Latest Updates
-
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
சத்தான எள்ளுப்பொடி சாதம் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - உடம்பு இரும்பு மாதிரி மாறிடும்
Ellu Podi Sadam Recipe in Tamil: பெரும்பாலும் பெற்றோர்களின் கவலையாக இருப்பது அவர்களில் குழந்தைகள் வயதிற்கு ஏற்ற எடை இல்லாமல் குறைவாக இருப்பது தான். இதனால் குழந்தையின் வளர்ச்சி தடைபடுமோ என கவலைப்படுகிறார்கள். அதிலும் பள்ளி செல்லும் குழந்தைகள் என்ன தான் செய்து கொடுத்தாலும் சரியாக சாப்பிடுவதில்லை என அம்மாக்கள் கவலை கொள்கிறார்கள்.

உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்க பல வழிகள் இருக்கின்றன. அதிலும் "கொழுத்தவனுக்கு கொள்ளு, இளைச்சவனுக்கு எள்ளு" என்னும் பழமொழிக்கு ஏற்ப எள்ளை வைத்து ஆரோக்கியமாக உடல் எடையை அதிகரிப்பதற்கான உணவு வகைகளில் ஒன்றுதான் எள்ளுப்பொடி சாதம். இந்த எள்ளுப்பொடி சாதம் ஆரோக்கியமானது மட்டுமல்ல சுவையானதும் கூட.
உங்களுக்கு சத்தான எள்ளுப்பொடி சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சத்தான எள்ளுப்பொடி சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- எள்ளு - ¼ கப்
- உளுந்தம் பருப்பு - ¼ கப்
- கடலை பருப்பு - ¼ கப்
- வர மிளகாய் - 5
- அரிசி - 1 கப்
- உப்பு - தேவையான அளவு
- கருவேப்பிலை - 2 கொத்து
தாளிக்க தேவையான பொருட்கள்:
- நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- கடுகு - ¼ டீ ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- கடலை பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
- கருவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
- எள்ளை சுத்தமாக ஓடும் தண்ணீரில் கழுவி உலர வைக்கவும்.
- அரிசியை இரண்டு மூன்று முறை தண்ணீர் சேர்த்து அலசி சிறிதளவு உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் உளுந்தம் பருப்பை சேர்த்து கருகி விடாமல் பொன்னிறமாக வறுக்கவும்.
- அதே வாணலியில் கடலை பருப்பு மற்றும் வர மிளகாய் சேர்த்து நன்கு சிவக்கும் படி வறுத்து ஆறவிடவும்.
- மீண்டும் அதே வாணலியில் கழுவி உலர வைத்த எள்ளை சேர்த்து ஈரப்பதம் நீக்கி வெடிக்க துவங்கியதும் மிதமான தீயில் வறுத்து ஆற விடவும்.
- கடைசியாக அதே வாணலியில் கருவேப்பிலை சேர்த்து கைகைளில் நொறுங்க கூடிய பதத்திற்கு வறுத்து ஆறவைக்கவும்.
- ஈரப்பதம் இல்லாத மிக்ஸி ஜாரில் வறுத்து ஆற வைத்த பொருட்கள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பொடியாக அரைத்து கொள்ளவும்.
- வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கி உடைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் நல்லெண்ணெய் சேர்த்து காய விடவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விட்டு கடலைப்பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்க்கவும்.
- அதனுடன் உடைத்து வைத்த வேர்க்கடலை சேர்த்து நன்கு சிவந்ததும் கருவேப்பிலை சேர்த்து கிளறவும்.
- அதில் தேவையான அளவு அரைத்து வைத்து பொடி சேர்த்து 2 நிமிடம் கிளறி விடவும்.
- கடைசியாக அதில் வேக வைத்து எடுத்து வைத்த சாதம் சேர்த்து கிளறினால் சுவையான எள்ளு பொடி சாதம் தயார்.



Click it and Unblock the Notifications