Latest Updates
-
லாப திருஷ்டி யோகத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப்போகுது..! -
1 கப் தட்டப்பயறும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்.. -
விந்தணுக்களின் நிறமும், அதற்கான அர்த்தங்களும் - விளக்கும் டாக்டர்! -
மழைக்காலத்தில் மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க! பணவரவு குறையாமல் இருக்க வாஸ்து ரகசியங்கள் இதோ -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் ஜூன் 16 முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
ஜவ்வரிசி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 11 ஜூன் 2026: இன்று உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
ஜூன் 11-ல் நிகழும் 3 கிரகங்களின் அரிய சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கப்போகுதாம் -
விவாகரத்து இனி சுலபம்! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு தம்பதிகளுக்குக் கொடுக்கும் நிம்மதி என்ன? -
தக்காளி இருந்தா இந்த மாதிரி ஹைதராபாத் தக்காளி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்
இந்தியாவிலேயே இந்த ரயில்தான் அதிக வருமானத்தை குவிக்கிறதாம்... எவ்வளவு சம்பாதிக்கிறது தெரியுமா?
இந்தியாவில் ஏழைகள் மற்றும் மிடில் கிளாஸ் மக்கள் பயணம் செய்ய முதலில் தேர்ந்தெடுப்பது எப்போதும் ரயில் பயணத்தைதான். அனைவராலும் விமானத்தில் பயணம் செய்ய முடியாது, இந்த சூழ்நிலையில் ரயில் பயணம் வழங்கும் வசதியும், அதன் விலையும் மிடில் கிளாஸ் மக்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கிறது.
இந்திய மக்களின் பயணம் மட்டுமல்ல, இந்திய பொருளாதாரத்தின் முக்கியமான அங்கமாகவும் ரயில் உள்ளது. இந்தியாவிலேயே அதிக மக்கள் பணிபுரியும் ஒரு நிறுவனமாக ரயில்வே துறை உள்ளது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் இணைக்கும் ரயில்வே துறையில் மொத்தம் 13,523 பயணிகள் உள்ளன. இந்த ரயில்களில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர்.

இதன்மூலம் கோடிக்கணக்கான வருமானம் அரசாங்கத்திற்கு வருகிறது.
ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ, வந்தே பாரத் போன்ற பிரபலமான ரயில்கள், அதே போல் மெயில் எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில்கள், இந்தியாவின் பரந்த ரயில்வே நெட்வொர்க்கின் முதுகெலும்பாக அமைகின்றன. ஆனால் தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்தாலும் அரசுக்கு அதிக வருமானத்தைத் தரும் ரயில் எது தெரியுமா?
சுவாரஸ்யமாக, அதிக லாபம் தரும் ரயில்களில், அதிக டிக்கெட் விலை கொண்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அல்லது சதாப்தி எக்ஸ்பிரஸ் முதலிடத்தைப் பெறவில்லை. வருவாயில் முன்னணியில் இருப்பது ராஜதானி எக்ஸ்பிரஸ், குறிப்பாக பெங்களூர் ராஜதானி எக்ஸ்பிரஸ்.
ரயில் எண் 22692, பெங்களூர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ், ஹஸ்ரத் நிஜாமுதீன் மற்றும் பெங்களூரு கிருஷ்ணராஜ புறம் இடையே இயங்குகிறது. இதுதான் 2022-23 நிதியாண்டில் அதிக வருவாய் ஈட்டிய ரயிலாகும். இது 509,510 பயணிகளை ஏற்றிச் சென்றது மற்றும் இந்திய ரயில்வேக்கு சுமார் ₹1,76,06,66,339 ஈட்டியது.
கொல்கத்தாவை புது டெல்லியுடன் இணைக்கும் சீல்டா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் இந்த ரயிலை நெருக்கமாகப் பின்தொடர்கிறது. ரயில் எண் 12314 கடந்த நிதியாண்டில் 509,164 பயணிகளை ஏற்றிச் சென்று அதே காலகட்டத்தில் ₹1,28,81,69,274 வருவாயை ஈட்டியுள்ளது.
மூன்றாவது இடத்தில் புது டெல்லி மற்றும் திப்ருகர் இடையே இயக்கப்படும் திப்ருகர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் உள்ளது. இந்த ரயில் கடந்த ஆண்டு 474,605 பயணிகளுக்கு சேவை செய்து, இந்திய ரயில்வேக்கு ₹1,26,29,09,697 வருவாயை ஈட்டியுள்ளது.
குறிப்பிட்ட ரயில்கள் போல இந்தியாவில் குறிப்பிட்ட ரயில்வே நிலையங்களும் அதிக வருவாயை ஈட்டுவதாக உள்ளது. இந்த பட்டியலில் புதுடெல்லி ரயில் நிலையம் பட்டியலில் முன்னணியில் உள்ளது. தெற்கு ரயில்வேயில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மட்டும் இந்த பட்டியலில் நுழைகிறது. இந்தத் தரவு ரயில்வேயால் நடத்தப்பட்ட 2023-2024க்கான ரயில் நிலைய அடிப்படையிலான பயணிகளின் வருவாய் மதிப்பீடுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.
புது டெல்லி ரயில் நிலையத்தின் ஆண்டு வருமானம் ரூ. 3,337 கோடியாக உள்ளது, அதைத்தொடர்ந்து ஹவுரா ரயில் நிலையம் ரூ.1,692 கோடி வருவாயைப் பெற்றுள்ளது. நம்ம சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ரூ.1,299 கோடி வருவாயை ஈட்டியுள்ளது.



Click it and Unblock the Notifications
