17 லட்சம் கோடி சொத்துடனும் லாரி லாரியாக தங்கத்துடனும் உலக கோடீஸ்வரராக இருந்தது இந்த தென்னிந்திய அரசர்தானாம்...

இந்தியாவில் பணக்காரர்கள் என்றால் நம் நினைவிற்கு முதலில் வருவது அம்பானி, அதானி மற்றும் ரத்தன் டாடா போன்றவர்கள்தான். இவர்களெல்லாம் தற்போது இந்தியாவில் மிகப்பெரும் செல்வந்தர்களாக இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவின் முதல் மிகப்பெரும் கோடீஸ்வரர் தென்னிந்தியாவை சேர்ந்தவர் என்பது நம்மில் பலரும் அறியாதது. அவர்தான் ஹைதராபாத் நிஜாம் மிர் உஸ்மான் அலி கான்.

Mir Osman Ali Khan India s First Billionaire Who Was Richer Than Mukesh Ambani Ratan Tata

இந்தியாவில் அப்போது ஏற்பட்ட பணவீக்கம் மற்றும் அவரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு அவரை இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரராக மாற்றியது. ஹைதராபாத்தின் கடைசி நிஜாம் மிர் உஸ்மான் அலி கான், ஹைதராபாத் வளர்ச்சியின் பின்னணியில் உள்ளவர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றார். 1948 ஆம் ஆண்டில் ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்திய ஒன்றியத்துடன் இணைப்பதற்கு முன்பு, நிஜாம் நாட்டின் முதல் பணக்காரர் என்ற பட்டத்தை வைத்திருந்தார்.

1911 முதல் 1948 வரை ஆட்சி செய்த ஹைதராபாத் சமஸ்தானத்தின் கடைசி நிஜாம் அவருடைய அபரிமிதமான செல்வம் அவரை உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக ஆக்கியது. அவரது ஆட்சியின் கீழ், ஹைதராபாத் அதன் மகத்தான செல்வத்திற்காக புகழடைந்தது, ஆடம்பரமான அரண்மனைகள் மற்றும் தோட்டங்கள் அவரின் ஆட்சியில் உருவாக்கப்பட்டது.

இந்திய ஒன்றியத்துடன் இணைவதற்குத் முடிவெடுத்த சமஸ்தானங்களில், ஹைதராபாத், ஜூனாகத் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீரில், ஹைதராபாத் அந்தக் காலத்தில் குறிப்பிடத்தக்க செல்வம் மிக்க மற்றும் வளமான சமஸ்தானமாக இருந்தது.

1911 இல் அவரது தந்தையின் மறைவைத் தொடர்ந்து, நிஜாம் மிர் உஸ்மான் அலி கான் அரியணையில் அமர்ந்து, 1911 முதல் 1948 வரை 37 ஆண்டுகள் ஹைதராபாத்தை ஆட்சி செய்தார். பணவீக்கத்தை சரிசெய்யும் போது, அவரது நிகர மதிப்பு சுமார் ரூ. 17.47 லட்சம் கோடி (230 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) என்று பல்வேறு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஆச்சரியமளிக்கும் விதமாக, நிஜாமின் செல்வம் தற்போதைய உலக பணக்காரரான டெஸ்லாவின் நிறுவனர் எலோன் மஸ்க்கின் மொத்த நிகர மதிப்பை நெருங்கியதாக நம்பப்படுகிறது, எலான் மஸ்க் தற்போது 286 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் உலகின் மிகப்பெரிய பணக்காரராக உள்ளார்.

நிஜாம் மிர் உஸ்மான் அலி கான், 100 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான தங்கத்தையும் மற்றும் 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள நகை கலெக்ஷன் உள்ளிட்ட அபரிமிதமான செல்வத்தை வைத்திருந்தார். மேலும், அவர் புகழ்பெற்ற ஜேக்கப் டயமண்டை சொந்தமாக வைத்திருப்பதில் பெருமிதம் கொண்டார், இது தற்போது 95 மில்லியன் டாலர் மதிப்பைக் கொண்டுள்ளது மற்றும் அவர் அதனை பேப்பர் வெயிட்டாக பயன்படுத்தியது அவரின் வேடிக்கைக் குணத்தைக் காட்டுகிறது.

அவரிடம் அளவற்ற செல்வம் இருந்தபோதிலும், அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் கஞ்சத்தனமானவராக இருந்தார், தனது அடிப்படைத் தேவைகளுக்குக் கூட பணத்தை செலவிடத் தயங்கினார். ஆனால் மக்களின் நலன் மற்றும் மாநிலத்தில் உள்கட்டமைப்பு மேம்பாட்டை உருவாக்கினார்.

ஹைதராபாத் உயர் நீதிமன்றம், மத்திய நூலகம், சட்ட மன்றம், மாநில அருங்காட்சியகம் மற்றும் நிஜாமியா ஆய்வகம் போன்ற பல்வேறு பொது கட்டிடங்களை நிஜாம் தனது ஆட்சியின் போது நிர்மாணித்ததால், ஹைதராபாத் வளர்ச்சிக்கு அவர் பின்புலமாக இருந்ததாக புகழ் பெற்றார். அவரது சாதனைகளை அங்கீகரிப்பதற்காக, அவருக்கு Knight Grand Commander of the Star of India என்ற மதிப்புமிக்க பட்டம் வழங்கப்பட்டது.

இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டதாலும், சமஸ்தானங்கள் ஒழிக்கப்பட்டதாலும் மிர் உஸ்மான் அலி கானின் செல்வமும் அதிகாரமும் கணிசமாகக் குறைந்தது. மிர் உஸ்மான் அலி கான், ஒரு நல்ல ஆட்சியாளர், அனைத்து குடிமக்களுக்கும் கட்டாய ஆரம்பக் கல்வி முறையை அறிமுகப்படுத்தினார். கூடுதலாக, ஹைதராபாத்தில் இந்தியாவின் தொடக்க விமான நிலையத்தை வடிவமைப்பதில் நிஜாம் பங்கு வகித்ததாக நம்பப்படுகிறது. உஸ்மான் அலி கான் 1967 ஆம் ஆண்டு தனது 80வது வயதில் காலமானார்.

Story first published: Sunday, March 17, 2024, 13:40 [IST]
Desktop Bottom Promotion