Just In
- 1 hr ago சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- 1 hr ago வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- 1 hr ago இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- 2 hrs ago எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
Don't Miss
- Automobiles இந்த விஷயத்தில் மாருதி காரை நிறைய பேர் கண்டு கொள்வது இல்ல! ஹூண்டாய் காரை வாங்குவதற்கு காரணம் என்னவா இருக்கும்?
- Movies தப்பு தப்பா வீடியோ போடுறாங்க?.. ரக்ஷனுக்கும் எனக்கும் என்ன தொடர்பு.. ஓபனாக பேசிய ஜாக்குலின்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Finance தங்கம் விலை ஏவுகணை போல் உயர்வு.. இன்று சென்னை, கோவை, மதுரையில் என்ன நிலவரம்..?!
- News "ஸ்வெட்டர் வாங்கி வைத்திருக்கிறேன்".. திமுக வேட்பாளர் தமிழச்சிக்கு வாழ்த்து தெரிவித்த சீனு ராமசாமி!
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
லஞ்சம் தர மறுத்த பெண்ணை நிர்வாணப்படுத்தி சோதனை செய்து போலீஸ் அட்டூழியம்!
லஞ்சம் தர மறுத்த பெண்ணை நிர்வாணப்படுத்தி சோதனை செய்து போலீஸ் அட்டூழியம்!
கென்யாவின் கரியோபங்கி எனும் இடத்தில் போலீசாரின் இந்த அட்டூழிய செயல் அரங்கேறியுள்ளது. சாலை விதிகளை மீறியதாக கூறி தேரேசியா மும்பி எனும் பெண்ணை போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். 31 வயது மிக்க மும்பியை வலுக்கட்டாயமாக அவரது பாலினத்தை பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி, அவரது ஆடைகளை கழற்ற கூறியுள்ளனர்.
இதற்கான காரணம் கேட்டதற்கு, மும்பியின் முகத்தில் கொஞ்சம் முடி அதிகமாக இருக்கிறது. இது தாடி தான். எனவே, ஆணாக இருக்குமோ என்ற சந்தேகம் நிலவுகிறது என போலீஸார் கூறியுள்ளனர். மும்பியின் பிறப்புறுப்பை காண்பிக்க சொல்லி அவமானப்படுத்தி, கொடுமை செய்து துன்புறுத்தியுள்ளனர் கென்யா காவலர்கள்.
இந்த சம்பவம் கென்யாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பி!
மும்பி 31 வயது மிக்க கென்யா நாட்டை சேர்ந்த பெண்மணி. இவர் ஓரிரு தினங்களுக்கு முன்னர் கென்யாவின் கரியோபங்கி என்ற பகுதியில் சாலை விதிகளை மீறியதாக கூறி இரு பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்த பிறகு, அந்த பெண் காவலர்கள் மும்பியின் முகத்தில் சிறிதளவு தாடி இருந்ததால், அவர் ஆணாக இருக்க கூடுமோ என்ற சந்தேகம் அடைந்துள்ளனர். இதனால், உடனே அவரது பாலினம் கண்டறிய முயற்சித்துள்ளனர்.
Image Source: KTN News
அவமானம்!
உடனடியாக, மும்பியை அவரது ஆடைகளை கழற்ற கூறி வற்புறுத்தியுள்ளனர். நிர்வாணப்படுத்தியது மட்டுமின்றி, அவரது பிறப்புறுப்பை கால்களை விரித்து காண்பிக்க வேண்டும் என்று கேவலமான செயலிலும் நடந்துள்ளனர் கென்யா பெண் காவலாளிகள்.
காவலாளிகள் தனக்கு செய்து கொடுமைகளை மும்பி கென்யாவின் லோக்கல் மீடியாக்களில் கூறி அம்பலப்படுத்தியுள்ளார்.
Image Source: KTN News
கோளாறு!
