For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'சரவணா ஸ்டோர்ஸ்' சரவணன் அருள் பற்றி பலரும் அறியாத சில உண்மைகள்!

இங்கு சரவணா ஸ்டோர்ஸ் செல்வரத்தினம் அவரது ஆரம்பகால உழைப்பு மற்றும் சரவணன் அருள் பற்றி பலரும் அறியாத சில உண்மைகள் கூறப்பட்டுள்ளன.

|

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சரவணா நாடார் என்பவருக்கு பிறந்த மூன்று மகன்களில் ஒருவர் தான் செல்வரத்தினம். இவரது சகோதரர்கள் யோகரத்தினம் மற்றும் ராஜரத்தினம்.

இந்த மூவரில் இளையவரான செல்வரத்தினம் அவர்கள் தான் முதன் முதலில் சென்னை வந்தவர். சென்னை வந்து தனது அயராத உழைப்பால் வியாபாரத்தில் வெற்றிப்பெற்று, தனது சகோதரர்களையும் உடன் சேர்த்துக் கொண்டார் செல்வரத்தினம் அவர்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காபி விற்றார்...

காபி விற்றார்...

சென்னை சென்ற புதிதில் செல்வரத்தினம் அவர்கள் செய்த தொழில், தெரு தெருவாக சென்று காபி விற்றது. நாள்பட தனது அயராத உழைப்பால் சிறிய கடை ஒன்றை துவங்கி மெல்ல, மெல்ல தொழில் வெற்றி கண்டார் செல்வரத்தினம் அவர்கள்.

சகோதரர்கள்...

சகோதரர்கள்...

தான் வியாபாரத்தில் உயர்ந்தவுடன் அவர் செய்து முதல் காரியம் தனது சகோதரர்களை குடும்பத்துடன் சென்னைக்கு அழைத்து வந்து தன்னுடன் சேர்த்துக் கொண்டது.

MOST READ: இதுவரை வெளிவராத டெலிவரி அக்கிரமங்கள் கர்ப்பிணிப் பெண்ணின் பகீர் வாக்குமூலம்!!!

சாம்ராஜ்ஜியம்!

சாம்ராஜ்ஜியம்!

சரவணா ஸ்டோர்ஸ் என்ற பெயரில் கிளைகள் பல வளர்ந்தன. தன்கள் கால் வைத்த துணிக்கடை, நகைக்கடை, எலக்ட்ரானிக்ஸ் என எல்லா தொழிலும் வெற்றிக் கண்டனர் ரத்தினம் சகோதரர்கள்.

இறப்பு!

இறப்பு!

பக்கவாதம் காரணத்தால் செல்வரத்தினம் அவர்கள் மரணமடைந்தார். இவர் இறந்த பிறகு, பிள்ளைகளுக்குள் பிரிவு வந்தது. யோகரத்தினம் மற்றும் ராஜரத்தினம் அவர்களுடைய பிள்ளைகள் நடத்துவது தான் சரவணா ஸ்டோர்ஸ்.

சரவணன் அருள்!

சரவணன் அருள்!

செல்வரத்தினம் அவருடைய மகன் சரவணன் அருள் தனது தங்கை கணவருடன் இணைந்து நடத்தி வரும் கடைகள் சரவணா செல்வரத்தினம் ஆகும். இதை இவர் நாடு முழுக்க பல முன்னணி நகரங்களில் கிளைகள் பரப்பி பெரிதாக்க பெரும் முயற்சி செய்து வருகிறார். அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

நடிப்பு!

நடிப்பு!

இவர் தனது கடைக்கு தானே விளம்பரத்தில் நடிப்பது பற்றி பல கருத்துகள் எழுந்து வருகின்றனர். முதலில் தமன்னா, ஹன்சிகாவுடன் நடித்ததற்கு பலரும் இவரை கேலி, கிண்டல் செய்தனர். இப்போது இவர் குழந்தைகளுடன் சம்மர் ஆஃபர் விளம்பரத்தில் நடித்துள்ளார்.

குடும்பம்!

குடும்பம்!

இவருக்கு திருமணாகி இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இருவருக்கு திருமணமும் முடிந்துவிட்டது.

MOST READ: விண்வெளியில் மாதவிடாய் வந்தால் விண்வெளி வீராங்கனைகள் என்ன செய்வாரகள் தெரியுமா?

முருகன்!

முருகன்!

சமீபத்தில் தான் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க வேல் ஒன்றை காணிக்கை செலுத்தி வந்தார் சரவணன் அருள்.

நயன்தார புரளி!

நயன்தார புரளி!

இதற்கு இடையே யாரோ, நயன்தாராவுடன் சரவணன் அருள் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என கொளுத்திப் போட, அந்த புரளி காட்டுதீ போல பரவியது. ஆனால், அப்படி ஒரு எண்ணம் தனக்கு இல்லை என சரவணன் அருள் அவர்கள் பதில் அளித்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Facts To Know About Saravanan Arul!

Facts To Know About Saravanan Arul!
Desktop Bottom Promotion