Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...!
New Year 2026: புத்தாண்டின் முதல் நாளில் இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்ல ஆண்டு முழுவதும் கஷ்டப்படுவீங்க..
New Year 2026 Vastu Tips: 2025 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளோம். இன்னும் ஓரிரு நாட்களில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2026 புத்தாண்டில் நுழையவுள்ளோம். இந்த புதிய ஆண்டில் நாம் அனைவரும் புதிய கனவுகள் மற்றும் நம்பிக்கைகளுடன் நுழைவோம். அதுவும் புத்தாண்டு சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்க, புத்தாண்டின் முதல் நாளில் ஒருசில வழக்கங்களை செய்வோம்.
ஆனால் இந்த புத்தாண்டின் முதல் நாளில் செய்யும் ஒருசில தவறுகள் அந்த ஆண்டு முழுவதும் கஷ்டங்களையும், பண பிரச்சனைகளையும், அதிக மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். இப்போது 2026 புத்தாண்டின் முதல் நாளில் எந்த தவறுகளை ஒருவர் செய்யக்கூடாது என்பது குறித்து காண்போம்.

தவறு #1
வாஸ்துப்படி, புத்தாண்டின் முதல் நாளில் எக்காரணம் கொண்டும் கடன் வாங்கவோ அல்லது கடன் கொடுக்கவோ கூடாது. அப்படி செய்தால், புத்தாண்டின் வரும் மாதங்களில் பண பிரச்சனைகள் அதிகரிப்பதோடு, பணம் தொடர்பான மன அழுத்தம் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே இந்த தவறை ஒருபோதும் செய்யாதீர்கள்.
தவறு #2
புத்தாண்டின் முதல் நாளில் சண்டைகளையோ, கருத்து வேறுபாடுகளையோ தவிர்க்க வேண்டும். ஏனெனில் நல்ல சந்தோஷமும், அமைதியும் நிறைந்த வீட்டில் தான் லட்சுமி தேவி குடியிருப்பதாக நம்பப்படுகிறது. எனவே புத்தாண்டில் உங்கள் வீடு செல்வ செழிப்போடு இருக்க வேண்டுமானால், புத்தாண்டின் முதல் நாளில் சண்டைகளில் ஈடுபடுவதையோ, வாக்குவாதங்களில் ஈடுபடுவதையோ தவிர்த்திடுங்கள்.
தவறு #3
புத்தாண்டின் முதல் நாளில் கிழிந்த அல்லது பழைய ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அதே வேளையில் கருப்பு நிற ஆடைகளையும் அணிவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் மற்றவர்கள் அனைந்த ஆடைகளை அணிவதை எப்போதும் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது துரதிர்ஷ்டத்தை ஈர்க்கும். எனவே புத்தாண்டில் முடிந்த வரை புதிய ஆடைகளை வாங்கி அணியுங்கள்.
தவறு #4
புத்தாண்டு நாளன்று வீடு இருள் சூழ்ந்து இருப்பதைத் தவிர்க்க வேண்டும். அதுவும் வடகிழக்கு திசை இருள் சூழ்ந்திருந்தால், அது வறுமையைக் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது. அதுவும் எப்போதும் வீட்டில் நேர்மறை ஆற்றல் நிரம்பியிருக்க, வீடு நன்கு வெளிச்சமாக இருக்க வேண்டும். அதுவும் வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் விளக்குகளை ஏற்றி வைத்திருப்பது நல்லது.
எனவே நண்பர்களே! புத்தாண்டு செழிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க, புத்தாண்டின் முதல் நாளில் மேலே கொடுக்கப்பட்டுள்ள தவறுகளை எக்காரணம் கொண்டும் செய்யாதீர்கள். இல்லாவிட்டால் வறுமையும், பிரச்சனையும் வாட்டி எடுத்துவிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











