Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
தங்கத்தில் செய்யப்பட்டு இந்தியாவில் ஓடும் நகரும் அரண்மனையான ரயில்... இதில் பயணிக்க டிக்கெட் எவ்வளவு தெரியுமா?
இந்தியாவில் ஏழைகளின் விமானம் என்று ரயிலை தாராளமாக அழைக்கலாம். ஏனெனில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான ரயில்கள் நாடு முழுவதும் பயணிக்கின்றன, மில்லியன் கணக்கான பயணிகளை அவர்களின் இலக்குக்கு அழைத்துச் செல்கின்றன. இந்தியாவின் பொருளாதாரத்திலும் ரயில்வே நெட்வொர்க் முக்கியப்பங்கு வகிக்கிறது.
இந்திய ரயில்வேயில் சமூகத்தின் ஒவ்வொரு பொருளாதாரப் பிரிவினருக்கும் குறிப்பிட்ட ரயில்கள் உள்ளன, ஒரே பயணத்திற்கு சில நூறு ரூபாய் செலவாகும் சாதாரண இருக்கைகள் முதல் சில ஆயிரங்கள் வசூலிக்கும் சொகுசு ஏசி ஸ்லீப்பர் பெட்டிகள் வரை உள்ளன. ஆனால், ஏழை மற்றும் நடுத்தர மக்களால் கனவில் கூட நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒரு பயணத்திற்கு லட்சக்கணக்கான ரூபாய் வசூலிக்கும் ரயிலும் இந்தியாவில் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?

உண்மைதான், தங்கம் மற்றும் வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட நகரும் அரண்மனையான என்று அழைக்கப்படும் பிரமாண்டமானமற்றும் ஆடம்பரமான மகாராஜாஸ் எக்ஸ்பிரஸ்தான் அது, இது ஒரு பயணத்திற்கு அதிகபட்சமாக 21 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கிறது. இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த ரயிலான மகாராஜாஸ் எக்ஸ்பிரஸில் உள்ள ஆடம்பரம் மற்றும் தனித்துவம் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவின் மிகவும் ஆடம்பரான சொகுசு ரயில்
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தால் (IRCTC) சொந்தமாக இயக்கப்படும் மகாராஜாஸ் எக்ஸ்பிரஸ், 2010 ஆம் ஆண்டு தனது முதல் பயணத்தைத் தொடங்கியது, மேலும் உலகின் மிகவும் விலையுயர்ந்த சொகுசு ரயில் பயணங்களில் ஒன்றை வழங்குகிறது. மகாராஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் 23 பெட்டிகள் உள்ளன, அவை நான்கு வகையான தங்குமிடங்களை வழங்குகின்றன - டீலக்ஸ் கேபின்கள், ஜூனியர் சூட் கேபின்கள், சூட்கள் மற்றும் பிரசிடென்ஷியல் சூட்கள், இதில் ஒவ்வொன்றும் அதற்கு முந்தைய பிரிவை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது மற்றும் வித்தியாசமான சேவைகளை வழங்குகிறது.
செப்டம்பர் பிற்பகுதியிலிருந்து ஏப்ரல் ஆரம்பம் வரை இயக்கப்படும் இந்த ரயில், அதன் புகழ்பெற்ற பயணிகள் ஒவ்வொருவருக்கும் தனிப்பயனாக்கப்பட்ட சேவை மற்றும் ஒப்பிடமுடியாத ஆடம்பரம் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஒரு பயணத்திற்கு அதிகபட்சம் 88 பயணிகளை மட்டுமே தங்க அனுமதிக்கிறது.
மஹாராஜாஸ் எக்ஸ்பிரஸ் வசதிகள்
தங்கம் மற்றும் வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட உட்புறங்களுடன், மஹாராஜாஸ் எக்ஸ்பிரஸ் ஆடம்பரத்தின் சின்னமாகவும், அரண்மனை போல தோற்றமளிக்கும் விதமாகவும் உள்ளது. இந்த சொகுசு ரயிலில் உள்ள நாற்காலிகள், படுக்கைகள் மற்றும் பிற பர்னிச்சர்கள் முதல் உணவு மற்றும் பானங்கள் வரை அனைத்தும் ஒரு ராஜாவுக்கு அளிக்கப்படுவது போல ஆடம்பரமாக உள்ளன, மேலும் இந்த தலைசிறந்த படைப்பில் ஒரு பயணத்திற்கு மிகப்பெரிய தொகையை செலவிடத் தேர்ந்தெடுக்கும் பயணிகளுக்கு ஒரு பிரீமியம் உணர்வை அளிக்க ஒவ்வொன்றும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.
