Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
நட்புனா சும்மா இல்லடான்னு ஏன் சொல்றாங்க தெரியுமா?
நம் வாழ்வில் தேர்ந்தெடுக்க முடிந்த ஓர் உணர்வு என்றால் அது நட்பாகத்தான் இருக்கும். நட்பிருந்தால் நம் வாழ்க்கை எப்படியெல்லாம் மாறும் தெரியுமா?
நம் வாழ்வோடு ஒன்றிய ஓர் உணர்வு அதே நேரத்தில் எல்லா வயதிலும் தேவைப்படும் ஓர் உறவு என்றால் நிச்சயமாக நட்பு என்று சொல்லலாம். சினிமாவிலும் நட்பை மையமாய் வைத்து ஏராளமான திரைப்படங்களையும் பார்த்திருக்கிறோம். இப்படி நட்பு என்ற உறவு நம்மோடு இரண்டறக் கலந்துவிட்டது என்றுக் கூட சொல்லலாம்.
அந்த அளவிற்கு நட்பு முக்கியமானதா? தெரிந்து கொள்ளலாம் கட்டுரையின் முடிவில்

ஒண்ணே ஒண்ணு சொல்லவா :
நம் மனதில் இருக்கும் ரகசியங்கள்.... பிறரிடம் பகிர முடியாத ரகசியங்கள்... உரிமையாக பகிர்ந்து கொள்ள முடியும். முதல் காதல், முதல் முத்தம், உங்களுக்கே உங்களுக்கான உணர்வுகளை பகிர்ந்து கொள்ளலாம். சில்லறைத்தனமான உங்களது சந்தேகங்களை உரிமையாக கேட்கலாம்.

யூ டன் மச்சி :
நம்மால் என்ன முடியும் என்று நமக்கே எடுத்துக் காட்டும் கண்ணாடியாய் நட்பு இருக்கும். இக்கட்டான சூழல்களில் நம்மை மீட்டெடுக்க வருவதும் இதே நட்பு தான்.

தனிமை எனும் கொடுமை
இத்தனை பேர் சுற்றியிருக்க தனிமையாய் இருப்பது என்பது மிகவும் கொடுமையானது. தனியாக உட்கார்ந்திருக்கும் போது தான் பல்வேறு யோசனைகள் வரும். படிப்படியாக மன அழுத்தத்திற்கு வழி வகுத்திடும். நாம் என்ன மூடில் இருக்கிறோம் அதற்க்கேற்ப ரியாக்ட் செய்திட முடியும். முகமுடி தேவையிருக்காது.

காது கொடுத்து கேட்கலாம் :
எவ்வளவு சீரியசான விஷயங்களாக இருந்தாலும் நாம் சொல்வதை காது கேட்கும் ஓர் உறவு நட்பு. நம் வயது, வேலை,மெச்சூரிட்டி எல்லாம் கடந்து நம் எண்ணங்களை, விமர்சனங்களை,சந்தேகங்களை பகிர முடியும்.

தோல் கொடுப்பான் தோழன் :
நம்மால் சமாளிக்க முடியாத சூழ்நிலைகளில் நம்மால் தாங்கிக் கொள்ள முடியாத தருணங்களில் மனம் விட்டு அழுதிட ஓர் உறவு என்றால் அது நிச்சயமாக நட்பாகத்தான் இருக்க முடியும். பிரச்சனை தீர்கிறதோ இல்லையோ நம் மனதில் பாரம் நிச்சயமாக குறைந்திருக்கும்.

உள்ளே வெளியே :
நாம் யார்? நமக்கு ஏற்ற சூழல்கள் எது என்று புரிந்து கொள்ள முடிவதோடு பிறரிடம் பழகும் தன்மையும் எல்லாரையும் அனுசரித்து போகும் குணத்தையும் பெற முடியும். நம் குணத்தை எந்த சங்கடங்களுமின்றி பிரதிபலிக்கலாம்.

பளீச் பதில்கள் :
எந்த யோசனையுமின்றி...திட்டங்களுமின்றி மனதில் தோன்றியதை எளிதாக நட்பிடம் பகிர்ந்து கொள்ள முடியும். என்ன நினைத்திருப்பாரோ என்ற சங்கடங்கள் இருக்காது. எளிதாக கையாளக்கூடிய ஓர் உறவு நம்மை தட்டிக்கொடுத்து, அரவணைத்துச் செல்லும்.

வாழ்கைப் பாடம் :
மகிழ்வான தருணம் மட்டுமே நட்பில் இருக்கும் என்று சொல்ல முடியாது கண்டிப்பாக சில சங்கடங்களையும் சந்தித்தாக வேண்டும், அதற்கான வருத்தப்படாமல் அது நண்பன் காட்டிய வாழ்க்கைப்பாடம் என்று எடுத்துக் கொண்டு நகர்ந்தால் எந்த பிரச்சனையும் இல்லை.



Click it and Unblock the Notifications











