Latest Updates
-
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...!
இதிகாசங்களில் புகழ்பெற்ற அம்மாக்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
புராணங்களின் வாயிலாக நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால், புகழ்பெற்ற தாய்மார்கள் அவர்களுடைய பிள்ளைக்கு ஒரு நற்வழிகாட்டியாக இருந்து வந்தார் என்பதே அனைத்து புராணங்களாலும் போற்றப்படும் பெருமிதம் பொங்கும் வார்த்தைகளாகும். இந்த புராணங்களில் நாம் படித்த அன்னையவளே, இன்று சமுதாயத்தில் ஒவ்வொரு பெண்களுக்கும் முன் உதாரணம் என்பதே மறுக்கபட கூடாத சான்றாக இருக்கிறது. இவர்கள் ஏற்படுத்திய பழக்கவழக்கங்கள் பழங்குடியினரின் வாழ்க்கையில் தொடங்கி இன்று வரை நாகரிகத்தின் பிரதிபலிப்பாக இருந்து வருகிறது.
ஹிந்து இதிகாசங்களில் நாம் கண்ட அத்தகைய கவனிக்கத்தக்க அன்னையர்களை தான், நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். ஆம், அவர்கள் கடினக்காலங்களின் போது அதனை பற்றி பெரிதும் பொருட்படுத்திகொள்ளாமல் வீரத்துடனும் தைரியத்துடனும் விளங்கினார்கள் என்றும் இதிகாசத்தின் வாயிலாக நமக்கு தெரிய வருகிறது.
அவர்கள் தனக்கு ஏற்படும் இக்கட்டான சூழலின் போது தன்னுடைய வலிமையை பல மடங்கு பெருக்கிகொண்டு அசாதாரண நிலையுடன் அதனை எதிர்த்து போராடினர் என்பது வரலாற்றில் எழுதப்பட்ட பக்கங்களே. அவற்றை பற்றிய தொகுப்பு தான் இது.

மகா சதீ அனுசுயா:
இவர் கற்பு மற்றும் தூய்மையின் மறு உருவம் என போற்றப்படும் அன்னையாவாள். மிகவும் பொறுமை குணம் கொண்ட இவள், அறநெறிகளுக்கு சிறந்த அடையாளமாகவும் விளங்கினாள். தேவி அனசியா கூறிய வார்த்தைகள், புராணங்களின் மூலம் நம் செவியில் தீண்ட, அது என்னவென்றால்.,அவள் ஒரு குழந்தையை ஈன்றெடுக்க ஆசைகொண்டதாகவும் அது பிரம்ம பெருமான், மஹா விஷ்னு பெருமான் மற்றும் சிவ பெருமானிற்கு ஈடு இணையாக இருக்க வேண்டுமென வேண்டியதாக வரலாற்றின் மூலம் நமக்கு தெரிய வருகிறது.
அதனால், அவள் ஒரு தவத்தின் மூலம் தன் ஆசையை நிறைவேற்றி கொள்ள நினைத்தாள். மும்மூர்த்திகள் தங்கள் துணைவர்கள், தேவி சரஸ்வதி, தேவி லட்சுமி, பார்வதி தேவியின் தெய்வீகத்தன்மையை பரிசோதிக்கும்படி தேவி அனசுயாவின் விருப்பத்தை வழங்குவதற்காக இருந்தனர். ஆம், அவள் இத்தகைய வேண்டுதலுக்கு தகுதியான ஒருவரென்றால் அவள் வேண்டுதலை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டுமென மூன்று பேரும் முடிவெடுத்தனர்.
மும்மூர்த்திகள், முனிவர்கள் போல தோன்றி தேவி அனசியாவிடம் என்ன வேண்டுமென கேட்டு நிர்வாண பிக்ஷா தர தயாரானார்கள். ஆம், அவள் நிர்வாண வடிவத்தில் அவர்களுக்கு தர்மம் தர வேண்டும். இது மிகவும் தாழ்வு மனப்பான்மையை அவள் மனதில் விதைத்த போதிலும், முனிவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்கள் விருப்பத்துக்கு செவி சாய்த்தாள். இருப்பினும் அவள் அவ்வாறு நடந்துகொள்வது பதிவிரத தர்மத்திற்கு எதிரானது என்பது அவளுக்கும் தெரியும்.
அவள் தன் கணவன் அட்ரி முன்பு தியானம் செய்தாள். அவள் கடவுளை பார்த்து குழந்தைகளின் வடிவத்தினை மனதில் நினைத்துகொண்டாள். அவளை நிர்வாண நிலைக்கு தள்ளிகொண்டு துணிந்து அந்த குழந்தைகளுக்கு பால் கொடுத்தாள். அவள் அவ்வாறு தன்னையே அர்ப்பணிக்க, கடவுள்கள் அவளுடைய குழந்தைகளாக பிறந்தார்கள். ஆம், அந்த குழந்தை இரண்டு பாதங்களும், ஒரு உடம்பும், ஆறு கைகளும், மூன்று தலைகளும் கொண்டிருந்தது.
இந்த தேவி அனசுயாவின் தாய் பாசத்தினால், அந்த தேவியர்கள் தன் கணவர்களை திரும்ப பெற தவித்து "பர்த்ரா பிக்ஷை" வேண்டியதாகவும் வரலாற்றின் மூலம் நமக்கு தெரிய வருகிறது.