நவீன தொலைக்காட்சிகள், இணைய சேவைகள், மின்னணு லாக்கர், சர்வதேச அழைப்பு, ஏர் கண்டிஷனிங், சிறந்த வசதிகளுடன் கூடிய பெரிய தனியார் குளியலறைகள் மற்றும் பல போன்ற உயர்நிலை வசதிகள் ஒவ்வொரு கேபினிலும், சூட்டிலும் உள்ளன.
தங்க முலாம் பூசப்பட்ட பாத்திரங்கள்
மஹாராஜாஸ் எக்ஸ்பிரஸில் இரண்டு Multi-Cuisine உணவகங்கள் உள்ளன,அவை மயூர் மஹால் மற்றும் ரங் மஹால். இவை இரண்டும் அனைத்து நாடுகளின் உணவுகளையும் பயணிகளுக்கு வழங்குகின்றன. 24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட பாத்திரங்களில் விருந்தினர்களுக்கு உண்மையிலேயே அரச உணவு பரிமாறப்படுகிறது.
எந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறது?
மஹாராஜாஸ் எக்ஸ்பிரஸ் வடமேற்கு மற்றும் மத்திய இந்தியா முழுவதும் நான்கு வழித்தடங்களில் இயங்குகிறது, எட்டு நாட்களுக்கு மேல் நீடிக்கும் பயணத்தின் போது, பிரபலமான கோட்டைகள் மற்றும் அரண்மனைகளுக்கு தனிப்பட்ட நுழைவு, தாஜ்மஹால், கஜுராஹோ கோயில், ரணதம்போர் மற்றும் வாரணாசி குளியல் தளங்கள் போன்ற உலக பாரம்பரிய தளங்களுக்கு தனித்துவமான சுற்றுப்பயணங்களை வழங்குகிறது.
மகாராஜாஸ் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலை
மஹாராஜாஸ் எக்ஸ்பிரஸின் டிக்கெட் கட்டணங்கள் ஒருவர் தேர்ந்தெடுக்கும் பாதை மற்றும் தங்குமிட வகையைப் பொறுத்தது. டெல்லி-ஆக்ரா-ரந்தம்போர்-ஜெய்ப்பூர்-டெல்லி வழித்தடத்திற்கான இரட்டையர் தங்குமிட டீலக்ஸ் கேபினுக்கான கட்டணம் மட்டுமே 'மிகவும் குறைவானது', ஒரு நபருக்கு ரூ.4,13,210, ஜூனியர் சூட் ரூ.4,39,400, சூட் ரூ.6,74,310 மற்றும் பிரசிடென்ஷியல் சூட் ரூ.11,44,980.
மறுபுறம், டெல்லி-ஜெய்ப்பூர்-ரந்தம்போர்-ஃபதேபூர் சிக்ரி-ஆக்ரா-கஜுராஹோ-வாரணாசி-டெல்லி வழித்தடம் மிகவும் விலை உயர்ந்தது, டீலக்ஸ் கேபினுக்கு ரூ.6,54,880, ஜூனியர் சூட்டுக்கு ரூ.8,39,930, வழக்கமான சூட்டுக்கு ரூ.12,24,410 மற்றும் பிரசிடென்ஷியல் சூட்டுக்கு ரூ.21,03,210 முதல் ரூ.21,03,210 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த கட்டணங்கள் தொடர்ந்து மாறக்கூடியவை, எனவே சரியான கட்டணத்திற்க்கு மகாராஜாஸ் இணையத்தளத்தை பார்வையிடவும்.



Click it and Unblock the Notifications












