ஒட்டகத்தின் கண்ணீர்தான் உலகிலேயே மிகவும் விலையுயர்ந்ததாம்... காரணம் என்ன தெரியுமா?

உலகில் மிகவும் விலைமதிப்பில்லாத ஒரு பொருள் என்றால் அது கண்ணீர்தான். கண்ணீர் கண்களிலிருந்து உருண்டோடும் சாதாரண நீர்த்துளி போல தோன்றலாம், ஆனால் அவை வெளியேறுவதற்கு பின்னால் ஆழமான காரணமும், வலிகளும் இருக்கும். கண்ணீர் பற்றிய கருத்துக்கள் பல நூற்றாண்டுகளாக மக்களிடையே நிலவி வருகிறது.

சில கண்ணீர் போலியானது அல்லது பொய்யானது என்பதை குறிக்க மக்கள் "முதலைக் கண்ணீர்" போன்ற சொற்றொடர்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால் அனைத்து கண்ணீரும் வேஷம் அல்ல, சில கண்ணீர் ஆழமான உணர்வுகளின் வெளிப்பாடாக இருக்கலாம். ஆனால் மனிதர்களின் கண்ணீரைப் போல அல்லாமால் சில மிருகங்களின் கண்ணீர் துளிகள் மருத்துவக் குணங்களைக் கொண்டவையாக இருக்கிறது. இதனால் அவற்றின் விலை நம்ப முடியாத அளவிற்கு அதிகமாக இருக்கிறது.

Most Expensive Tear in the World

ஒட்டகத்தின் கண்ணீர்

ஒட்டகத்தின் கண்ணீர்தான் உலகிலேயே மிகவும் விலையுயர்ந்ததாக கருதப்படுகிறது, ஏனெனில் இது பாம்பு விஷத்திற்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது. ராஜஸ்தானின் வறண்ட பாலைவன நிலத்தில், ஒட்டகங்கள் பொதுவாக "பாலைவனக் கப்பல்" என்று அழைக்கப்படுகின்றன, ஏனெனில் அவை விவசாயிகள் கடினமான நிலங்கள் வழியாக நீண்ட மைல்கள் பயணிக்க உதவுகின்றன. ஆனால் இந்த பாலைவனக் கப்பல்கள் இன்னொரு வியக்க வைக்கும் ஒன்றை வெளிப்படுத்துகின்றன.

பிகானரில் உள்ள தேசிய ஒட்டக ஆராய்ச்சி மையத்தின் (NRCC) விஞ்ஞானிகள், ஒட்டகக் கண்ணீரிலிருந்து பெறப்பட்ட ஆன்டிபாடிகள் மற்றும் அதன் நோய் எதிர்ப்பு சக்தி பாம்பு விஷத்தை எதிர்த்துப் போராடப் பயன்படுத்தப்படலாம் என்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இது ஒரு அற்புதமான கண்டுபிடிப்பாகும், இது பாம்புக் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சைகளுக்கு வழிவகுக்கும், மேலும் ஒட்டகங்களை வளர்க்கும் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்.

Most Expensive Tear in the World

இந்த ஆய்வை நடத்தியது யார்?

NRCC இன் ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து தொடர்ச்சியான சோதனைகளை நடத்தினர், அதில் அவர்கள் ஒட்டகங்களுக்கு மிகவும் விஷமுள்ள பாம்பு இனத்தின் விஷத்தை ஊசி வடிவில் செலுத்தினர். ஒட்டகங்களின் இரத்த சீரம் மற்றும் கண்ணீரிலிருந்து வரும் ஆன்டிபாடிகள் விஷத்தின் விளைவுகளை திறம்பட நடுநிலையாக்குகின்றன என்பதை அவர்களின் கண்டுபிடிப்புகள் உணர்த்தின.

குறிப்பாக, இரத்தக்கசிவு மற்றும் இரத்தம் உறைதல் போன்ற விஷத்தின் விளைவுகள் பெரிதும் குறைக்கப்பட்டன. இருப்பினும், ஒட்டகத்தை அடிப்படையாக கொண்ட ஆன்டிபாடிகளும் குறைவான ஒவ்வாமை பிரச்சினைகளைக் கொண்டிருந்தன, மேலும் இவை விலையுயர்ந்ததாகவும் மற்றும் சேகரிப்பது கடினமானதாகவும் இருந்தது. கடந்த களங்களில் குதிரை இம்யூனோகுளோபுலின் (IgG) இலிருந்து தயாரிக்கப்படும் பாரம்பரிய ஆன்டிவெனோம்களிலிருந்து பெறப்பட்டதை இவை அதிக சக்தி வாய்ந்தவை.

ஏன் உலகிலேயே விலையுயர்ந்ததாக உள்ளது?

இந்தியாவில் பாம்புக்கடி மிகவும் பரவலான ஒரு பிரச்சினையாகும், இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 58,000 பேர் பாம்புக்கடியால் இறக்கின்றனர், மேலும் 140,000 பேர் உறுப்புகள் செயலிழப்பை அனுபவிக்கின்றனர். NRCC இன் ஒட்டகத்திலிருந்து பெறப்பட்ட ஆன்டிபாடிகள் இந்த சிக்கல்களைக் குறைத்து சிகிச்சைகளுக்கு வழிவகுக்கும். பாம்புக்கடிகள் பொதுவானவை மற்றும் சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெறுவது மிகவும் கடினமாக இருக்கும் கிராமப்புறங்களில் உள்ள நோயாளிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பிகானீர், ஜெய்சால்மர் மற்றும் ஜோத்பூர் போன்ற பகுதிகளில் ஒட்டக வளர்ப்பு குழுக்களுளின் பொருளாதார நிலையை இந்த ஆய்வு மாற்றக்கூடும். கண்ணீர் மற்றும் இரத்த மாதிரிகளை விரைவாகவும் பாதுகாப்பாகவும் சேகரிப்பதற்காக உள்ளூர் விவசாயிகளை தங்கள் ஒட்டகங்களை அணுக அனுமதிக்க NRCC அனுமதி கோரியுள்ளது, அதற்கு ஈடாக, விவசாயிகளுக்கு தாராளமாக இழப்பீடு வழங்கப்படுகிறது. அறிக்கையின்படி,

சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா போன்ற மருந்து நிறுவனங்கள் மற்றும் பிற தனியார் மருந்து நிறுவனங்கள் ஒட்டகத்திலிருந்து பெறப்பட்ட ஆன்டிபாடிகளைச் சுற்றி மருந்துகளை உருவாக்கி வருகின்றன, விவசாயிகள் ஒவ்வொரு மாதமும் ஒரு ஒட்டகத்திற்கு ரூ. 5,000 முதல் 10,000 வரை கூடுதல் வருமானத்தைப் பெறலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது விவசாயிகளின் பொருளாதார நிலையை மாற்றியமைக்கக்கூடும்.

Story first published: Thursday, July 17, 2025, 16:28 [IST]
Desktop Bottom Promotion