Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...!
நவராத்திரி 2025: தமிழ்நாட்டில் நவராத்திரியின் போது எந்தெந்த கோவிலுக்கு செல்வது நல்லது தெரியுமா?
Navaratri 2025: நவராத்திரி என்பது இந்தியாவின் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். பெண் தெய்வ வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒன்பது நாள் விழாவான நவராத்திரி, இந்தியா முழுவதும் உள்ள மக்களின் மிகவும் விருப்பமான பண்டிகைகளில் ஒன்றாகும். வட இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் நவராத்திரி தென் மாநிலமான தமிழ்நாட்டில் கொஞ்சம் வித்தியாசமாக மிகுந்த உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படுகிறது.
தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த விழாவின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று, கடவுள்கள், தெய்வங்கள் மற்றும் பல்வேறு கலாச்சார கருப்பொருள்களைக் குறிக்கும் பொம்மைகளின் தனித்துவமான அமைப்பான நவராத்திரி கொலுதான். இந்த பதிவில் தமிழ்நாட்டின் கோவில்களில் நவராத்திரி கொலு கொண்டாட்டங்கள் பற்றியும், அதனுடன் தொடர்புடைய பழங்கால மரபுகள் மற்றும் இதற்க்குப் பின்னால் உள்ள வரலாற்று முக்கியத்துவத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

நவராத்திரி கொலுவின் சிறப்பு
நவராத்திரியின் போது, தமிழ்நாட்டு கோவில்களில் விழாக்களின் மையப் புள்ளியாக நவராத்திரி கொலு மாறுகிறது. "கொலு" என்ற சொல் பொம்மைகள், தெய்வ சிலைகள் மற்றும் பிற கலாச்சார சிலைகளை வரிசையாகக் காட்சிப்படுத்துவதைக் குறிக்கிறது. இந்த அலங்கரிக்கப்பட்ட பொம்மைகள் மரப் பலகைகள் அல்லது உலோகச் சட்டங்களால் ஆன படிகளில் வைக்கப்பட்டு, ஒரு தெய்வீகக் காட்சியை உருவாக்குகின்றன. கொலு ஏற்பாடு பொதுவாக ஒற்றைப்படை எண் படிகளைக் கொண்டுள்ளது, மேலும் படிகளின் எண்ணிக்கை வீட்டின் இடம் மற்றும் பக்தர்களின் படைப்பாற்றலைப் பொறுத்து மாறுபடும்.
கொலுவின் நோக்கம்
நவராத்திரி கொலு மகத்தான ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. கொலுவானது இந்து புராணங்கள், நாட்டுப்புறக் கதைகள் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் பல்வேறு அம்சங்களை உணர்த்துகிறது. கொலுவில் வைக்கப்படும் பொம்மைகள் முக்கியமாக கடவுள்கள், தெய்வங்கள், துறவிகள், புராணக் கதாபாத்திரங்கள் மற்றும் ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற பண்டைய இதிகாசங்களின் காட்சிகளை சித்தரிக்கின்றன.
கொலுவின் ஒவ்வொரு படியும் ஒரு வித்தியாசமான கருப்பொருளைக் குறிக்கிறது, இது பண்டைய வேதங்களிலிருந்து கதைகளை விவரிக்கும் ஒரு வசீகரிக்கும் கதையை உருவாக்குகிறது. தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகளில் கொலுவை வைத்து கொண்டாடுகிறார்கள், அதேசமயம் பெரும்பாலான கோவில்களில் கொலு வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் பெரும்பாலான கோவில்களில் கொலு வைக்கப்பட்டாலும் சில கோவில்களில் வைக்கப்படும் கொலு மிகவும் புகழ்பெற்றவையாக இருக்கும். அவை எந்தெந்த கோவில்கள் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வருடாந்தோறும் நவராத்திரி விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. இங்கு வைக்கப்படும் கொலுவை பார்ப்பதற்கு லட்சக்கணக்கான மக்கள் இங்கு வருகை தருகின்றனர். நவராத்திரி விழாவின் போது, கோவிலில் உள்ள கொலு மண்டபத்தில் பிரமாண்டமான கொலு அமைக்கப்படுகிறது. சிவபெருமான் நிகழ்த்திய பல்வேறு தெய்வீக நாடகங்களை சித்தரிக்கும் பொம்மைகள் ஆகியவை கோலு மண்டபத்தில் வைக்கப்படுகின்றன.
முத்தாரம்மன் கோயில், குலசேகரப்பட்டினம்
தமிழ்நாட்டின் திருச்செந்தூர் அருகே அமைந்துள்ள முத்தாரம்மன் கோயில் நவராத்திரியை தனித்துவமான முறையில் கொண்டாடும் ஒரு கோவிலாகும். 9 நாட்கள் அல்லது அதற்கும் குறைவாக திருவிழா கொண்டாடும் மற்ற துர்க்கை கோயில்களைப் போலல்லாமல், முத்தாரம்மன் கோவிலில் நவராத்திரியை ஒட்டி 12 நாட்கள் நீடிக்கும் ஒரு பிரமாண்டமான விழாவைக் கொண்டுள்ளது, இது ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கலந்து கொள்ளும் ஒரு பிரமாண்டமான விழாவாகும்.
