Latest Updates
-
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்..
இந்த 3 தேதிகளில் பிறந்தவர்களை சனி பகவான் ராஜ வாழ்க்கை வாழ வைப்பாராம்... இவங்க வாழ்க்கையில் கஷ்டமே வராதாம்..
Numerology: எண்கள் நமது வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இப்படிப்பட்ட எண்களை அடிப்படையாகக் கொண்டு ஒருவரது எதிர்காலம், குணாதிசயங்கள் போன்றவை குறித்து கணித்து கூறப்படும் ஒரு வகையான ஜோதிடம் தான் எண் கணிதம். இந்த எண் கணிதத்தின் படி, ஒருவரது பிறந்த தேதியானது அந்நபரின் வாழ்க்கை மற்றும் குணாதிசயத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
அப்படி எண் கணிதத்தில் மொத்தம் 1-9 வரையிலான எண்கள் உள்ளன. இந்த 9 எண்களுக்கும் ஒவ்வொரு அதிபதிகள் உள்ளன. இந்த 9 எண்களும் ஒருவரது பிறந்த தேதியின் கூட்டுத் தொகையின் ஒற்றை இலக்க எண்ணாகும். இதில் எண் 8-க்குரிய அதிபதி சனி பகவான். 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8.

இந்த 8-க்கு உரியவர்கள் அதிர்ஷ்டத்தை விட கர்மாவை நம்புவார்கள். அதாவது, ஒருவரது செயல்களுக்கு ஏற்ற பலன் தான் கிடைக்கும் என்பதை நம்புவார்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு சனி பகவானின் பரிபூர்ண அருள் இருக்கும். இப்போது சனி பகவானுக்கு பிடித்த மற்றும் விதி எண் 8-க்கு உரியவர்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களைக் காண்போம்.
ராஜ வாழ்க்கை வாழ்வர்
எண் கணிதத்தின் படி, விதி எண் 8-க்கு உரியவர்களுக்கு சனி பகவானின் சிறப்பான அருள் உண்டு. இந்த எண்ணிற்கு உரியவர்கள் வாழ்வில் பணக்காரர்களாகவும், ஏராளமான சொத்துக்களைக் கொண்டவர்களாகவும் இருப்பர். மேலும் இவர்களின் அதிர்ஷ்டமானது 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரகாசிக்கும்.
அதாவது, இவர்கள் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் காண்பார்கள். ஏனெனில் சனி பகவான் எப்போதும் ஒருவரது கடின உழைப்புக்கான பலனைத் தாமதமாகத் தான் தருவார். மேலும் பொருள் இன்பங்களை அரிதாகவே அனுபவிப்பார்.
இந்த எண்ணிற்கு உரியவர்கள் எப்போதும் எளிமையான வாழ்க்கையை வாழ்வார்கள் மற்றும் உயர்ந்த எண்ணங்களைக் கொண்டிருப்பார்கள். எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும், நன்கு ஆழமாக யோசித்த பின்னரே எடுப்பார்கள். மேலும் எந்த ஒரு வேலையை செய்வதாக இருந்தாலும், அதை யாரிடமும் சொல்லாமல் அமைதியாக செய்து முடிப்பார்கள்.
கர்மாவை நம்புவார்கள்
விதி எண் 8-க்கு உரியவர்கள் அதிர்ஷ்டத்தை விட செயல்களுக்கு ஏற்ப பலன்களே கிடைக்கும் என்று நம்புவார்கள். எந்த வேலையை செய்வதாக இருந்தாலும், அதை அலப்பறை செய்து செய்யாமல், அமைதியாக செய்து முடிப்பார்கள். கடின உழைப்பாளிகள் மற்றும் விடாமுயற்சி கொண்டவர்கள். மற்றவர்களின் மனம் புண்படும்படி நடந்து கொள்ளமாட்டார்கள். மேலும் தங்கள் அதிகாரங்களை அதிகம் பயன்படுத்தமாட்டார்கள்.
இவர்களுக்கான சிறந்த துறைகள்
விதி எண் 8-க்கு உரியவர்களுக்கான சிறந்த வேலை என்றால் அது பெட்ரோல், இரும்பு, எண்ணெய் தொடர்பான வியாபாரம் தான். இந்த துறைகளில் வேலை செய்தால், நல்ல வெற்றியையும், நிறைய பணத்தையும் சம்பாதிப்பார்கள். இது தவிர, இவர்கள் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட், கட்டுமானம் தொடர்பான தொழில்களில் இருந்தால், நல்ல வெற்றியைக் காண்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications