Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
முதலாளிகள் செய்யும் இந்த விஷயம்தான்... ஊழியர்களின் நிம்மதி மற்றும் ஊக்கத்தை மொத்தமாக கொல்கிறதாம்!
எல்லா ஊழியர்களும் தாங்கள் செய்யும் பணிக்காக ஒருமுறை பாராட்டப்பட வேண்டும் மற்றும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று விரும்புவார்கள். பாராட்டு ஒரு சக்திவாய்ந்த ஊக்க மருந்து.
முதலாளி மற்றும் ஊழியர்களிடையேயானா உறவு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சில அலுவலங்களில் நல்ல முதலாளிகளும், பெரும்பாலான அலுவலங்களில் மோசமான முதலாளிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். நல்ல முதலாளிகள் உள்ள அலுவலகத்தில் புணிபுரிவது என்பது ஊழியர்களுக்கு மிகவும் நிம்மதியானது. ஆனால், மோசமான முதலாளி உள்ள இடத்தில் ஊழியர்கள் பணிபுரிவது, அவர்கள் உயிர்வாழ்வதையே கடினமாக்கும் அளவிற்கு தங்கள் ஊக்கத்தில் பாதியை இழக்கின்றனர். ஒரு நல்ல, ஊக்கமளிக்கும் முதலாளி எப்போதும் தங்கள் ஊழியர்களை தொழில்முறை இலக்குகளை அடையவும், அதிகபட்ச உற்பத்தி நிலைகளை அடையவும் ஊக்குவிக்கிறார்.

ஆனால், மோசமான முதலாளி ஊழியர்களுக்கு தொடர்ந்து அழுத்தங்களை கொடுத்து கொண்டும், எந்த வகையான ஊக்கத்தையும் கொல்லும் முறைகள் மற்றும் செயல்களை நாடுகிறார்கள். பணியிடங்களில் முதலாளி இவ்வாறு இருப்பது, ஊழியர்களுக்கு குறைந்த சுயமரியாதை சிக்கல்கள் மற்றும் சுய நம்பிக்கை இல்லாததற்கு வழிவகுக்கும். எனவே, முதலாளிகள் செய்யும் அந்த மோசமான விஷயங்கள் என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

அங்கீகாரம் இல்லாமை
எல்லா ஊழியர்களும் தாங்கள் செய்யும் பணிக்காக ஒருமுறை பாராட்டப்பட வேண்டும் மற்றும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று விரும்புவார்கள். பாராட்டு ஒரு சக்திவாய்ந்த ஊக்க மருந்து. ஊழியர்கள் தங்கள் செய்யும் வேலைக்காக அங்கீகரிக்கப்பட்டு மதிப்புமிக்கதாக உணரும்போது, அவர்கள் மேலும் சிறப்பாக செயல்பட ஊக்கம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இருப்பினும், முதலாளிகள் தங்கள் ஊழியர்களின் முயற்சிகளை வேலைகளை அங்கீகரிக்கத் தவறினால், அவர்களுக்கு வேலை செய்யும் ஆர்வம் குறையத் தொடங்கும்.

மோசமான தொடர்பு திறன்
முதலாளி மற்றும் ஊழியர்களிடையே ஆரோக்கியமான தகவல் தொடர்பு இருக்க வேண்டியது அவசியம்.
முதலாளிகள் திறம்பட தொடர்பு கொள்ளத் தவறும்போது, ஊழியர்கள் தவறாக புரிந்துகொண்டு தேவையற்ற குழப்பத்தை உருவாக்குகிறார்கள். மோசமான தகவல்தொடர்பு தவறான புரிதல்கள், தவறவிட்ட காலக்கெடு மற்றும் வேலையில் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும். சரியான உந்துதல் இல்லாமல், பணியாளர்களால் ஊக்கமாக வேலை செய்ய முடியாது.

மைக்ரோமேனேஜிங்
மைக்ரோமேனேஜிங் என்பது இன்ச் பை இன்ச் கண்காணிப்பது ஆகும். ஒரு முதலாளி மைக்ரோமேனேஜ் செய்யும் போது, புதிய யோசனைகள் மற்றும் அணுகுமுறைகளை ஆராய்வதற்கு தங்களுக்கு தன்னாட்சி இல்லை என்று ஊழியர்கள் நினைக்கிறார்கள். முதலாளிகளால் மைக்ரோமேனேஜிங் செய்வது அவர்களின் ஊழியர்களின் மீதான நம்பிக்கையின் பற்றாக்குறையை தொடர்புபடுத்துகிறது. இது வேலையில் திருப்தி மற்றும் ஊக்கத்தை குறைக்க வழிவகுக்கிறது. மேலும், இது ஊழியர்களின் படைப்பாற்றல் மற்றும் புதுமைகளைக் கட்டுப்படுத்தலாம்.

ஊழியர்களின் தேவைகளைப் புறக்கணித்தல்
முதலாளிகள் தங்கள் ஊழியர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை என்றால், அது மிகவும் குறைத்துவிடும். சில ஊழியர்கள் நெகிழ்வான பணி அட்டவணையை விரும்புகிறார்கள், மற்றவர்கள் தெளிவான வழிகாட்டுதல்களையும் கட்டமைப்பையும் விரும்புகிறார்கள். பணியாளரின் தேவைகள் மற்றும் விருப்பங்களைப் புறக்கணிப்பது வேலையில் ஊக்கம் மற்றும் ஈடுபாட்டின் பங்களிப்பு குறைய வழிவகுக்கும். முதலாளிகள் தங்கள் ஊழியர்களின் தேவைகளைப் புரிந்துகொள்வதற்கும், அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பணிச்சூழலை வழங்குவதற்கும் நேரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நியாயமற்ற எதிர்பார்ப்புகள்
முதலாளிகள் ஊழியர்கள் மீது நம்பதகாத அல்லது அதிகபட்ச எதிர்பார்ப்புகளை அமைக்கிறார்கள். இதனால், அவர்கள் தங்கள் ஊழியர்களின் தோள்களில் நிறைய சுமையை வைக்கிறார்கள். பணியாளர்கள் பதவி நீக்கம் செய்யப்படலாம் என முதலாளி கூறும்போது, இது ஊழியர்களின் செயல்திறனை குறைக்க வழிவகுக்கும். முதலாளிகள் ஊழியர்களுக்கு சவாலான மற்றும் அடையக்கூடிய யதார்த்தமான எதிர்பார்ப்புகளை அமைக்க வேண்டும். அடையக் கூடிய எதிர்பார்ப்புகளுடன் ஒப்பிடும்போது எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வது எளிதாகிறது. இதனால், ஊழியர்களும் எந்த அழுத்தமும் இல்லாமல் நன்றாக வேலையை செய்து முடிப்பார்கள்.



Click it and Unblock the Notifications