குடிபோதையில் நாயை கற்பழித்த காமுகன் - பரிதாபமாக இறந்த நாய் குட்டி!

குடிபோதையில் நாயை கற்பழித்த காமுகன் - பரிதாபமாக இறந்த நாய் குட்டி!

பத்து மாதம் ஆன கை குழந்தை, மூன்று வயது குழந்தை, பதின் வயது சிறுமி, பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள், வேலைக்கு சென்று வீடு திரும்பும் பெண்கள் என வேட்டையாடி வந்த மனித மிருகம், பெண்களை மட்டுமல்ல, இனி இரவில் நாய்களை கூட தெருவில் நடமாடவிடாது!

Drunkard Man Raped A Puppy In India!

(மாதிரிப்படம்) Image Credit: blogspot

ஆம்! டெல்லியில் ஒரு டாக்ஸி ஓட்டுனர் ஒரு நாய் குட்டியை கற்பழித்து, கொலை செய்துள்ளான். இங்கே பெண்களுக்கு இந்த கதி ஏற்பட்டாலே சட்டம் மெல்ல, மெல்ல தான் தீர்ப்பளிக்கும்.. வாயில்லா ஜீவன் அது... இதற்கு எப்படி தீர்ப்பளிக்கும்.....?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டாக்ஸி ஓட்டுனர்!

டாக்ஸி ஓட்டுனர்!

நாயை கற்பழித்த அந்த குடி போதை காமுகன் டெல்லியை சேர்ந்த 34 வயதுமிக்க டாக்ஸி ஓட்டுனர். நாயை கற்பழித்து இரத்த கொட்டும் நிலையில் இருந்த அந்த பரிதாப பிராணியை வீசி சென்றுள்ளான்.

தனது காம இச்சைக்கு வாயில்லா பிராணியை பலிவாங்கியிருக்கிறது அந்த "தெரு நாய்"

சாக்கு பை!

சாக்கு பை!

அந்த குடிகார ஓட்டுனரும் அவரது தம்பியும் சேர்ந்து அந்த பரிதாப பிராணியை ஒரு சாக்கு பையில் போட்டு அருகே இருந்த ஒரு ஒதுக்கு புறமான இடத்தில் வீசியுள்ளனர்.

குற்றம்!

குற்றம்!

அந்த காலனியில் இருந்த பிராணிகள் மீது அக்கறை கொண்ட ஒரு நபர் இதை கண்டுள்ளார். அவர் மிகுந்த காயங்களுடன் அந்த பரிதாப பிராணியை கண்டெடுத்துள்ளார்.

பிறகு அவர் மக்களிடம் விசாரித்ததில் அந்த ஓட்டுனர் தான் குற்றம் செய்தார் என அறிய வந்தது. அதை அந்த குடிகார ஓட்டுனரும் எந்த தயக்கமும் இல்லாமல் ஓப்புக் கொண்டார் .

உலாவி கொண்டிருக்கும் மிருகம்!

உலாவி கொண்டிருக்கும் மிருகம்!

நாய் என்றும் பாராமல் கற்பழித்து கொன்ற அந்த மிருகம் இன்னும் வீதியில் மிக சாதாரணமாக உலாவிக் கொண்டிருக்கிறது. அந்த பரிதாப பிராணியை கண்டெடுத்த பெண்மணி, இறந்தது கூட தெரியாமல், நாய்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கே மருத்துவர்கள் நாய் இறந்துவிட்டதை கூறியுள்ளனர்.

அந்த நாயை கற்பழிக்கப்பட்டதற்கு எந்த தடயமும் இல்லாமல் அழித்துள்ளனர். எந்த மிருகமும் கூட இப்படி ஒரு செயலை செய்யாது., மனித மிருகத்தை தவிர.

நாம் எந்த மாதிரியான ஒரு சூழல் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்பதை எண்ணி பார்த்தால் ஆத்திரமும், கோபமும் தான் வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion