குடியரசு தினத்தன்று வரலாறு படைக்க தயாராக இருக்கும் சிங்கப்பெண் சுவாதி ரத்தோரை பற்றித் தெரியுமா?

சுதந்திர போராட்டம் காலம் முதல் தற்போதைய பொருளாதார வளர்ச்சி வரை அனைத்திலும் பெண்களின் பங்கேற்பும், முயற்சியும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்தியா தற்போது அடைந்துள்ள அபார வளர்ச்சியில் பெண்களின் பங்கு என்பது அளப்பரியது. சுதந்திர போராட்டம் காலம் முதல் தற்போதைய பொருளாதார வளர்ச்சி வரை அனைத்திலும் பெண்களின் பங்கேற்பும், முயற்சியும் முக்கியத்துவம் வாய்ந்தது. அனைத்து துறையிலும் வெற்றிக்கொடியை நாட்டி வரும் பெண்கள் தற்போது இந்திய விமானப்படையிலும் தங்களின் முத்திரையை பதித்துக் கொண்டிருக்கின்றனர்.

Lieutenant Swati Rathore The First Woman To Lead Republic Day Parade Flypast

இந்திய விமானப்படையில் பெண்களின் வெற்றிப் பயணத்தில் அடுத்த கட்டமாக ஜனவரி 26 ஆம் தேதி டெல்லியில் ராஜ்பாத்தில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் ஃப்ளை பாஸ்ட்டை வழிநடத்திய முதல் பெண்மணி என்ற பெருமையை இந்திய விமானப்படையின் விமான லெப்டினன்ட் சுவாதி ரத்தோர் வரலாற்றை எழுதவுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெற்றோரின் பெருமிதம்

பெற்றோரின் பெருமிதம்

சுவாதி ரத்தோர் குறித்து அவரின் தந்தையிடம் கேட்டபோது, " என் மகள் என் தலையை உயர்த்திப் பிடித்திருக்கிறாள். அவர் கண்ட கனவு நனவாகிவிட்டதால் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று அவரது பெருமைமிக்க தந்தை டாக்டர் பவானி சிங் ரத்தோர் கூறினார். ரத்தோர் ராஜஸ்தானில் விவசாயத் துறையில் துணை இயக்குநராக உள்ளார். மேலும் மகள்களின் கனவுகளை நிறைவேற்ற உதவுமாறு அனைத்து பெற்றோர்களிடமும் அவர் வேண்டுகோள் விடுத்தார்."

பிறப்பும், படிப்பும்

பிறப்பும், படிப்பும்

ராஜஸ்தானின் நாக்வூர் மாவட்டத்தில் பிறந்த சுவாதி தனது பள்ளிப்படிப்பை அஜ்மீரில் இருந்து செய்தார். தனது பள்ளி நாட்களில், ஒரு ஓவியப் போட்டியில் ஒரு மூவர்ண ஓவியத்தை வரைந்தார். அவருடைய பெற்றோர் அவரது கனவை நனவாக்க அவரைத் உற்சாகப்படுத்தினர் மேலும் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு அவர் என்.சி.சி ஏர் விங்கில் சேர்ந்தார்.

பறக்கும் கனவு

பறக்கும் கனவு

சிறுவயது முதலே பைலட் ஆகவேண்டும் என்ற கனவு ஸ்வாதிக்கு இருந்தது. அதன் விளைவாக 2014 ஆம் ஆண்டு IAF இல் தனது முதல் முயற்சியிலேயே அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது சகோதரர் வணிக கடற்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளார். சுவாதியின் தாயார் ராஜேஷ் கன்வார், தன்னையும் மகனையும் மகளையும் ஒருபோதும் வித்தியாசமாக நடத்தவில்லை என்றும், இதுவே தனது மகள் வரலாற்றை உருவாக்க இப்போது தயாராக இருப்பதற்கான காரணம் என்றும் அவர் கூறினார்.

நேர்முகத் தேர்வு

நேர்முகத் தேர்வு

2013 இல் சுவாதி விமானப்படை பொது சேர்க்கை தேர்வுக்கு ஆஜரானார், அதைத் தொடர்ந்து 2014 மார்ச் மாதம் டெஹ்ராடூனில் உள்ள விமானப்படை தேர்வு வாரியத்தால் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டார். நாடு முழுவதிலும் இருந்து சுமார் 200 பெண் மாணவர்கள் வந்திருந்தனர், அவர்களில் 98 பேர் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டனர். பயிற்சிக்கு பிறகு ஐந்து மாணவர்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர், அதில் அவர் மட்டுமே பைலட் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முதல்வரின் பாராட்டு

முதல்வரின் பாராட்டு

ராஜஸ்தான் முன்னாள் முதல்வர், வசுந்தரா ராஜே சிந்தியா ஒரு ட்வீட்டில், "வீர்பூமி # ராஜஸ்தானின் மகள் மற்றும் விமானப்படையின் விமான லெப்டினன்ட் # சுவாதிரத்தோர் குடியரசு தினத்தை முன்னிட்டு ராஜ்பாத் அணிவகுப்பில் 'ஃப்ளை பாஸ்ட்' வழிநடத்துவார்கள் என்பது நம் அனைவருக்கும் பெருமை அளிக்கிறது. . அவளுக்கு பிரகாசமான எதிர்காலம் வாழ்த்துகிறேன்! " என்று வாழ்த்துச் செய்தி கூறியுள்ளார்.

வாழ்த்துச் செய்திகள்

வாழ்த்துச் செய்திகள்

"இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் ஃப்ளை பாஸ்ட்டை வழிநடத்திய முதல் பெண்மணி என்ற இந்திய விமானப்படையின் விமான லெப்டினன்ட் சுவாதி ரத்தோருக்கு எனது வாழ்த்துக்கள். இந்த சாதனையின் மூலம், அவர் மாநிலத்தின் பெருமையை உயர்த்தியது மட்டுமல்லாமல், பெண்கள் வலுவூட்டலுக்கு ஒரு தனித்துவமான முன்மாதிரியும் உள்ளது "என்று ராஜஸ்தானின் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் கூறினார். இவர் மட்டுமின்றி சுவாதி ரத்தோருக்கு இந்தியா முழுவதில் இருந்தும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் சிங்கப பெண்களில் சுவாதி ரத்தோருக்கு எப்போதும் நிரந்தர இடம் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion