33000 சிற்பங்கள் முதல் 3 மார்பக அம்மன் சிலை வரை - மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்!

Madurai Meenakshi Amman Temple: ஆந்திர பிரதேசத்தின் துணை முதல்வரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான திரு. பவன் கல்யாண் அவர்கள் தனது சனாதன தர்ம பயணத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் உள்ள உலக புகழ்பெற்ற மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு பிராத்தனை செய்ய பிப்ரவரி 12 ஆம் தேதி வருகிறார்.

இவர் இந்தியாவில் சனாதன தர்மத்தை காப்பாற்றுவதற்கு எந்த எல்லைக்கும் செல்வதாகவும், இதற்காக நாட்டில் உள்ள இந்து கோவில்களுக்கு செல்வதாகவும் வெளிப்படையாக அறித்துள்ளார். அந்த வகையில் இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தருகிறார்.

Pawan Kalyan Visit To Madurai Temple Interesting Facts About Madurai Meenakshi Amman Temple

மதுரையில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலானது உலகளவில் புகழ்பெற்ற மிகவும் சிறப்புமிக்க கோவிலாகும். இந்த கோவிலை தென்னிந்திய தாஜ்மஹால் என்றும் அழைப்பர். இந்த கோவில் அதன் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் அதன் பிரமாண்டமான கட்டிடக்கலை ஆகிய இரண்டிலும் பிரமாண்டமானது. இந்தியாவில் உள்ள கோவில்களிலேயே அதிகமானோர் வருகை தரும் கோவில்களுள் இந்த மீனாட்சி அம்மன் கோவிலும் ஒன்றாகும்.

இதுவரை நீங்கள் இந்த கோவிலுக்கு சென்றதில்லை என்றால் வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று பார்வையிடுங்கள். நீங்கள் இந்த கோவிலுக்கு செல்லும் ஆர்வத்தில் இருந்தால், இந்த கோயில் பற்றி உங்களுக்கு தெரியாத சில சுவாரஸ்யமான உண்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. ஆயிரம் கால் மண்டபம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆயிரம் கால் மண்டபம் என்னும் ஆயிரம் தூண்களைக் கொண்ட மண்டபம் உள்ளது. இதன் சிறப்பு என்னவெனில், இந்த மண்டபம் ஒரே பாறையில் கட்டப்பட்டது . இந்த கோயிலின் தூண்களில் ஏராளமான பழங்கால ஓவியங்களைக் காணலாம். இது கோயிலின் மிகப்பெரிய மண்டபமாகும். இதில் சிவகாமி மற்றும் நடராஜரின் பிரமாண்டமான சிலைகள் உள்ளன.

2. கோபுரங்கள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 கோபுரங்கள் உள்ளன. அதில் 4 பெரிய கோபுரங்கள் 4 திசைகளிலும் வைக்கப்பட்டுள்ளன. அதே சமயம் சன்னதியின் நுழைவாயிலாக நான்கு உள் கோபுரங்கள் உள்ளன. இந்த கோபுரங்கள் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டு, ஒவ்வொரு 12 வருடங்களுக்கும் சுத்தம் செய்யப்பட்டு புனரமைக்கப்படுகின்றன.

3. தங்க தாமரை குளம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பொற்தாமரை குளம் அல்லது தங்க தாமரை குளம் உள்ளது. இந்த குளம் அந்த கோவிலில் சிறப்பு வாய்ந்ததாகவும் தனித்துவமானதாகவும் இருப்பதற்கு காரணம், அந்த குளத்தில் வளரும் தாமரை தங்க நிறத்தில் இருப்பதாகும்.

4. 33000 சிற்பங்கள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் மற்றொரு சுவாஸ்யமான அம்சம், இந்த கோவிலில் சுமார் 33,000 சிற்பங்கள் உள்ளன. அதுவும் வெள்ளி பலிபீடத்தின் மீது கட்டப்பட்டுள்ள நடராஜரின் பிரம்மாண்டமான சிற்பம் மிகவும் பிரபலமானது.

5. மீனாட்சி அம்மன் சிலை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் பிரதான தெய்வம் பார்வதி தேவியின் ஒரு அவதாரமான மீனாட்சி அம்மன் ஆகும். இந்த மீனாட்சி அம்மனின் சிலை மரகத கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இந்த அம்மன் சிலைக்கு 3 மார்பகங்கள் இருக்கும். ஏனெனில் மீனாட்சி அம்மன் மூன்று மார்பகங்களுடன் பிறந்ததாகவும், அவள் வாழ்க்கையில் சரியான மனிதனை சந்தித்தவுடன் மறைந்துவிடும் என்றும் நம்பப்படுகிறது. மீனாட்சி அம்மன் சிவபெருமானின் ஒரு வடிவமான சுந்தரேஸ்வரரை சந்தித்த போது மூன்றாவது மார்பகம் உண்மையில் மறைந்துவிட்டதாக புராணங்கள் கூறுகின்றன.

Desktop Bottom Promotion