விஷயங்களை அன்றே பாக்களில் பாடி சென்றவர்கள் நமது முன்னோர்கள்.
இன்று பெரிதாக நமது கவனத்தை ஈர்க்காத சில விஷயங்கள் உலகம் வியக்கும் விஷயங்களாக, அறியா விஷயங்களாக திகழ்கின்றன. தமிழனின் பெருமை கூட பலநூறு விஷயங்கள் இருக்கின்றன. இந்த நான்கு அற்புத விஷயங்களாக திகழ்கின்றன...

மூத்தகுடி தமிழன்!
உலகம் மொழி அறியாது, உறவு அறியாது சுழன்று கொண்டிருந்த போது வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்து. முத்தமிழ் சங்கம் உருவாக்கி சிறந்து விளங்கியவன் தமிழன் என்பதில் நாம் பெருமை அடைய வேண்டும்.

யாதும் ஊரே...
சங்கக்கால புலவர் கனியன் பூங்குன்றனார் சங்க காலத்தில் "யாதும் ஊரே, யாவரும் கேளீர்" என பாடியவர். இதை ஐரோப்பிய பாராளுமன்றத்தில் மறைந்த மக்கள் ஜனாதிபதி டாக்டர். அப்துல் கலாம் அவர்கள் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகெங்கும் இருப்பவர்கள் அனைவரும் ஒருவர் என்ற உயர்ந்த கொள்கையை பாராட்டும் வாக்கியம் இது.

பஞ்சலோகம்!
ஐந்து உலோகங்களை சேர்த்து உருவாக்கப்படும் சிலைகள் தான் இந்த பஞ்சலோக சிலைகள். கும்பகோணத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் இந்த பஞ்சலோக சிலைகளை காணலாம்.

நவபாஷனம்!
நவபாஷாணம் என்பது சித்தர்களால் அறியப்பட்ட ஒரு அற்புதம். ஒன்பது வகை பாஷனங்களை சேர்த்து உருவாக்கப்பட்டது. பழனி முருகனின் சிலை இதனால் உருவாக்கப்பட்டது ஆகும்.

நாடி ஜோதிடம்!
ஓலைசுவடியில் ஒரு மனிதனின் எதிர்காலம் பற்றி குறிக்கப்பட்ட ஜோதிட முறை. வைத்தீஸ்வரன் கோவில் இதற்கு புகழ்பெற்றது.

தமிழ் வழி பின்பற்றுவோம்...
இயற்கையே மருந்து, இயற்கையே உணவு என வாழ்ந்தவர்கள் நாம். இனிமேலும், வெளிநாட்டு பானங்கள், கெமிக்கல் உணவுகள், மேற்கத்திய கலாச்சாரம் போன்றவற்றை ஆதரிக்காமல், தமிழ் வழி நிற்போம். இதுவே, தமிழையும், தமிழ் கலாச்சாரத்தையும் சிறந்தோங்க செய்யும்.



Click it and Unblock the Notifications











