Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
நியூமராலஜி படி இந்த 4 தேதிகளில் பிறந்தவங்க கொஞ்சமும் நேர்மையே இல்லாதவர்களாம்...இவங்கள தெரியாமகூட நம்பிராதீங்க!
Numerology: நியூமராலஜி என்பது ஒரு கவர்ச்சிகரமான பழங்கால நடைமுறையாகும், இது ஒரு நபரின் குறிப்பிட்ட குணாதிசயங்களையும் பண்புகளையும் தீர்மானிக்க ஒரு நபரின் பிறந்த தேதியைப் பயன்படுத்துகிறது. ஜோதிட சாஸ்திரம் ஒருவரின் பிறந்த நட்சத்திரத்தையும், ராசியையும் பயன்படுத்துவது போல எண் கணிதம் பிறந்த தேதியை பயன்படுத்துகிறது.
நியூமராலஜியின் படி சில எண்களில் பிறந்தவர்களின் மற்றவர்களின் நம்பிக்கையை பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பார்கள். அதேசமயம் சிலர் இதற்கு முற்றிலும் நேர்மாறாக நடந்து கொள்வார்கள்.

மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பிறரிடம் பேசுவதும், அவர்களின் ரகசியங்களை தங்கள் நலனுக்காக பயன்படுத்துவதும், மற்றவர்களின் நம்பிக்கையை உடைப்பதும் ஏமாற்றுதல் என்று நம்பிக்கை துரோகம் என்று குறிப்பிடப்படுகிறது. சில தேதிகளில் பிறந்தவர்களால் மற்றவர்களின் ரகசியங்களை எப்போதும் மறைக்க முடியாது என்பதால் அவர்கள் நம்பத் தகுதியற்றவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பிறந்த தேதி 5 (5, 14 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
இந்த நபர்கள் இயற்கையாகவே கிசுகிசுக்கள் மற்றும் மற்றவர்களின் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்வதில் அதிகம் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று எண் கணிதம் கூறுகிறது. எண் 5 தகவமைப்பு, தொடர்பு மற்றும் சமூக உறவுகளின் மீது நாட்டம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டிருப்பதால், அவர்கள் வதந்திகளை கேட்கவும், பரப்பவும் விரும்புவார்கள்.
இந்த எண்ணில் பிறந்தவர்கள் மற்றவர்களின் தனிப்பட்ட தகவல்களைக் பரப்பி உங்களை ஏமாற்றக்கூடும் என்பதால் அவர்களை எப்போதும் நம்ப முடியாது. அப்போதைய சுவாரஸ்யத்திற்காகவும், அவர்களின் நலனுக்காகவும் அவர்கள் யாருடைய தனிப்பட்ட தகவலையும் வெளியிட தயங்க மாட்டார்கள்.
பிறந்த தேதி 27
இந்த எண்ணில் பிறந்தவர்கள் சமூக தொடர்புகளை விரும்பினாலும், உங்களுடன் நன்றாகப் பேசினாலும், அவர்கள் உங்கள் தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களுடன் விவாதிப்பதில் நேரத்தை ஒதுக்கி, உங்கள் நம்பிக்கையையும், பிரைவசியையும் மீறுவார்கள். இந்த எண்ணில் பிறந்தவர்கள் மற்றவர்களின் வாழ்க்கையைப் பற்றி வதந்திகளைப் பரப்புவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இவர்கள் மற்றவர்களின் ரகசியங்களை வெளியிட்டதை ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். தங்களின் நேர்மையை மற்றவர்கள் கேள்வி கேட்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள், ஆனால் அதற்காக நேர்மையாக இருக்கவும் மாட்டார்கள்.
பிறந்த தேதி 3 (3, 12, 21 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
இந்த நாட்களில் பிறந்தவர்கள் இயல்பிலேயே கூட்டமாக இருப்பதை விரும்புபவராகவும், வெளிப்படையாக பேசக்கூடியவராகவும் இருப்பார்கள். அவர்களின் நேசமான இயல்பு காரணமாக அவர்கள் அதிகம் பேசவும் பேசவும் வாய்ப்புள்ளது. அவர்களின் பேச்சாற்றலை நம்பி அனைவரும் தங்களின் பிரச்சினைகளையும், ரகசியங்களையும் அவர்களின் பகிர்ந்து கொள்வார்கள்.
ஆனால் மற்றவர்களின் நம்பிக்கைக்கு இவர்கள் விசுவாசமாக நடந்து கொள்ள மாட்டார்கள். அவர்களின் சுவாரஸ்யமான பேச்சுக்களில் மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி பேசுவதும் அதில் அடங்கும். வாய்ப்பு கிடைக்கும் போது அவர்கள் உங்களை ஏமாற்றவும் கூடும்.
பிறந்த தேதி 8 (8, 17 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
இந்த நாட்களில் பிறந்தவர்கள் இயற்கையாகவே அனைத்து விஷயங்களின் மீதும் அதீத ஆர்வமுள்ளவர்களாகவும், தகவல்களைத் தேடுபவர்களாகவும் இருப்பார்கள், இது மற்றவர்களின் வாழ்க்கையைப் பற்றி விவாதிக்கும் மற்றும் அவர்களின் ஆழமான ரகசியங்களை அறியும் முனைப்பை அதிகரிக்கிறது.
இவர்கள் மற்றவர்களின் தகவல்களையும், ரகசியங்களையும் தெரிந்து கொள்வதுடன் அவர்களின் அந்தரங்கத் தகவல்களை பயன்படுத்தி அவர்களை அச்சுறுத்தவும் செய்யலாம். தங்களின் நலனுக்காக மற்றவர்களின் ரகசியங்களை பயன்படுத்த அவர்கள் துளியும் தயங்க மாட்டார்கள்.



Click it and Unblock the Notifications












