Just In
- 14 min ago வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- 40 min ago இனிமே மாம்பழ தோலை தூக்கி எறியாம.. இப்படி டீ செஞ்சு குடிங்க.. இருமடங்கு நன்மை கிடைக்கும்...
- 3 hrs ago 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- 4 hrs ago உங்க கல்லீரல் டேமேஜ் ஆகாம மது அருந்தணுமா? இப்படி மது அருந்துங்க... உங்க கல்லீரலுக்கு எந்த ஆபத்தும் வராது...!
Don't Miss
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- News மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஓவியாவின் இந்த 6 செயல்களை என்றாவது பிக் பாஸில் கவனித்துள்ளீர்களா?
ஓவியாவின் கருத்துகளில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய 6 விஷயங்கள்!
ஓவியா தும்மினால் கூட அதை ஒரு வேதவாக்காக சமூக தளங்களில் பகிரும் அளவிற்கு ஓவியா ஆர்மி படுஜோராக வேலை செய்து வருகிறார்கள்.
விளையாட்டாக வெறும் ஹாஷ்டாக்காக ஆரம்பமான ஓவியா ஆர்மி, இன்று தமிழகத்தின் சில பகுதிகளில் ஃப்ளக்ஸ் போர்டுகளாக உருமாறி இருக்கின்றன. புரட்சி படைகள் வேறு ஆரம்பமாகியிருக்கின்றன.
சரி இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். ஓவியாவிற்கு இவ்வளவு பெரிய ஆர்மி உருவாக முக்கிய காரணம் அவரது பண்பும், குணங்களும் தான்.
"எனக்கு சூசூ வருது போறேன்...", "நீங்க கொஞ்சம் ஷட்டப் பண்ணுங்க" என்பதில் ஆரம்பமானது, "உங்க பேரு என்னால கெடக் கூடாது..." என நிஜமாவே வாழ்க்கையில் ஒரு தத்துவமாக நிற்கும் அளவிற்கு மாறியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா உதிர்த்த சில தத்துவங்கள்...
அழுகை!
எண்ணி"ஒரு விஷயத்துக்கு ஒரு தடவ அழுதுட்டா, அதுக்காக திரும்பவும் அழுக கூடாது."
ஒரு செயலை எண்ணி, எண்ணி பலமுறை அழுவது வேஸ்ட் ஆப் டைம். ஆம்! முதல் முறை இயல்பாக, இயற்கையாக இருக்கலாம். மீண்டும், மீண்டும் அழுவது உங்கள் நேரம், வலிமை, ஆரோக்கியத்தை கெடுக்குமே தவிர, எந்த நன்மையையும் விளைய செய்யாது.
சோகம்!
"எல்லாருக்குள்ளேயும் தான் சோகம் இருக்கு, அதை வெளிப்படுத்தி காட்டிட்டே இருக்கக் கூடாது"
என் சோகம் பெரியது, அவன் சோகம் சிறியது என எதுவும் இல்லை. அதே போல, சோகமே இல்லாத ஜீவனே இந்த உலகில் இல்லை. எல்லாரும் சுவாசிப்பது போல, எல்லாரிடமும் சோகங்கள் இருக்கின்றன. அதை வெளிப்படுத்தி அனுதாபம் தேடுவது, உங்களை வலிமையற்றவராக மாற்றிவிடும்.
வழிமுறை!
"சொல்றத சொல்ற மாதிரி சொன்னன எல்லாரும் கேட்பாங்க"
எந்த ஒரு விஷயத்தையும், யார் ஒருவர் தவறு செய்திருந்தாலும், அவரவர் வயது, அவரவர் முதிர்ச்சிக்கு ஏற்ப எடுத்து சொன்னால் அனைவரும் கேட்பார்கள். அடிமேல் அடி எடுத்து வைத்தால் அம்மியும் நகரும் என்பது போல...
கடுஞ்சொல்!
"அவ நடிக்கிறவளாவே இருக்கட்டும், அதை இந்த நேரத்துல சொல்லி காயப்படுத்தனுமா?"
ஒருவர் தீயவராகவே இருப்பினும், அவர் நோய்வாய்ப்பட்டு அல்லது சோகமாக இருக்கும் போது அவரை குத்திக் காண்பித்து, அவர் என்றோ செய்த தவறை மீண்டும், மீண்டும் சொல்வது அநாகரிகமான செயலாகும்.
வலி!
"உடம்புல இருக்க வலிய விட, மனசுல தான் வலி அதிகமா இருக்கும்..."
உடலில் ஏற்படும் வலி தற்காலிகமானது, மனதில் ஏற்படும் வலி நிரந்திரமானது. எனவே, முடிந்த வரை யார் மனதையும் காயப்படுத்தாமல் நடந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
மதிப்பை கெடுப்பது!
"உங்க பேரு என்னால கெடக் கூடாது..."
யார் ஒருவருடைய பெயரும், மதிப்பும் குறைய நாம் காரணமாகிவிடக் கூடாது. இது நல்ல உறவுகள் மத்தியிலும் விரிசல் ஏற்பட காரணமாகிவிடும்.