Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Maha Shivratri 2024: ஏழரை சனியால் ரொம்ப கஷ்டப்படுறீங்களா? அப்ப மகா சிவராத்திரி நாளில் இத செய்யுங்க..
Maha Shivratri 2024: இந்த ஆண்டின் மகா சிவராத்திரி மார்ச் 08 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் சிறப்பு பூஜைகளை செய்து வழிபடுவது வழக்கம். இந்து மதத்தில் மகா சிவராத்திரியின் முக்கியத்துவம் கொண்டாடும் பகுதி மற்றும் பாரம்பரியங்களைப் பொறுத்து வேறுபடுகிறது.
சிலர் இந்த மகா சிவராத்திரி நாளானது சிவபெருமானின் ருத்ர தாண்டவம் நிகழ்த்திய நாள் என நம்புகிறார்கள். இன்னும் சிலர் இந்நாளில் தான் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் திருமணம் நடைபெற்றதாக நம்புகிறார்கள்.

எதுவாயினும், சிவபெருமான் மற்றும் பார்வதி தேவிக்கு செய்யப்படும் பூஜைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதுமட்டுமின்றி இந்த நன்னாளில் சில சிறப்பு பரிகாரங்களை செய்வதன் முலம், ஏழரை சனியின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம் என்றும் கூறப்படுகிறது.
ஏனெனில் சிவபெருமானின் தீவிர பக்தர் தான் சனி பகவான். எனவே சிவபெருமானை சரியான வழியில் வழிபடும் போது, சிவனின் ஆசியால் வாழ்வில் செல்வமும், மகிழ்ச்சியும் பெருகும் என்பது நம்பிக்கை. இப்போது மகா சிவராத்திரி நாளில் ஏழரை சனியின் மோசமான தாக்கத்தைக் குறைக்கவும், அதிலிருந்து விடுபடவும் செய்ய வேண்டியவைகள் குறித்து காண்போம்.
வன்னி இலை பூஜை
மகா சிவராத்திரி நாளில் சிவபெருமானை வழிபடும் போது, சிவனின் அருளை எளிதில் பெற வேண்டுமானால், வன்னிமர இலைகளை படைத்து பூஜித்து, 108 முறை "மகா மிருத்யுஞ்சய மந்திரத்தை" பாராயணம் செய்யுங்கள். இப்படி செய்வதன் மூலும், ஏழரை சனியின் தாக்கம் அல்லது சனியின் தோஷத்தில் இருந்து விடுபடலாம் என்று நம்பப்படுகிறது.
சிவ சாலிசாவை சொல்லவும்
ஏழரை சனி நடப்பவர்கள், சனி பகவானால் வாழ்வில் தாங்க முடியாத பலவிதமான பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அதிலிருந்து விடுபட மகா சிவராத்திரி நாளில் சிவ சாலிசாவை பாராயம் செய்யுங்கள். இவ்வாறு சொல்வதன் மூலம், சனியின் தாக்கம் குறையும்.
தானம் செய்யவும்
சிவபெருமானை மகிழ்விக்கவும், அவரது ஆசியைப் பெறவும் நினைத்தால், மகா சிவராத்திரி நாளில் ஏழை எளியோருக்கு தானம் செய்யுங்கள். அதுவும் வில்வ மரத்திற்கு அடியில் அமர்ந்திருக்கும் ஏழை எளியோருக்கு தானம் செய்தால், சனி தோஷத்தில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.
அபிஷேகம் செய்யவும்
மங்களகரமான மகா சிவராத்திரி நாளில் கங்கை நீரில் எள்ளு விதைகள் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து, சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யுங்கள். இப்படி செய்வதனால் சிவபெருமானின் ஆசியுடன், சனி பகவானின் ஆசீர்வாதமும் கிடைத்து, வாழ்வில் மகிழ்ச்சியும், செல்வரும் பெருகுவதாக நம்பப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











