Latest Updates
-
சூரியனின் இரட்டை கிரக பெயர்ச்சியால் ராஜயோகத்தை அடையப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும்
கர்ப்பிணிப்பெண்ணுக்கு போலீஸ் கொடுத்த இன்ப அதிர்ச்சி!
போலீஸ் அதிகரியான கணவர் வேலையின் போது இறந்துவிட அவரது கர்ப்பிணி மனைவிக்கு மெட்டர்னிட்டி போட்டோஷூட் நடத்தப்பட்டது. அது வைரலாய் பரவியது.
நம்முடைய நினைவுகளை சிறைபடுத்தி வைக்கும் ஆற்றல் புகைப்படங்களுக்கு உண்டு. வாழ்க்கையில் நடக்கும் இனிமையான தருணங்களை, மறக்க விரும்பாத தருணங்களை எல்லாம் புகைப்படமாக எடுத்து வைத்துக் கொள்வோம்.
இன்றைக்கு போட்டோ ஷூட் எடுப்பது என்பது மிகவும் சகஜமாகிவிட்டது. அப்படி சமீபத்தில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் ஒன்று வைரலாய் பரவியதோடு பலரையும் உணர்சிவசப்பட்டு கண்ணீர் சிந்த வைத்திருக்கிறது.

கருவில் குழந்தை :
அமெரிக்காவின் க்ரீன்வைலைச் சார்ந்த போலீஸ் ஆஃபிசர் ஆலன் ஜேக்கப் மனைவியுடன் காலையில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்கச் சென்றிருக்கிறார்.
கருவில் வளரும் தன்னுடைய குழந்தையை பார்த்த பரவசத்துடன் வேலைக்குச் செல்ல மனைவி மட்டும் வீட்டிற்கு திரும்பியிருக்கிறார்.

காத்திருந்த சேதி :
சிறிது நேரத்தில் ஆலனின் மனைவி மெஹனுக்கு ஒரு போன் கால் வருகிறது. அதில், உடனடியாக மருத்துவமனைக்கு வருமாறு சொல்லப்படுகிறது.
இவரும் பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓட அங்கே கணவர் இறந்துவிட்டார் என்ற தகவல் மட்டுமே இவருக்காக காத்திருக்கிறது.

போட்டோ ஷூட் :
சில மாதங்கள் கழித்து நிறைமாத கர்பிணியாக இருந்த மெஹன் தன்னுடைய கணவருக்கு, பணியின் போதே உயிர் நீத்த வீரரை கௌரவப்படுத்தும் விதமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்.
மெஹனுடைய தோழி ஜெஸ்ஸீ அலெக்ஸ் என்பவர் மெட்டர்னட்டி போட்டோ ஷூட் எடுக்க விரும்புகிறார். சுமார் ஆறு மணி நேரங்கள் 600 படங்கள் எடுத்த அந்த போட்டோஷூட் தான் நம் மனதை கனக்கச் செய்திருக்கிறது.

மெஹனுடன் போலீஸ் :
அந்த போட்டோஷூட்டிற்கு மெஹனின் கணவர் ஆலனுடன் பணியாற்றிய அனைத்து போலீசாரும் வரவழைக்கப்பட்டனர். அந்த போலீஸ் அதிகாரிகள், அவர்களுக்கு துணைபுரிந்த போலீஸ் நாய் எல்லாரும் போஸ் கொடுத்திருந்தனர்.
ஆலன் பயன்படுத்திய பேட்ரோல் கார்,பேட்ஜ்,யூனிஃபார்ம் உட்பட எல்லாமே போட்டோஷூட்டில் வைக்கப்பட்டிருந்தது.

நினைவுகள் :
மெஹரின் குழந்தைகளுக்கு தந்தையின் நினைவை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக வந்திருந்த அதிகாரிகளை ஆலென் குறித்த நினைவுகளை கடிதம் எழுதித்தருமாறு கேட்டிருக்கிறார்.
அவர்களும் ஆலனுடனான அவர்களது நினைவுகளை பகிர்ந்திருக்கிறார்கள்.
Image Source -j.ellex.photography



Click it and Unblock the Notifications











