நீச்சல் குளத்தில் பெண்களின் ஆடைகளை அவிழ்த்து, வன்கொடுமை - வியட்நாமில் துணிகரம்!!!

By John

வியட்நாம் சுற்றுலாவிற்கும், எழில் கொஞ்சும் இயற்கைக்கும் பெயர்போன இடம். இங்கு இயற்கையோடு கொஞ்சி விளையாடவே, உலகமெங்கிலும் இருந்து நிறைய சுற்றுலா பயணிகள் வருவதுண்டு. மற்றும் இவர்களுக்காகவே நிறைய கேளிக்கை இடங்களும் தொடங்கப்பட்டன.

உயரத்தில் இருந்து நிர்வாணமாக குதித்து விளையாடிய பெண் - கேளிக்கை நிறுவனத்திற்கு அபராதம்!!

வியட்நாமின் ஹனோய் பகுதியில் இருக்கிறது "ஹோ-டே" - Ho Tay எனும் பிரபலமான நீச்சல் விளையாட்டு இடம். ஹோ-டே-வின் ஓர் வித்தியாசாமான வர்த்தக உக்தி தான், அதன் பெயரை நாசம் செய்துவிட்டது. இவர்களது புதிய வர்த்தக உக்தியின் காரணத்தினால், அங்கு விளையாட வந்த பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்...

பெண்கள் மேலாடையின்றி "கோக்" பானத்துடன் மகா மட்டமான மார்பக புற்றுநோய் பிரச்சாரம்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹோ-டே-வின் வர்த்தக உக்தி

ஹோ-டே-வின் வர்த்தக உக்தி

"ஓபன் சீசன் ட்ரீட்" என்ற பெயரில், காலை 8:00 முதல் 10:00 மணி வரை பொது மக்களுக்கு இலவசமாக அனுமதி அளித்தது ஹோ-டே-வின் மேலாண்மை. இதன் காரனத்தால் கூட்டம் கரைபுரண்டோடியது.

கட்டுப்படுத்த முடியாத கூட்டம்

கட்டுப்படுத்த முடியாத கூட்டம்

ஒரு அளவுக்கு மேல் ஹோ-டே நீச்சல் விளையாட்டு திடல் முழுதும் நிறைந்த பிறகு, கதவுகள் மூடப்பட்டன. அதையும் தாண்டி எகிறி குதித்து அருகாமையில் இருந்து ஆண்கள் கூட்டம் உள்ளே புகுந்துள்ளது. இவர்கள் தான் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உடை மாற்றும் அறைகள் இல்லை

உடை மாற்றும் அறைகள் இல்லை

இவ்வளவு கூட்டத்தை எதிர்பாராத "ஹோ-டே" ஊழியர்கள் அதற்கேற்ற பெண்களுக்கான பாதுகாப்பு அறை, உடை மாற்றும் அறைகள் ஏற்பாடு செய்யவில்லை. இது பெண்களை மிகவும் அவதிக்குள்ளாக்கியது.

ஆடைகள் அவிழ்க்கப்பட்டன

ஆடைகள் அவிழ்க்கப்பட்டன

நீச்சல் குளத்தில் விளையாடிக்கொண்டிருந்த பெண்களை, சுற்றி வளைத்த ஆண்கள் கூட்டம் அவர்களது உள்ளாடைகளை அவிழ்த்து கொடுமை செய்துள்ளனர். குறிப்பிட்டு தனியே அல்லது ஓரிருவராக விளையாடிக் கொண்டிருந்த பெண்களை ஓர் ககும்பலாக சென்று சுற்றி வளைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தியுள்ளனர்.

காப்பாற்ற ஆளில்லை

காப்பாற்ற ஆளில்லை

கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்ததால், காப்பாற்ற மிகவும் கடினமாக இருந்துள்ளது. மற்றும் எல்லை மீறி வந்த ஆண்கள் கூட்டம், பெண்களை தண்ணீருக்குள் முக்கி, அவர்களுது அந்தரங்க பகுதிகளில் கீறல்கள் ஏற்படும் வகையில் துன்புறுத்தியுள்ளனர்.

கூச்சலிட்டும் பயனில்லை

கூச்சலிட்டும் பயனில்லை

அளவுக்கதிகமான கூட்டம் மற்றும் இரைச்சல் சத்தத்தினால், யார் எதற்காக சத்தமிடுகிறார்கள் என அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்கள் தங்களை காப்பாற்ற சொல்லி கூச்சலிட்டும் பயனற்று போனது. அருகாமையில் இருந்த பெண்களே, மற்ற பெண்களை காப்பாற்றி கரையேற்றி இருக்கிறார்கள்.

உடலெங்கும் கீறல்கள்

உடலெங்கும் கீறல்கள்

நீச்சல் குளத்திலிருந்து தப்பித்து ஓடி வந்த பல பெண்களின் உடலேங்கிலும் கீறல்கள் இருந்ததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பெரும்பாலும் பெண்களின் அந்தரங்க உடல் பாகங்களில் தான் கீறல் இருந்துள்ளன. சில பெண்களின் பெண்ணுறுப்புகளில் தீண்ட கூடாத வகையில் அவர்களை சித்திரவதை செய்துள்ளனர்.

வன்கொடுமைக்கு ஆளான பெண்

வன்கொடுமைக்கு ஆளான பெண்

"நான் நீச்சல் குளத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென யாரோ என்னை நீச்சல் குளத்தில் முக்கினர், மூச்சு திணறல் ஏற்பட்டது, அவ்வேளையில் எனது ஆடைகளை அவர்கள் அவிழ்க்க தொடங்கினர், நீர் எனது மூக்கு மற்றும் தொண்டை பகுதிகளில் உள் செல்ல ஆரம்பத்தது. ஆகையால் நான் சுயநினைவை இழக்க நேரிட்டது. மீண்டும் நான் நீரில் இருந்து வெளியில் வந்த போது தான் அவர்கள் என் ஆடைகளை மொத்தமாய் அவிழ்த்ததே உணர முடிந்தது. இது உயிர் போகும் வழியை விட கொடுமையானது." என்று வன்கொடுமைக்கு ஆளான பெண்களில் ஒருவர் கூறியுள்ளார்.

வக்கிர புத்தி படைத்த ஆண்கள்

வக்கிர புத்தி படைத்த ஆண்கள்

இந்த நிகழ்வுகளை சில வக்கிர புத்தி படைத்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்தும், வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தும் மார்தட்டி வருகிறார்கள். இந்த ஈன செயலில் ஈடுபட்டதையும் கூட ஏதோ பெரும் சாதனை செய்ததை போல அவர்கள் கொண்டாடி வருவது, மனிதம் இறந்துவிட்டது என்பதை நினைவுப்படுத்துகிறது.

அரசு தண்டிக்குமா???

அரசு தண்டிக்குமா???

இது போன்ற பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது மட்டுமின்றி, அவற்றை நெட்டுகளில் பரப்பி வரும் இவர்களை அரசாங்கள் தண்டிக்குமா? என வியட்நாம் மக்கள் கேள்விகள் எளிப்பியுள்ளனர். உலகெங்கிலும், இது போன்ற பாலியல் ரீதியான வன்கொடுமைக்கு பெண்கள் ஆளாவது, மிகவும் வருத்தத்திற்குரிய விஷயமாக இருக்கிறது.

கடுமையான சட்டங்கள் தேவை

கடுமையான சட்டங்கள் தேவை

இது போன்ற பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பெண்களை காக்க, ஆண்கள் ஈடுபடுவதை தவிர்க்க கடுமையான சட்ட திருத்தங்கள் வர வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion