Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
சிவனுடன் புணர்ந்து விஷ்ணு கருவுற்ற போது என்ன ஆனது தெரியுமா?
சிவனுடன் புணர்ந்து விஷ்ணு கருவுற்ற போது என்ன ஆனது என தெரியுமா? ஐயப்பனின் பிறப்பு பற்றி நீங்கள் அறியாத கதை!
சிவனும், விஷ்ணுவும் புணர்ந்து அதன்பால் விஷ்ணு கருவுற்றார் என சில கதைகளில் நாம் படித்தறிய முடிகிறது. அதெப்படி ஆணும், ஆணும் புணர்ந்து கருவுற முடியும் என சிலர் கேள்விகள் எழுப்பலாம்.
ஆனால், விஷ்ணு எடுத்திருந்த மோகினி அவதாரத்தில் இருந்து சிவனுடன் இணைந்தே அவர் கருவுற்றார் என ஆன்மீக கதைகளில் கூறப்படுகிறது.
இப்படியாக இவர்கள் இருவருக்கும் பிறந்த கடவுள் தான் ஐயப்பன் என்ற கூற்றும் கூறப்படுகிறது.

அர்த்தனாரி!
தானும், தனது துணை பார்வதின் உடலுடனும் இணைந்து சிவன் அளிக்கும் தோற்றமே அர்த்தநாரி. இதன் மூலம் ஆண், பெண் சமநிலை தத்துவம் கூறப்படுவதாக ஆன்மீக வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

மோகினி அவதாரம்!
அரக்கர்களிடம் இருந்து அமுதத்தை அவர்களை ஏமாற்றி கைப்பற்றி வர கடவுள் விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்தார்.

சிவன் கவர்தல்!
மோகினி அவதாரத்தில் இருந்து விஷ்ணு மீது சிவன் கவர்ச்சி அடைந்ததாகவும், மோகினியை நோக்கும் சிவனை கண்டு பார்வதி வெட்கி தலை குனிந்ததாகவும் கதைகளில் கூறப்பட்டுள்ளன.

கர்ப்பம்!
இந்த கவர்தல் மூலமாக, சிவனுடன் இணைந்து மோகினி கருவுற்றாள். இப்படியாக சிவன் மற்றும் விஷ்ணு அவதாரத்திற்கு பிறந்தவர் தான் கடவுள் ஐயப்பன்.

குழப்பங்கள்!
இந்த கதைகளை சிலர் ஏற்கிறார்கள், சிலர் எதிர் கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். இன்றளவும் ஐயப்பனின் பிறப்பு பற்றியும், சிவன் மூலம் விஷ்ணு மோகினி அவதாரத்தில் கருவுற்றது குறித்தும் பல குழப்பங்கள் நிலவி வருகிறது.

ஓரினச்சேர்க்கை!
இன்று மக்கள் ஓரினச்சேர்க்கையை தகாத வகையில் நோக்கினாலும், நமது புராண, ஆன்மீக கதைகளில் இதைப் பற்றி பல கதைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆயினும், மனம் ஒவ்வாத காரணத்தால் பலரும் ஓரினச்சேர்க்கையை ஏற்க மறுக்கிறார்கள்.
ஆண் பெண் காதலாக இருக்கட்டும், ஆண் ஓரினச்சேர்க்கை, பெண் ஓரினச்சேர்க்கையாக இருக்கட்டும் அனைத்தும் அன்பின் வெளிபாடே ஆகும்!



Click it and Unblock the Notifications