Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
குயின் எலிசபெத்துக்கு 300 வைரங்கள் கொண்ட பிளாட்டின நெக்லஸை திருமண பரிசாக கொடுத்த இந்திய அரசர் யார் தெரியுமா?
இந்தியாவை முகலாயர்கள் 300 ஆண்டுகள் ஆண்ட பிறகு ஆங்கிலேயர்கள் கிட்டதட்ட 200 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். இரண்டாம் குயின் எலிசபெத் 70 ஆண்டுகள் பிரிட்டனின் அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்த பின்னர் இறந்தார். அவர் ஸ்காட்லாந்தில் உள்ள அவரது கோடைகால இல்லமான பால்மோரல் கோட்டையில் இறந்ததாக பிரிட்டிஷ் அரசு அறிவித்தது.
அவரது 73 வயது மகன் இளவரசர் சார்லஸ் வாரிசு அடிப்படையில் அரசரானார், மேலும் அவர் மூன்றாம் சார்லஸ் மன்னர் என்று அழைக்கப்படுகிறார். அவரது ஏழு தசாப்த கால ஆட்சியின் போது, ராணி II எலிசபெத் தனது ஆடம்பரமான வாழ்க்கை முறை மற்றும் நகைகளுக்காக எப்போதும் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்திருந்தார்.

அவரது பெரிய வைர பிரேஸ்லெட், அவரது பெரிய வைரம் பதித்த அயர்லாந்து தலைப்பாகை என அனைத்தும் ஆடம்பரத்தின் அடையாளமாக இருந்தது. இருப்பினும், அவரிடம் இருந்த பல வைர நகைகளில், பல முக்கிய நிகழ்வுகளிலும், வரலாற்றுச் சிறப்புமிக்க ஓவியங்களிலும் அவர் எப்போதும் அணிந்திருந்த ஒரு வைரம் பதிக்கப்பட்ட நெக்லஸ், இந்தியாவிலிருந்து அவருக்கு அளிக்கப்பட்ட திருமணப் பரிசு என்பது உங்களுக்கு தெரியுமா?
ராணியின் அலமாரியில் சிறப்பு இடம் பெற்றிருந்த 300 வைரங்கள் பதிக்கப்பட்ட நெக்லஸ், ஹைதராபாத் நிஜாம் ஆசாப் ஜா VII என்பவர் அளித்த திருமணப் பரிசாக இருந்தது. 1947 ஆம் ஆண்டில், நிஜாம் அவர்கள் ராணி எலிசபெத் தனது திருமணப் பரிசைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை உறுதிசெய்தார், மேலும் குயின் எலிசபெத்தை கவர்ந்த முதல் திருமணப் பரிசாக பிளாட்டினம் நெக்லஸ் இருந்தது. இந்த தனித்துவமான பிளாட்டினம் நெக்லஸ் 1930 களில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அன்றைய இளவரசி எலிசபெத்துக்கு 1947 ஆம் ஆண்டு ஹைதராபாத் நிஜாம் திருமண பரிசாக நெக்லஸ் கொடுத்தார். இளவரசி எலிசபெத் திருமணப் பரிசாக தன்னுடைய நெக்லஸை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று லண்டனில் உள்ள கார்டியர் நிறுவனத்திடம் நிஜாம் அறிவுறுத்தினார், மேலும் சுமார் 300 வைரங்கள் கொண்ட இந்த பிளாட்டினம் நெக்லஸ் ராணியால் தேர்வு செய்யப்பட்டது.
"அவரது ஆட்சி முழுவதும் குயின் எலிசபெத் இந்த நெக்லஸை அணிந்து வந்தார், மேலும் அதை கேம்பிரிட்ஜ் டச்சஸுக்கும் கடன் கொடுத்துள்ளார்."
இந்த விலையுயர்ந்த நெக்லஸை பரிசாகக் கொடுத்த ஹைதராபாத் நிஜாம் உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருந்தார், மேலும் அவர் மறைந்த ராணிக்கு வைரத்தால் பொறிக்கப்பட்ட அழகான ஹைதராபாத் தலைப்பாகையையும் பரிசளித்தார். கார்டியரால் உருவாக்கப்பட்ட இந்த தலைப்பாகையில் பிரிக்கக்கூடிய ரோஜா ப்ரூச்கள் இருந்தன. தலைப்பாகை 1973 இல் பிரிக்கப்பட்டு, பர்மிய ரூபி தலைப்பாகை அதிலிருந்து உருவாக்கப்பட்டது.
உலகெங்கிலும் உள்ள தூதரகங்கள் மற்றும் படைப்பிரிவுகளுக்கு அனுப்பப்பட்ட அதிகாரப்பூர்வ உருவப்படம் அல்லது 1952 இல் அவரது முடிசூட்டுக்குப் பிறகு கிளிக் செய்யப்பட்ட பல முக்கியமான புகைப்படங்களில் நீங்கள் இந்த நெக்லஸைக் காணலாம்.



Click it and Unblock the Notifications












