Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
உலகில் தடயமே இல்லாமல் காணாமல்போன விலைமதிப்பில்லாத புதையல்கள்... இன்றுவரை இவை கிடைக்கவே இல்லையாம்...!
புதையல் வேட்டை என்பது எப்போதும் சுவாரஸ்யமான ஒரு விஷயமாகும். புதையல் என்பது கடந்த கால பேரரசர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் தங்களிடமிருந்த பொக்கிஷங்களை மறைத்து வைத்ததோ அல்லது அவர்களிடமிருந்து கொள்ளயடிக்கப்பட்டதாக இருக்கும். பல நூற்றாண்டுகளாக பல பேரரசுகள் மறைத்த பொக்கிஷங்களை பற்றிய யோசனை மிகவும் சுவரசயமானதாகும்
புதையல்களை பற்றிய மர்மங்களும் மற்றும் அவற்றின் வரலாறும் திரைப்படங்களில் பார்ப்பதற்கு கூட விறுவிறுப்பாகவே இருக்கும். புதையல் என்பது எப்போதும் பொருள் சார்ந்தது மட்டுமல்ல, அதன் வரலாறு மற்றும் அது கூறும் கதையைப் பற்றியது. இந்த பதிவில் வரலாற்றில் தொலைந்து போன, ஆனால் இன்னும் கண்டுபிடிக்க முடியாத உலகின் முக்கியமான புதையல்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

டாப்லிட்ஸ் ஏரியின் தங்கப் புதையல்
ஆஸ்திரிய ஆல்ப்ஸில் உள்ள டாப்லிட்ஸ் ஏரியில், இரண்டாம் உலகப் போரின் இறுதி நாட்களில் நாஜிக்கள் பில்லியன் கணக்கான தங்கம், நகைகள் மற்றும் தங்க நாணயங்களை கொட்டியதாக வதந்திகள் உள்ளது. இந்த ஏரி ஆழமானது, சில அடுக்குகளுக்கு கீழே ஆக்ஸிஜன் இல்லாதது, மேலும் அந்த இடத்திற்கு செல்வது கடினம், இது அந்த இடத்தை மேலும் மர்மமாக்குகிறது, இந்த புதையலை மீட்க பலரும் முயற்சித்து தோல்வியை சந்தித்துள்ளனர்.
நாஜிகளின் தங்கப்புதையல்
இரண்டாம் உலகப் போரின் போது, நாஜிக்கள் வெவ்வேறு பகுதிகளை ஆக்கிரமித்ததால் ஏராளமான தங்கம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களைக் கொள்ளையடித்தனர். அவர்களின் தோல்வி தவிர்க்க முடியாததாகிவிட்டதால், அவர்கள் இந்தப் புதையலின் பெரும்பகுதியை உலகின் பல ரகசிய இடங்களில் மறைத்து வைத்ததாக நம்பப்படுகிறது.
ஏப்ரல் 1945 இல், அமெரிக்க படை ஜெர்மனியில் உள்ள மெர்க்கர்ஸ் உப்புச் சுரங்கத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம், வெளிநாட்டு நாணயம், கலை மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களின் ஒரு பெரிய குவியல்களைக் கண்டுபிடித்தனர். இதுபோல கண்டறியப்படாத நாஜிக்களின் தங்கப்புதையல் உலகம் முழுவதும் உள்ளது. அமெரிக்காவின் தேசிய ஆவணக் காப்பகத்தின்படி. இந்த புதையலில் தங்கக் கட்டிகள், ஓவியங்கள், நாணயங்கள் மற்றும் வதை முகாம் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட தங்கம் கூட அடங்கும்.
Ark of the Covenant
உலகின் தொலைந்து போன நினைவுச்சின்னங்களில் மிகவும் முக்கியமான ஒன்றான Ark of the Covenant, பைபிள் பாரம்பரியத்தில் பத்து கட்டளைகளின் கல் பலகைகளைச் சுமந்து செல்லும் தங்கப் பெட்டியாக விவரிக்கப்படுகிறது. கிமு 587 இல் பாபிலோனியர்களால் ஜெருசலேம் அழிக்கப்பட்ட பிறகு, அதன் தலைவிதியே மாறியது. இந்த சரித்திர புதையல் பற்றி பல்வேறு கட்டுக்கதைகள் உலவினாலும், இதுவரை இந்த புதையல் பற்றிய எந்த தொல்பொருள் ஆதாரமும் வெளிவரவில்லை.
