Just In
- 28 min ago உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
- 1 hr ago ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- 2 hrs ago 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- 3 hrs ago இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
Don't Miss
- News ஆம்பளையா பொறந்ததுல ஒரே அட்வான்டேஜ்.. அடிக்கிற வெயிலுக்கு பனியன், டவுசரோட சுத்தலாம்!
- Finance பாகிஸ்தானுக்கு ஆயுதம் சப்ளை செய்த சீனா.. கண்டுபிடித்து வெளுத்த அமெரிக்கா..!!
- Sports தோனியால் 2 - 3 ஓவர்கள் தான் விளையாட முடியும்.. ஏன் தெரியுமா? காரணத்தை சொன்ன பயிற்சியாளர் பிளெமிங்!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Movies Blue sattai Maaran: தற்போதைக்கு திருந்திய.. விஜய் ஆண்டனி கருத்துக்கு ப்ளூ சட்டை மாறன் பதிலடி!
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
சாபத்தில் இருந்து விடுபட விலங்குகளை திருமணம் செய்து கொண்டவர்கள்!
நிஜ வாழ்க்கையில் மனிதர்கள் விலங்குகளை திருமணம் செய்து கொள்வது என்பது விசித்திரமான ஒன்றாக தான் இருக்கும். இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சாபத்தைப் போக்க விலங்குகளை திருமணம் செய்து கொணடனர்.
இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் முட்டாள்தனமான பழக்கங்கள் மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. அப்படி பின்பற்றப்பட்டு வரும் ஓர் பாரம்பரிய பழக்கம் தான் விலங்குகளுடனான திருமணம். புராணங்களில், மனிதர்கள் விலங்குகளை திருமணம் செய்து கொள்வது என்பது பொதுவான ஒன்றாக இருக்கலாம்.
அதில் அனுமனின் தாய் அஞ்சனை ஒரு வாணர ராஜாவை திருமணம் செய்து கொண்டது, ராமாயணத்தில் உள்ள கரடியான ஜாம்பவானின் மகள் கிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டது மற்றும் உலுப்பி என்னும் பாம்பு அர்ஜூனை திருமணம் செய்து கொள்ள விரும்பியது போன்றவை குறிப்பிடத்தக்கவை.
ஆனால் நிஜ வாழ்க்கையில் மனிதர்கள் விலங்குகளை திருமணம் செய்து கொள்வது என்பது விசித்திரமான ஒன்றாக தான் இருக்கும். அப்படி இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சிலர் தங்களுக்குள்ள சாப விமோட்சனத்திற்காக விலங்குகளை திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
தெரு நாயை திருமணம் செய்த 18 வயது பெண்
ஜார்கண்ட்டில் உள்ள மங்கலி என்னும் 18 வயது பெண்ணிற்கு, ஒரு தெரு நாயுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். அந்த தெரு நாயின் பெயர் ஷெரு ஆகும். இந்த நாயை காரில் மண்டபத்திற்கு அழைத்து வந்தனர், அப்பெண்ணின் உறவினர்கள். இந்த பெண்ணின் திருமணத்திற்கு சுமார் 70 பேர் கலந்து கொண்டதோடு, மேள தாளங்களுடன், இந்த திருமணத்தை கோலாகலமாக நடத்தினர்.
திருமணத்திற்கான காரணம்
இந்த பெண்ணிற்கு இப்படி திருமணம் செய்து வைப்பதற்கு என்ன காரணம் என்று உள்ளூரில் உள்ள குருக்களைக் கேட்டதற்கு, மங்கலி துரதிர்ஷ்ட பெண்ணாக இருப்பதோடு, அது அவளது முழு குடும்பத்தையும், சமூகத்தையும் அழிவிற்குள்ளாக்கும் என பெற்றோர்கள் நினைத்தனர். இதிலிருந்து விடுபட ஒரு ஆணுடன் திருமணம் செய்வதற்கு முன், நாயுடன் திருமணம் செய்து வைத்ததாக கூறினர்.
மங்கலியின் கூற்று
இந்த திருமணத்திற்காக மங்கலி தனது பள்ளி படிப்பை நிறுத்தியதாகவும், நாயுடன் திருமணம் செய்து வைத்தது தனக்கு சந்தோஷத்தை வழங்கவில்லை என்றும், இந்த சடங்கை நிறைய பெண்கள் செய்ததால், தற்போது அவர்கள் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வதாக தனது கிராமத்தில் உள்ளவர்கள் கூறியதால் செய்து கொண்டதாகவும் மங்கலி கூறினாள்.
33 வயது செல்வ குமார்
2007 ஆம் ஆண்டு, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதுடைய செல்வ குமார் என்பவர் ஒரு பெண் நாயை திருமணம் செய்து கொண்டார். சிறு வயதில் இவர் இரண்டு நாய்கள் உறவில் ஈடுபடும் போது கல்லால் அடித்ததில், இரு நாய்களும் இறந்துவிட்டதால், அந்த நாயின் சாபத்தால், அவருக்கு பக்கவாதம் வந்து கைகளை அசைக்க முடியாமல் போனது. இந்த சாபத்தில் இருந்து விடுபட, ஒரு பெண் நாயை திருமணம் செய்துள்ளாராம்.
9 வயது சிறுமி
9 வயதுடைய சிறுமிக்கு, முதன் முதலில் மேல் தாடையில் பல் முளைத்தது. அதை அச்சிறுமியின் குடும்பத்தினர் துரதிர்ஷ்டமாக கருதி, அதிலிருந்து விடுபட ஒரு நாயுடன் திருமணம் செய்து வைத்தனராம்.
சுடனீஸ் மனிதன்
2006 ஆம் ஆண்டு சுடனீஸ் மனிதன் ஒருவன், ஒரு ஆட்டை திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்ததோடு, அந்த ஆட்டின் உரிமையாளருக்கு 75 டாலர் வரதட்சணையாக கொடுத்துள்ளான். பின் அந்த ஆட்டுடன் உடலுறவு கொள்ளவும் முயற்சித்துள்ளான். என்ன ஒரு கேவலம்....