Latest Updates
-
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்..
மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 வருடம் சிறைத்தண்டனை வழங்கிய நீதிமன்றம்... காரணம் என்ன தெரியுமா?
இந்திய வரலாற்றை மகாத்மா காந்தியை தவிர்த்து எழுத முடியாது, சொல்லப்போனால் இந்திய வரலாற்றையே மகாத்மா காந்திக்கு முன், மகாத்மா காந்திக்கு பின் என்றே பிரிக்கலாம். ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவை அகிம்சை வழியில் போராடி 1947-ல் சுதந்திரத்தைப் வாங்கி கொடுத்தார், அதனால்தான் அவரை நாம் தேசத்தந்தை என்று நாம் அழைக்கிறோம்.
1948, ஜனவரி 30 ஆம் தேதி என்று கோட்சேவால் மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டார். காந்தியின் மரணத்திற்கு பிறகு அவரின் குடும்பத்தினருக்கு என்ன நடந்தது என்று பெரும்பாலும் நாம் சிந்தித்து இருக்க மாட்டோம். உலகப்புகழ் பெற்ற மகாத்மா காந்தியின் குடும்பத்தினர் ஒருவருக்கு வெளிநாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது உங்களுக்கு தெரியுமா?

மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்தி
மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டம் தொடங்கிய இடமான தென்னாப்பிரிக்காவிலேயே மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தியான 56 வயது ஆஷிஷ் லதா ராம்கோபினுக்கு 2021 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க நீதிமன்றம் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. ஊடக அறிக்கைகளின்படி, போலி இறக்குமதி ஆவணங்களைப் பயன்படுத்தி தொழிலதிபர் எஸ்.ஆர். மகாராஜிடம் ரூ.3.22 கோடி மோசடி செய்ததாக தென்னாப்பிரிக்க நீதிமன்றம் ஆஷிஷ் லதா ராம்கோபினை குற்றவாளியாக அறிவித்தது. ஆஷிஷ் லதா ராம்கோபினின் வழக்கு பற்றி மேற்கொண்டு விரிவாக பார்க்கலாம்.
மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்திக்கு எதிரான வழக்கு
மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தி போலி இறக்குமதி ஆவணங்களைப் பயன்படுத்தி தொழிலதிபர் எஸ்.ஆர். மகாராஜை ஏமாற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டது. நெட்கேர் என்ற பெரிய மருத்துவமனை குழுமத்திற்காக இந்தியாவிலிருந்து துணி இறக்குமதி செய்வதாகக் கூறி அவர் போலியான இன்வாய்ஸ்களைத் தயாரித்ததாக நீதிமன்றம் கூறியுள்ளது. மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தி என்பதால் அவரது பின்னணியை நம்பி, தொழிலதிபர் எஸ்.ஆர். மகாராஜ் அவருக்கு லாபத்தை எதிர்பார்த்து பணத்தை வழங்கினார். ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக, சரக்கு ஒருபோதும் வழங்கப்படவில்லை மற்றும் அவர் அளித்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவையாக இருந்தது.
Credits: https://www.instagram.com/ipulkitkaushal/
ஆஷிஷ் லதா ராம்கோபின் மீதான குற்றச்சாட்டுகள்
விசாரணையின் போது, தேசிய வழக்கு விசாரணை ஆணையத்தைச் சேர்ந்த பிரிகேடியர் ஹங்வானி முலாவுத்ஸி, லதா ராம்கோபின் தனது கதையை உண்மையாகக் காட்ட போலியான ஆவணங்களைப் பயன்படுத்தியதாகக் கூறினார். NPA இன் செய்தித் தொடர்பாளர் நடாஷா காரா, போலி விலைப்பட்டியல்கள் மற்றும் மின்னஞ்சல்களைப் பயன்படுத்தி மஹராஜை ஏமாற்றியதை உறுதிப்படுத்தினார்.
நீதிமன்றம் அவரை குற்றவாளி எனக் கண்டறிந்தது மட்டுமல்லாமல், அவரது கோரிக்கையையும் நிராகரித்தது. இதன் விளைவாக, தென்னாப்பிரிக்க நீதிமன்றம் தண்டனை வழங்கியது மற்றும் தண்டனைக்கு எதிரான அவரது மேல்முறையீட்டை நிராகரித்தது. இந்த மோசடி சம்பவம் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது, ஏனெனில் மகாத்மா காந்தியின் நேர்மைக்கும், அவரது குடும்ப பெயருக்கும் இந்த வழக்கு கரும்புள்ளியாக மாறிவிட்டது. கடந்த களங்களில் தனது சமூக செயல்பாட்டிற்காக அறியப்பட்ட ஆஷிஷ் லதா, வளர்ச்சி மற்றும் அமைதியை ஊக்குவிக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடனும் இணைந்து பல சமூகப் பணிகளில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் காந்திக்கு எந்த வகையில் உறவு?
மனித உரிமை ஆர்வலரும் Participative Development Initiative-ன் நிறுவனருமான லதா ராம்கோபின், சர்வதேச அளவில் கௌரவிக்கப்பட்ட தென்னாபிரிக்க அரசியல்வாதியும், சமூக சேவகர் மற்றும் எழுத்தாளரான எலா காந்தியின் மகள். எலா காந்தி மகாத்மா காந்தியின் மகனான மாண்டிலால் காந்தியின் மகளாவார்.



Click it and Unblock the Notifications