ஃபேபர்கே முட்டைகள்
1885 ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவின் ஜார் மன்னர்கள், விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் ரத்தினக் கற்களால் ஆன நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட முட்டைகளை தங்கள் வாழ்க்கைத்துணைக்கு பரிசாக உருவாக்க நகை வியாபாரி ஃபேபர்கேவை நியமித்தனர். இந்த ஒவ்வொரு முட்டையிலும் மஞ்சள் கருவில் கோழியின் உள்ளே ஒரு தங்க கிரீடம் இருப்பது போல, மறைக்கப்பட்ட ஆச்சரியங்கள் இருந்தன. கடைசி ஜார் மன்னர்களுக்காக தயாரிக்கப்பட்ட 50 முட்டைகளில், அலெக்சாண்டர் III நினைவு முட்டை உட்பட ஆறு முட்டைகள் காணாமல் போயின. அதன்பின் அந்த முட்டைகளுக்கு என்ன நேர்ந்தது என்பது தெரியவில்லை.
கிங் ஜானின் தொலைந்து போன நகைகள்
1216 ஆம் ஆண்டில், இங்கிலாந்தின் மன்னர் ஜான், The Wash-யைக் கடக்கும்போது தனது நகைகளையும் அரச உடைமைகளையும் இழந்தார். அவரது உடைமைகள் நீருக்கடியில் காணாமல் போனது. பல நவீன தொல்பொருள் ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் அவற்றுக்காக மண் சமவெளிகளைத் தேடினர், ஆனால் யாரும் அவற்றை இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
The Holy Grail
மத நம்பிக்கையாளர்கள் மற்றும் புதையல் வேட்டைக்காரர்கள் இருவருக்கும் The Holy Grail மிகவும் முக்கியமானதாகும். இது கடைசி விருந்தில் இயேசு பயன்படுத்திய கோப்பை அல்லது அற்புத சக்திகளின் பாத்திரம் என பலவிதமாக விவரிக்கப்படுகிறது. புராணக்கதைகளின் படி, இது பின்னர் அரிமத்தியாவின் ஜோசப் என்பவரால் இயேசுவின் இரத்தத்தை சேகரிக்கப் பயன்படுத்தப்பட்டது என்றும் நம்பப்பட்டது. ஆனால் இன்றுவரை அது கிடைக்கவில்லை.
1907 ஆம் ஆண்டின் ஐரிஷ் கிரீட நகைகள்
ஜூலை 6, 1907 அன்று, அயர்லாந்தின் செயிண்ட் பேட்ரிக்கின் பதிக்கப்பட்ட சின்னம், காலர்கள் மற்றும் பேட்ஜ்களுடன் டப்ளின் கோட்டையிலிருந்து மறைந்துவிட்டது. பொறுப்பில் இருந்தவர்களில் சாவியை வைத்திருந்த உல்ஸ்டர் கிங் ஆஃப் ஆர்ம்ஸ், சர் ஆர்தர் விகார்ஸ் ஆகியோர் அடங்குவர். இது அவர்களால் திருடப்பட்டிருக்கலாம் என்று குற்றம் சாட்டப்பட்டாலும் நகைகள் ஒருபோதும் மீட்கப்படவில்லை.
சீனாவின் இம்பீரியல் முத்திரை
ராஜ்ஜியத்தின் குலதெய்வ முத்திரை என்றும் அழைக்கப்படும் இம்பீரியல் முத்திரை, கிமு 221 இல் சீனாவின் முதல் பேரரசருக்காக ஜேட் கல்லால் செதுக்கப்பட்டது. இது சீனாவின் ஒரு சக்திவாய்ந்த அடையாளமாக இருந்தது மற்றும் பல நூற்றாண்டுகளாக ஒரு வம்சத்திலிருந்து மற்றொரு வம்சத்திற்கு சென்றது. ஆனால் 10 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, அது மர்மமான முறையில் மறைந்துவிட்டது. அதற்கு என்ன நடந்தது என்பது யாருக்கும் இன்றுவரை தெரியாது.



Click it and Unblock the Notifications
