Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கண் கவரும் நிகழ்ச்சிகளாக என்னென்ன நடக்கும்-ன்னு தெரியுமா?
Onam 2023: இந்தியாவின் தென்பகுதியில் உள்ள கேரளாவில் ஓணம் பண்டிகையானது மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பண்டிகைகளில் இதுவும் ஒன்று. இந்த கலாச்சாரத் திருவிழா நிறைய மத முக்கியத்துவத்தை தன்னுள் கொண்டுள்ளது.
ஓணம் என்பது குடும்பங்கள் ஒன்று கூடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், தெய்வங்களை வழிபடவும், ஆசி பெறவும், சுவையான விருந்துகளில் ஈடுபடவும், கலாச்சார நிகழ்ச்சிகளில் ஈடுபடவும், பூக்கோலம் எனப்படும் அழகிய மலர் அலங்காரங்களை உருவாக்குவது போன்ற பல விஷயங்களை இந்நன்னாளில் செய்து அவர்கள் வழிபடுவர்.

சரி, வாங்க ஓணத்தின் புராண தோற்றம் முதல் பிரமாண்டமான படகுப் போட்டிகள் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள் வரை பல கண் கவரும் நிகழ்ச்சித் தொகுப்புகளைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
ஓணத்தின் தோற்றம்
ஓணம் பண்டிகை என்பது இந்திய மாநிலமான கேரளாவில் முதன்மையாக கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய அறுவடை திருவிழா ஆகும். இந்த பண்டிகை நாளில் தனது குடிமக்களுக்கு வருகை தருவதாக நம்பப்படும் புகழ்பெற்ற மன்னர் மகாபலி வீடு திரும்புவதை குறிக்கிறது .
ஓணம் பண்டிகை எத்தனை நாட்கள் கொண்டாடப்படும்
இந்த ஓணம் திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த 10 நாட்களும் தனித்துவமான முக்கியத்துவமான சடங்குகள் செய்யப்படுகிறது. இந்த 10 நாட்களும் மக்கள் வீட்டில் வித விதமாக சமைத்து மற்றும் நிறைய விளையாட்டு போட்டிகள், படகு போட்டிகள் மற்றும் பூக்கோலம் போட்டு மகிழ்வர்.
மலர் அலங்காரங்கள்
ஓணத்தின் முக்கிய சிறப்புகளில் ஒன்று பூக்கோலம் ஆகும். நிறைய அழ அழகான வண்ணமயமான பூக்களைக் கொண்டு வாசலின் முன்பு கோலம் போட்டு அதில் விளக்கை ஏற்றி கோலத்தை சுற்றி நடனம் ஆடி பாட்டு பாடி மகிழ்வர்.
ஓணம் சத்யா
ஓணம் சத்யா என்பது பண்டிகையின் போது வழங்கப்படும் மிகப்பெரிய விருந்தை குறிக்கிறது. இதற்காக நிறைய உணவுகளை தயாரித்து நம் பாரம்பரிய முறைப்படி வாழை இலையில் பரிமாறி மகிழ்வர். தேங்காய் சோறு, கடலை கறி ரெசிபி, கேரள ஸ்பெஷல் காலன், கேரளா ஸ்பெஷல் ரசம், அரிசி பால் பாயசம், சாம்பார், அவியல், ஓலன், புலி இஞ்சி, பருப்புக் கறி, சர்காரா வரட்டி போன்ற பல உணவு வகைகள் இதில் இடம் பெறும்.
வல்லம்களி - பாம்பு படகுப் போட்டி
ஓணம் கொண்டாட்டத்தின் ஒரு முக்கியமான போட்டி என்றால் அது வல்லம்களி அதாவது பாம்பு படகுப் போட்டியாகும். நிறைய பேர்கள் சேர்ந்து அணி அணியாக நீண்ட பாம்பு போன்ற படகில் படகு சவாரி போட்டியில் ஈடுபடுவார்கள். அப்படி போட்டியிடும் போது பாரம்பரிய பாடல்களை பாடிக் கொண்டு அதன் தாளத்திற்கு ஏற்றவாறு துடுப்பை போட்டு அதில் ஈடுபடுவார்கள்.
கைகொட்டிகாளி நடனம்
திருவாதிரைக்காளி நடனம் என்றும் இது அழைக்கப்படுகிறது. இது ஓணத்தின் போது பெண்கள் ஆடும் ஒரு பாரம்பரிய குழு நடனமாகும். இந்த நடனத்தின் போது அழகான அசைவுகள் மற்றும் தாள கைத்தட்டல் உடன் நடனமாடுவார்கள்.
ஓணம் பூக்கோலம் போட்டி
ஓணத்தின் போது பெண்கள் இந்த பூக்கோலம் போட்டியில் ஈடுபடுகின்றனர். நேர்த்தியான மலர் ஏற்பாடுகளைக் கொண்டு பூக்கோலம் இடுகின்றனர். இந்த பூக்கோலத்தை "அத்தாப்பூ" என்று அழைக்கின்றனர். இதில் செம்பருத்தி, தும்பா, துளசி, சாமந்தி, சேத்தி, சங்கு புஷ்பம் போன்ற தனித்துவமான பூக்களும் பயன்படுத்தப்படுகிறது. அழகான வண்ணமயமான பூக்களைக் கொண்டு வாசலின் முன்பு கோலம் போட்டு அதில் விளக்கை ஏற்றி நடனம் ஆடி பெண்கள் மகிழ்வார்கள்.
அத்தச்சமயம் ஊர்வலம்
அத்தச்சமய ஊர்வலம் என்பது ஓணம் பண்டிகையின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்த ஊர்வலத்தின் போது வண்ணமயமான அணிவகுப்புகள், பாரம்பரிய கலை வடிவங்கள், அலங்கரிக்கப்பட்ட யானைகள் ஊர்வலம் போன்றவை நடக்கும்.
ஓணக்கலிகள் விளையாட்டுகள்
ஓணக்கலிகள் அல்லது பாரம்பரிய விளையாட்டுகள் ஓணம் கொண்டாட்டங்களில் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இந்த விளையாட்டுகளில் கயிறு இழுத்தல், படகுப் பந்தயம், வில்வித்தை மற்றும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும் பல்வேறு உள்நாட்டு விளையாட்டுகளும் இதில் நடக்கிறது.
திருக்காக்கரா கோயில் கொண்டாட்டங்கள்
கேரளாவில் உள்ள திருக்காக்கரா கோயிலுக்கு ஓணம் பண்டிகையின் போது அதிக முக்கியத்துவம் உண்டு. இந்த நன்னாளில் பக்தர்கள் ஆசி பெறவும், சமய சடங்குகளில் பங்கேற்கவும் கோவிலுக்கு திரளாக வந்து வழிபடுவர்.
ஓணம் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள்
ஓணம் பண்டிகையின் போது கேரளா முழுவதும் இசை நிகழ்ச்சிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பார்வையாளர்களை மகிழ்விக்கவும், பாரம்பரிய நாட்டுப்புற கலைகளை காக்கவும் இந்த இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
கேரளா கைவினைப் பொருட்கள் கண்காட்சி
கேரளாவின் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறிப் பொருட்களைக் காட்சிப்படுத்தும் பல கண்காட்சிகள் ஓணத்தின் போது நடத்தப்படுகின்றன. திறமையான கைவினைஞர்களிடமிருந்து தனித்துவமான படைப்புகளை பாராட்டி வாங்கி பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்துகின்றனர்.



Click it and Unblock the Notifications











