Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
சாயக்கழிவு நீரை உரமாக பயன்படுத்தலாம் தெரியுமா!
கேரளாவைச் சேர்ந்த நபர் இயற்கையான முறையில் ஆடையை தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறார். அதனைப் பற்றிய சிறு குறிப்பு
இன்றைக்கு இயற்கை மீதான மதிப்பு பலருக்கும் அதிகரித்து வருகிறது. ஆர்கானிக் பொருட்கள் மீது தனி ஈடுபாடே வந்திருக்கிறது. அதன்படி உணப்பொருட்களைத் தாண்டி நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களில் ஆர்கானிக் என்ற சொல் அடிப்பட்டால் உடனடியாக வாங்கிடும் பழக்கம் நம்மிடையே அதிகமிருக்கிறது.
அந்த வகையில் இப்போது சந்தையில் களம்மிறங்கியிருக்கும் பொருள் இயற்கை ஆடை!

இந்தியாவில் சிந்தடிக் :
ஆரம்ப காலத்தில் இந்தியர்கள் உடையாக பயன்படுத்தியவற்றால் எந்த தீங்கும் விளையாது. 1856 ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் சிந்தடிக் மற்றும் டாக்ஸிக் வேதிப்பொருட்களால் ஆன ஆடைகளை பயன்படுத்த துவங்கினர்.

வேலையை உதறிய இயற்கை ஆர்வலர் :
பாரம்பர்யம் மீது இருந்த ஆர்வத்தினால் பன்னாட்டு நிறுவனத்தில் தான் பார்த்த வேலையை விட்டுவிட்டு முழுமையாக ஆயுர்வேத ஆடை ஆராய்ச்சியில் இறங்கினார் கேரளாவைச் சேர்ந்த சுஜித். இவரும் இயற்கை ஆர்வலரான குமாரும் இணைந்து இயற்கையான முறையில் ஆயுர்வேத ஆடைகளை தயாரித்து வருகின்றனர்.

தயாரிப்பு முறை :
இந்த இயற்கை ஆயுர்வேத உடைகள் துளசி,மஞ்சள்,கடுக்காய்,செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய்,வெங்காயத் தாழ், மாதுளை, மாட்டுக் கோமயம், பூந்திக்கொட்டை ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. காய்கறிகள், இலை, தழைகள், மரப்பட்டைகள், பழங்களில் இருந்து வண்ணம் எடுக்கிறார்கள்.

கழிவு நீர் உரம்! :
இவ்வகை ஆடைகள் உடலுக்குக் குளிர்ச்சி தருகின்றன. மனதிற்கும் இதமாக இருக்கும் தவிர, சரும நோய்களுக்கு மருந்தாகவும் இருக்கும்.
முக்கியமாக இந்த ஆடைகளால் எவ்வித சுற்றுச்சூழல் பாதிப்புகளும் இல்லை. தயாரிக்கும்போது வெளியாகும் கழிவுகள் மற்றும் தண்ணீரை விவசாயத்திற்கு உரமாகப் பயன்படுத்துகிறார்கள்.



Click it and Unblock the Notifications











