Latest Updates
-
Tamil New Year 2026 Rasi Palan: தமிழ் புத்தாண்டில் குபேர ராஜயோகம் - திடீர் ஜாக்பாட் யாருக்கு தெரியுமா? -
30 ஆண்டுக்கு பின் சனிபகவான்-புதன் மீன ராசியில் இணைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
அட்டகாசமான கொத்தமல்லி மாங்காய் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
முகம் எப்பவும் எண்ணெய் வழிந்து அசிங்கமாக இருக்கா? அப்ப இந்த நேச்சுரல் கிளென்சரை யூஸ் பண்ணுங்க! -
Tamil Nadu Election 2026: தமிழ்நாட்டிலேயே எந்த தொகுதியில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் தெரியுமா? -
கோடைகாலத்தில் எடையை புயல் வேகத்தில் குறைக்க உதவும் சிறந்த 10 உணவுகள் -
வீட்டில் எப்பவும் செல்வமும், மகிழ்ச்சியும் நிலைத்திருக்கணுமா? அப்ப இந்த பொருட்களை வாங்கி வையுங்க! -
தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப டாக்டர் ஸ்வேதா சொல்ற இந்த விதைகளை தினமும் 1 ஸ்பூன் சாப்பிடுங்க! -
தமிழ்நாட்டில் இந்த கிராமத்திற்கு செல்ல யாருக்கும் அனுமதி இல்லையாம் - இங்க அப்படி என்ன இருக்கு தெரியுமா? -
ஆந்திரா ஸ்டைல் சுட்ட பச்சை மாங்காய் ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க!
ருத்ராட்சையின் வகைகளும்... அதன் சிறப்புக்களும்...
ருத்ராட்சை மணிகள் மிகவும் தெய்வீக சக்தியைக் கொண்டது. சிவபெருமானின் கண்ணீரில் இருந்து உருவானது தான் ருத்ராட்சை மரம் என்று நம்பப்படுகிறது. இதனை அணிவதாக இருந்தால் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். அது மனதளவிலும் சரி, உடலளவிலும் சரி. பலருக்கும் ருத்ராட்சையைப் பற்றி முழுமையாகத் தெரியாது.
சிவபெருமானின் நெற்றிக்கண் உருவானது பற்றிய சில கதைகள்!!!
உண்மையான ருத்ராட்சையை அணிந்தால் தான், அதன் முழு பலனையும் பெற முடியும். ஆனால் தற்போது போலி ருத்ராட்சைகள் விற்கப்படுகிறது. எனவே நீங்கள் வாங்கிய ருத்ராட்சை உண்மையானதா என்பதைக் கண்டறிய சில ஆய்வுகள் உள்ளது. அவை நீரில் போட்டால் மூழ்கும், கல்லில் உரசினால் தங்க நிற கோடுகள் தெரியும், செம்பு நாணயங்களுக்கு நடுவே வைத்தால், மின் சுழற்சியின் காரணமாக ருத்ராட்சை சுழலும்.
பலரும் அறிந்திராத சிவபெருமானின் 19 அவதாரங்கள்!!!
ஒருவர் ருத்ராட்சையை அணிந்தால், அவரைச் சுற்றி ஓர் காந்த மண்டலம் உருவாக்கப்பட்டு, அவரின் மனதில் நேர்மறை எண்ணங்களை அதிகரித்து, உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, உடல் நலத்தையே மேம்படுத்தும். இத்தகைய ருத்ராட்சையில் 21 முகங்கள் வரை உள்ளது. ஆனால் நடைமுறையில் 12 அல்லது 14 முகங்கள் வரை தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது ருத்ராட்சையின் வகைகளும், அதன் சிறப்புக்களையும் காண்போம்.

ஒரு முக ருத்ராட்சை
ஒரு முகம் கொண்ட ருத்ராட்சை மிகவும் சக்தி வாய்ந்தது. இதனை அணிந்தால் மனநிலையை சிறப்பாக வைத்துக் கொள்ள உதவும். முக்கியமாக இதனை அணிபவரின் மன ஆற்றல் மேம்படும். அதுமட்டுமல்லாமல், இது தலைவலியைக் போக்கி, இதயம் மற்றம் வலது கண் போன்றவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

இரண்டு முக ருத்ராட்சை
இந்த வகை ருத்ராட்சை அணிந்தால், அனைவருடனும் ஒற்றுமை உணர்வுடன் இருக்க வேண்டுமென்ற எண்ணம் மேம்படும். மேலும் இது இடது கண், மூளை, சிறுநீரகம் மற்றும் பெருங்குடல் போன்றவற்றிற்கு நல்லது.

மூன்று முக ருத்ராட்சை
இந்த வகை ருத்ராட்சை, சுத்தத்தின் அடையாளம் மற்றும் இது ஒருவரின் மனதில் உள்ள தாழ்வு மனப்பான்மை, பயம் மற்றும் மன இறுக்கம் போன்றவற்றில் இருந்து வெளிவர உதவும்.

நான்கு முக ருத்ராட்சை
நான்கு முக ருத்ராட்சை படைப்புத்திறனை அதிகரிக்கும். எனவே இந்த வகை ருத்ராட்சை மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் போன்றோர் அணிவது நல்லது. இதனால் அவர்களின் ஞாபக சக்தி மற்றும் புலனாய்வுத் திறன் அதிகரிக்கும்.

ஐந்து முக ருத்ராட்சை
இந்த வகை ருத்ராட்சை மங்களம் மற்றும் அமைதியின் சின்னமாக உள்ளது. மேலும் ஒருவர் உடல்நலத்துடன் இருக்க வேண்டுமெனில், இந்த வகை ருத்ராட்சை அணிவது நல்லது.

ஆறு முக ருத்ராட்சை
இந்த வகை ருத்ராட்சை கற்றல், ஞானம் மற்றும் அறிவு அதிகரிக்க உதவும்.

ஏழு முக ருத்ராட்சை
நுரையீரல் சம்பந்தமான பல கோளாறுகள் குணமாகவும், வறுமைத்துயர் நீங்கி வளமான வாழ்வை ஒருவர் பெறவும் இந்த ருத்ராட்சை உதவும்.

எட்டு முக ருத்ராட்சை
எட்டு முகம் கொண்ட ருத்ராட்சை வெற்றியின் அடையாளம். எனவே எதிலும் வெற்றி அடைய நினைப்பவர்கள், எட்டு முக ருத்ராட்சையை அணியலாம்.

ஒன்பது முக ருத்ராட்சை
இந்த வகை ருத்ராட்சை ஒருவரின் தைரியம் மற்றும் ஆற்றலை அதிகரிக்கும்.

பத்து முக ருத்ராட்சை
பத்து முக ருத்ராட்சையை அணிந்தால், எதிர்மறை ஆற்றல் நெருங்குவதைத் தடுக்கலாம்.

பதினொன்று முக ருத்ராட்சை
இது ஒருவரின் ஞானம் மற்றும் வெற்றியை அதிகரிப்பதோடு, விபத்து நேராமல் பாதுகாக்கும்.

பன்னிரெண்டு முக ருத்ராட்சை
இந்த வகை ருத்ராட்சையை அரசு வேலைவாய்ப்பை எதிர்நோக்குபவர்கள், பணியில் உயர்வு பெற விரும்புவோர், ஆன்மீக பலம் வேண்டுவோர் அணிவது நல்லது.



Click it and Unblock the Notifications