இங்கு வழிபடும் இரண்டு முக்கிய தெய்வங்கள் சிவபெருமான் மற்றும் அவரது துணைவி பார்வதி. இந்த கோவில் சிவனின் சுயம்பு சிலைக்கு பெயர் பெற்றிருந்தாலும், பார்வதிக்கும் முத்தாரம்மனுக்கு சமமான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நோய்கள் மற்றும் துரதிர்ஷ்டங்கள் நீங்கி, அவர்களுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் செல்வம் கிடைக்க பக்தர்கள் இங்கு வருகிறார்கள். இங்குள்ள தசரா கொண்டாட்டங்களைப் பற்றிய மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், திருவிழாவின் போது, பக்தர்கள் குரங்குகள், பிச்சைக்காரர்கள் போன்ற பல்வேறு உடைகளில் ஆடை அணிந்து பிச்சை எடுப்பதைக் காணலாம். சாதாரண மனிதர் முதல் பணக்கார தொழிலதிபர் வரை அனைவரும் ஏழைகள் மற்றும் பிச்சை எடுப்பவர்கள் போல உடையணிந்து காணப்படுகிறார்கள். இந்த நாளில் கடவுள் எந்த வடிவத்திலும் தோன்றுவார் என்பது நம்பிக்கை.
காஞ்சி காமாட்சி அம்மன் கோவில்
ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்பாள் தேவஸ்தானத்தில் நவராத்திரி மஹோத்சவம் பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. இந்த கோவிலில் நவராத்திரி விழா நிகழ்வுகள் பிரமாண்டமாக கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கலாம். பூர்வாங்க சண்டி ஹோமம், வாஸ்து சாந்தி, ரக்ஷாபந்தனம் மற்றும் யாகசாலை பூஜைகளுடன் உற்சவம் துவங்கி, சரஸ்வதி பூஜையில் சூரசம்ஹாரம், விஜயதசமி நாளில் நவாவரண போற்றி நடைபெறும். மேலும் நவராத்திரி நாட்களில் ஊஞ்சல் உற்சவமும் நடத்தப்படும். காமாட்சி அம்பாள் கோயிலில் நவராத்திரி மஹோத்ஸவத்தின் ஒரு பகுதியாக தினமும் மாலையில் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறும். நவராத்திரி உற்சவத்தின் போது நித்ய வேதபாராயணம் நடைபெறும்.
உறையூர் வெக்காளி அம்மன் கோவில்
உறையூர் வெக்காளி அம்மன் கோவில் சோழ மன்னரால் வணங்கப்படுகிறது. இது காளி தெய்வத்தின் மற்றொரு வடிவமாகும் மற்றும் வெக்காளி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது திருச்சிராப்பள்ளி கோயிலின் புறநகர்ப் பகுதியான உறையூரில் சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தேவி மிகுந்த வலிமை, மன உறுதி, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை அளிப்பதாக நம்பப்படுகிறது. பக்தர்கள் கடவுளை வணங்கவும், ஆசீர்வாதம் பெறவும், தேவி தங்களுக்கு வழங்கிய அனைத்திற்கும் நன்றி தெரிவிக்கவும் அற்புதமான கோவிலுக்கு வருகிறார்கள்.
வெக்காளி அம்மன் கோயிலில் உள்ள தேவியின் சன்னதி ஒரு அற்புதமான தேருடன் கூடிய தங்கம் மற்றும் வெள்ளி கட்டிடக்கலை ஆகும். இங்கு பக்தர்கள் தங்கள் வேண்டுதலை தங்கள் விருப்பங்களை ஒரு காகிதத்தில் எழுதி ஒரு பெட்டியில் வைக்கலாம். பல பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் தங்கள் நிறைவேறியதற்கான நேர்த்திக் கடனை செலுத்துகிறார்கள். சித்திரை திருவிழா, நவராத்திரி மற்றும் தை வெள்ளியின் போது தேவியின் சிலை நகைகளால் அலங்கரிக்கப்பட்டு தொடர்ச்சியான பூஜைகள் ஏற்பாடு செய்யப்படுகிறது.
சமயபுரம் மாரியம்மன் கோயில்
திருச்சி அருகே உள்ள சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழாவின் போது வழக்கத்தை விட கோலாகலமாக இருக்கும். ஒன்பது நாட்கள் நடைபெறும் வருடாந்திர கோயில் திருவிழா ஊர்வலங்கள் மற்றும் சிறப்பு பிரார்த்தனைகளுடன் கொண்டாடப்படுகிறது, மேலும் அருகிலுள்ள பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களை வருகை தருகிறார்கள். ஒன்பது நாட்களுக்கு, மாரியம்மன் சிலைக்கு அபிஷேகங்கள் செய்யப்படும்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்டோபர் மாதம் தொடங்கும். தேவி பாகவதம், அக்னி பாகவதம், அக்னி புராணம் மற்றும் தேவி மகாமித்யம் ஆகியவற்றின் படி, துர்க்கை, மகாலட்சுமி மற்றும் சரஸ்வதி ஆகியோர் முதல் மற்றும் நடு மற்றும் கடைசி நாட்களில் அரக்கன் மகிஷாசுரனை அழிக்க தவம் செய்தனர்.
விஜயதசமி விழா நாளில், அம்பாள் வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பட்டு வன்னி மரத்தை அடைந்து அம்பு எறியும் நிகழ்ச்சியும் நடைபெறும். நவராத்திரி உற்சவத்தின் போது தினமும் மாலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபதானம் நடைபெறும். மாலை 6 மணிக்கு அம்பாளின் உற்சவ விக்ரகம் புறப்பட்டு, கோவிலின் மேற்கு பிரகார நவராத்திரி மண்டபத்தில் அமர்ந்திருக்கும்.



Click it and Unblock the Notifications