சீதா தேவி:
லட்சுமி தேவியின் அவதாரம் என்றழைக்கப்படும் சீதா தேவி, ஸ்ரீ ராமரின் மனைவியாக இருப்பதே எனக்கு பெருமை என உரைத்தவள். பக்தி கொண்டும், பணிவை கொண்டும், கற்புக்கரசியாகவும், தன்னையே தன் கணவனுக்கு அர்ப்பணித்து வாழ்ந்த பெருமை மிக்கவள் தான் சீதா தேவியாவாள். அவளுக்கு இப்படி எல்லா உயர்ந்த குணங்களும் இருந்தபோதிலும், அவள் இராவணனால் கடத்தப்பட்டு நீண்ட சிறை வாசம் அடைய, தூய்மையற்ற பெண்ணாக பலராலும் தூற்றி பேசப்பட்டாள்.
அவளுடைய கற்பிற்கு எந்த ஒரு கலங்கமும் ஏற்படவில்லை என்பதனை நிரூபிக்க துணிந்த அவள், அக்னீ பரீட்சைக்கு செல்ல வேண்டியிருந்தது. அக்னி தேவனே சாட்சியாக அவளது தூய்மையை பரிசோதிக்க, மீண்டும் ஒரு தாழ்ந்த தாபியால் அவள் தூய்மையற்றவளாக குற்றம் சாட்டப்பட்டாள். அந்த தாபியின் வார்த்தைகளை கேட்ட ஸ்ரீ ராமன், கர்ப்பினி சீதாவை கைவிட்டதாகவும் வரலாறு கூறுகிறது.

சீதா தேவி:
சீதா தேவி, வால்மிகி முனிவரின் ஆசிரமத்தில் தங்கி இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுக்க, அவள் தன் குழந்தையான லவ மற்றும் குஷ்ஷனை ஸ்ரீ ராமனுக்கு ஈடு இணையாக வளர்த்தாள். சரியான நேரத்தின்போது அவள் குழந்தையை தன் கணவனிடம் ஒப்படைத்து மீதி நாள்களை தன் தாய், பூமி தேவியின் மடியில் உறங்கி, இனிமையான பொழுதாக தன் வாழ் நாளினை கழித்துகொண்டிருந்தாள்.

குந்தி:
பஞ்ச கன்யாக்களுள் ஒருவள் குந்தி ஆவாள். எந்த ஒரு கடவுளையும் அழைப்பதற்கான வரம் பெற்ற அவள், அவரிடமிருந்து ஒரு குழந்தை வேண்டி பெற்றாள். அவளுடைய முதல் மகன் கர்ணன் ஆவான். சூரிய பகவான் தான் அவன் தந்தை ஆவார்.
இருப்பினும் அவள் திருமணம் ஆகாமல் அவனை ஈன்றெடுக்க, கர்ணனை அவளால் வளர்க்க முடியாமல் சென்றது. அதனால் தன் வாழ்க்கையில் கர்ணனை உதறிதள்ளினாள். அதுவும் சமுதாயத்தின் பார்வையில் அவன் எவ்வாறு தெரிவான்? என்றதொரு பயத்தில் கர்ணனை விட்டு விலகினாள் குந்தி. இருப்பினும் அந்த வேதனை, அனலாய் அவள் வயிற்றில் எரிந்து, உயிருடன் தீயில் தினமும் அவளை தள்ளிகொண்டிருந்தது.
அதன் பிறகு பாண்டுவை விவாகம் செய்துகொண்ட குந்தி, மூன்று குழந்தைகளை ஈன்றெடுத்தாள். ஆம், யுதிர்ஷ்டர், அர்ஜுனன், மற்றும் பீமனை ஈன்றாள். அவர்கள் தான் நாம் அழைக்கும் தர்ம பிரபு, இந்திர பிரபு, மற்றும் வாயு பிரபு ஆவார். மேலும் குந்தி தேவி, பாண்டுவின் இரண்டாம் மனைவியான மதிரியிடமும் வரத்தை பெற்றாள்.
அஸ்வினி குமாரிடமிருந்து மதிரி, நகுலன் மற்றும் சகாதேவன் என்னும் குழந்தைகளை ஈன்றெடுக்க, சாபத்தின் விமோட்சனம் கிடைக்காமல் மதிரியும் பாண்டுவும் சீக்கிரமே விண்ணுலகம் சென்று சேர்ந்தனர். அதன் பிறகு அந்த ஐந்து ஆண் குழந்தைகளையும் எந்த ஒரு பாரபட்சமும் பார்க்காமல் குந்தி வளர்க்க, அவர்களிடத்தில் அன்பும் மரியாதையும் மிக்க ஒருவளாக தன் வாழ்நாளை, தன் குழந்தைகளுக்காகவே கழித்தாள்.

யசோதா:
யசோதா மிய்யா, கிருஷ்ண பிரபுவின் வளர்ப்பு தாயாவாள். அவள் தன் தத்து குழந்தையான கிருஷ்ணனிடம் அன்பாகவும் பாசமாகவும் இருந்துவர., நாம் இன்று கிருஷ்ணாவின் தாயாக, அவனை வயிற்றில் சுமந்த தேவகியையே அன்புடன் அவன் அன்னையென அழைக்கிறோம்.



Click it and Unblock the Notifications