மும்பி எனும் இந்த பெண்ணுக்கு 'Hypertrichosis' எனப்படும் மயிர்மிகைப்பு கோளாறு இருக்கிறது. இதனால், மற்ற பெண்களுடன் ஒப்பிடுகையில் இவருக்கு உடலில் கொஞ்சம் கூடுதலாக சரும ரோம வளர்ச்சி காணப்படுகிறது.
தனது இந்த கோளாறு காரணமாக தான் உடலில் அதிக ரோம வளர்ச்சி இருக்கிறது என்று கூறியிருக்கும் மும்பி. தான் ஷேவிங் செய்வதை விரும்புவது இல்லை என்றும் கூறியுள்ளார். ஏனெனில், ஷேவிங் செய்வதனால் தனக்கு எரிச்சல் உணர்வு அதிகரிக்கிறது என்று மேலும் தான் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் மும்பி.
2 பெண் காவலாளிகள்!
நடந்த சம்பவம் குறித்து மும்பி கூறுகையில்,
"என்னை கைது செய்தவுடன் இரண்டு பெண் காவலாளிகள் எனது ஆடைகளை கழற்றி கால்களை விரித்து காண்பிக்க கூறினார்கள். என் உடல் அங்கங்களை கண்ட பிறகு... நான் பெண் தான் என்று அவர்கள் ஒப்புக் கொண்ட பிறகு என்னை காவல் அறைக்கு அழைத்து சென்றனர். நான் முடிந்த அளவு கெஞ்சி கேட்டுக் கொண்ட பிறகும் கூட, அவர்கள் என்னை அவமானப்படுத்துவதை நிறுத்த வில்லை." என்று தெரிவித்துள்ளார்.
மும்பியின் இந்த கைது சம்பவம் கடந்த மே 15 ம் நாள் நடந்துள்ளது.
லஞ்சம்!
மும்பியை கைது செய்த அந்த இரண்டு பெண் காவலாளிகள் முதலில் மும்பியிடம் லஞ்சமாக மூன்று யூரோக்கள் கேட்டுள்ளனர். இதன் இந்திய மதிப்பு 230 ரூபாய் ஆகும். பிறகு மும்பி சாலை விதி மீறல் மற்றும் வேறு சில சின்ன, சின்ன வழக்குகள் பதிவு செய்துள்ளனர் கென்யா போலீசார்.
அச்சம்!
தனது ஹார்மோன் கோளாறு காரணமாக அவமானப்படுத்தியது மிகுந்த மன வலியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியிருக்கும் மும்பி. இந்த சம்பவத்திற்கு பிறகு தான் வேலைக்கு செல்வதையே நிறுத்திவிட்டேன் என்றும். தனக்கு இனிமேல் வேலைக்கு போகவே பிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். மீண்டும் இப்படி ஒரு சமபவம் நடந்துவிடுமோ என்று தாம் அஞ்சுவதாக மும்பி மேலும் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலாளிகளே இப்படி சோதனை என்ற பெயரில் அவர்களை நிர்வாணப்படுத்தி, அவமானம் அடைய செய்வது மனித உரிமை மீறல் இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் மும்பி.
வருத்தம்!
பெண்களுக்கு ஆண்களிடம் இருந்து பாதுகாப்பு இல்லை என்பதால் தான் காவல் துறையில் பெண்களுக்கென தனியாக பெண் காவலாளிகளை பணியமர்த்தும் முறை உலகெங்கிலும் நடைமுறை செய்யப்பட்டுள்ளது.
ஆனால், லஞ்சம் வாங்குவதற்காக... பெண் காவலர்களே.. பெண்களை இப்படி அவமானப்படுத்துவது, மனித்தன்மை இன்றி கொடூரமாக நடந்துக் கொள்வது என்பது பெண்களுக்கு இந்த உலகில் பாதுகாப்பு என்பது பெரும் கேள்விக்குறியாக இருப்பதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.