Latest Updates
-
குரு-செவ்வாயின் அரிய சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 13 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நினைத்தது பலிக்கும் நாளாக இருக்குமாம் -
ஜூன் 17-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சுக்கிரன் சிம்ம ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
இனிமே டீ குடிக்கும் போது இந்த 5 உணவுகளை தெரியாம கூட சாப்பிடாதீங்க - இல்லனா உங்களுக்குத்தான் ஆபத்து -
இதுல உங்க கை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க உண்மையான குணத்தை சொல்றோம்.. -
அடுத்தமுறை தேங்காய் சட்னியை இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
1 கப் மீல் மேக்கர் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்களை காதலிக்க எல்லோரும் ஆசைப்படுவார்களாம் - நீங்க பிறந்த மாதம் இதுல இருக்கா?
கடற்பயணி கொலம்பஸ் பற்றி யாவரும் அறிந்திராத அரிய விஷயங்கள்!!
இத்தாலிய நாட்டின் கடற்பயணியும், பல நாடுகளை கண்டுபிடித்தவருமான கொலம்பஸ் ஓர் வணிகரும் காலனித்துவவாதியும் ஆவார். இவர் 1492-இல் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை (எசுப்பானியா நாட்டுக் கொடியுடன்) வந்தடைந்த முதல் ஐரோப்பியர் என்ற பெருமையை பெற்றார். இவர் இத்தாலியின் செனோவா என்ற குடியரசைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது.
எசுப்பானியப் பேரரசின் கத்தோலிக்க பேரரசர்களின் ஆட்சியின் போது கொலம்பஸ் நான்கு முறைகள் கடற்பயணங்களை அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து மேற்கொண்டார். இந்தக் கடற்பயணங்களும் லா எசுப்பானியோலா தீவில் இவர் நிரந்தரக் குடியேற்றம் அமைக்க மேற்கொண்ட முயற்சிகளும் புதிய உலகம் என அழைக்கப்பட்ட அமெரிக்காவில் எசுப்பானிய குடியேற்றத்தைத் துவக்க உதவின என கூறப்படுகிறது.
புதிய வணிக வழிகளைக் கண்டறிந்து குடியேற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற மேற்கத்திய பேரரசின் போக்கிற்கும் மற்றும் ஐரோப்பிய இராச்சியங்களுக்கிடையேயான பொருளாதார நிலை போட்டியில் கிழக்கத்திய இந்தியாவை எட்ட கொலம்பஸ் மேற்கில் பயணித்து உலகைச் சுற்றி வந்து, இந்தியாவை அடைய முன்மொழிந்தார். இதற்கு எசுப்பானிய அரசரின் ஆதரவைப் பெற்ற கொலம்பஸ் 1492ஆம் ஆண்டு மேற்கில் பயணித்து புதிய உலகத்தை கண்டறிந்தார் என்பது உலக வரலாறு.....
இனி, கிறிஸ்டோபர் கொலம்பஸ் கண்டறிந்து கூறிய அரிய விஷயங்கள் குறித்து காணலாம்.....

உலகம் உருண்டை என கண்டுபிடித்தவர் கொலம்பஸ் இல்லை
உலகம் உருண்டை என கொலம்பஸ் கண்டறியும் முன்னரே ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்து கிரேக்க கணித மேதை பிதாகரஸ் கூறிவிட்டார்.

பெயரிலேயே குழப்பம்
கொலம்பஸின் உண்மையான பெயர் இதுவல்ல. ஆங்கிலத்தில் தான் இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டு கூறப்பட்டு வருகிறது உண்மையில் இவரது பெயர் கோலோன் (Cristóbal Colón) என்று கூறப்படுகிறது.

பைத்தியக்காரன் என்று கூறப்பட கொலம்பஸ்
உலகம் தட்டையானது என்று நம்பப்பட்டு வந்த 15நூற்றாண்டில் கொலம்பஸ் உலகம் உருண்டையானது என்று கூறிய போது, இவரை மக்கள் பைத்தியம் என்று கூறி ஏளனம் செய்துள்ளனர்.

கடுமையான கேப்டன்
கொலம்பஸ் மிகவும் கடுமையான கேப்டன், தனக்கு கீழ் பணிபுரியும் குழுக்களையும், பணியாட்களையும் மிகவும் கடுமையான முறையில் நடத்தினாராம்.

ஆன்மீக நம்பிக்கை கொண்டவர்
கிறிஸ்துவத்தில் நிறைய ஈடுபாடும் ஆன்மீக நம்பிக்கையும் கொண்டிருந்தவர் கொலம்பஸ். இவர் கண்டறிந்த புதிய நாடுகளில் அறியாமையில் இருந்த மக்களுக்கு கிறிஸ்துவ ஆன்மீகத்தை பற்றி பரப்பினார்.

நிறைய சர்ச் கட்டியுள்ளார்
கிறிஸ்துவ ஆன்மிகம் பற்றி நிறைய பரப்பிய கொலம்பஸ். நிறைய சர்ச்சுகளும் கட்டியுள்ளார். மற்றும் குடியேற்றம் ஆன மக்களுக்கிடையே ஆன்மீகத்தை பற்றி கூறி, நிறைய நன்மைகளும் செய்துள்ளார் கொலம்பஸ்.

கொடூரமான மிருகம்
புதிய உலகம் என இவர் கண்டறிந்த அமெரிக்க பகுதியில் இவரது ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. அங்கே வாழ்ந்து வந்த குடிமக்களை இவர் நிறைய துன்புறுத்தியதாகவும். அவர்கள் முன் ஓர் கொடூருமான மிருகம் போன்று நடந்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

கொடுமைகள்
சித்திரவதை, கொடுமைகள், கொலை, அடிமைத்தனம் என பல கொடுமைகளுக்கு அவர்கள் ஆளாக்கப்பட்டதாக வரலாற்று கூற்றுகள் கூறுகின்றன.

செல்வந்தராக இறந்த கொலம்பஸ்
சிறைக்கு போய் திரும்பிய போதிலும் கூட, தனது நாடான ஸ்பெயினில் இறந்த போது பெரும் செல்வந்தராக தான் இருந்தாராம் கொலம்பஸ்.



Click it and Unblock the Notifications