For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

10வயது சிறுமி கர்ப்பம்! குடும்பமே சேர்ந்து குற்றவாளியை காப்பாற்றிய கொடுமை my story #144

பாலியல் வன்புணர்வு காரணமாக கர்ப்பமடைந்த பத்து வயது குழந்தை பெண் குழந்தையை பெற்றெடுத்தது.

By Staff
|

பொண்ணு நல்லா வளர்ந்துட்டா போலயே.... வாட்ட சாட்டமா இருக்கா.... என்று ரீனாவின் கண்ணத்தைப் பிடித்து கிள்ளினார் பல வருடங்கள் கழித்து வீட்டிற்கு வந்திருக்கும் அத்தை.

ஆமா அக்கா எல்லாரும் அதத்தான் சொல்றாங்க என்று சலித்துக் கொண்டாள் அம்மா.

அத்தை வீட்டிற்கு வந்த நேரமோ என்னவோ அடுத்த பத்து நாட்களில் பூப்பெய்தினாள் ரீனா. அப்போது ரீனாவுக்கு பத்து வயது தான். பத்து வயதிலேயேவா பெண் குழந்தைகள் பருவமடைவார்கள் என்று ஆச்சரியப்படாதீர்கள். இன்றைக்கு தங்களுடைய வாழ்க்கை முறை மாற்றத்தினால் பெண் குழந்தைகள் பலரும் இந்தப் பிரச்சனைக்கு ஆளாகிறார்கள்.

உறவுகள் எல்லாரையும் அழைத்து தடபுடலாக விருந்து நடந்தது. விஷேசங்கள் கலைகட்டியது, சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் நடைப்பெற்றன. பத்து வயதில் என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்வதற்கு முன்னதாகவே தன்னைச் சுற்றி என்னென்னவோ நடக்கிறது, திடீர் அலங்காரம், திடீர் கவனிப்பு என எல்லாமே புதிதாக இருக்கிறது ரீனாவிற்கு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 year old girl give birth to a baby

10 year old girl give birth to a baby
Story first published: Tuesday, January 16, 2018, 15:51 [IST]
Desktop Bottom Promotion