Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா?
இராமாயணத்தில் பெண்களின் மோசமான குணங்கள் என ராவணன் கூறியுள்ளவை!
பெண்கள், சரியான நேரத்தில் தைரியத்தை வெளிப்படுத்த வேண்டும். பெண்கள் தவறான இடத்தில், தவறான நேரத்தில் தைரியத்தை வெளிபடுத்தினால் வருங்காலத்தில் அவர்கள் மனம் நோக செய்யும் என ராவணன் கூறியுள்ளார்.
ஆண், பெண் இருவரின் பொது இயல்புகள், குணங்கள் என பலவன நமது புராணங்கள் மற்றும் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன. அதில், காவிய புராணமான இராமாயணத்தில் ராவணன் பெண்களின் மோசமான குணங்கள் என கூறியவை என்னென்ன என்று இங்கு காணலாம்...

#1
பெண்களின் தைரியம் போற்றப்பட வேண்டியவை, மதிக்கப்பட வேண்டியவை. ஆனால், பெண்களின் அதீத தைரியம் எதிர்மறை தாக்கங்களில் கொண்டு சென்று விடும்.
பெண்கள், சரியான நேரத்தில் தைரியத்தை வெளிப்படுத்த வேண்டும். பெண்கள் தவறான இடத்தில், தவறான நேரத்தில் தைரியத்தை வெளிபடுத்தினால் வருங்காலத்தில் அவர்கள் மனம் நோக செய்யும் என ராவணன் கூறியுள்ளார்.

#2
ராவணன் கூறியுள்ள கூற்றுகளில், பெண்கள் பொய் பேசுவதில் மட்டுமல்ல, பொய்களை பரப்புவதிலும் வல்லவர்கள். இது அவர்களையே பாதிக்கும் தீயே பழக்கம். இது எப்போது வேண்டுமானாலும் அவர்களை, அவர்களது வாழ்க்கையை பாதிக்கக் கூடும் என கூறியுள்ளார்.

#3
பெண்களை எளிதாக திசை திருப்பிவிடலாம். அவர்கள் கவன கூர்மை குறைவு. இதனால்,பெண்கள் எதை வேண்டுமானலும் நம்பும்படி செய்து விடலாம் என ராவணன் கூற்றில் பெண்களின் தீய குணாதிசயங்களில் ஒன்றாக கூறப்பட்டுள்ளன.

#4
ஒரு விஷயத்தை திருத்தி கூற வேண்டும் அல்லது அவர்களுக்கு எதிராக திசை திருப்ப வேண்டும் என்றால் அந்த சதி வேலையை பெண்கள் கச்சிதமாக செய்து முடிப்பார்கள். இதை பெண்கள் அவர்களது வாழ்நாளில் ஒருமுறையாவது செய்து விடுவார்கள் என இராவணன் கூறியுள்ளார்.

#5
தைரியம் மட்டுமல், பெண்களிடம் அச்சமும் அதிகம். ஒரு தருணத்தில் தைரியமாக இருக்கும் அதே பெண், மறு தருணத்திலேயே மிகவும் பயந்து காணப்படுவார்.
மேலும், அவர்களது விருப்பத்திற்கு மாறாக எந்த விஷயமும் நடந்து விட கூடாது என அவர்கள் மிகவும் அச்சம் கொள்வார்கள் என்றும் ராவணன் கூறியுள்ளார்.

#6
பெண்கள் அதிகபிரசங்கித்தனத்தில் அடிக்கடி முட்டாள்த்தனமான செயல்களை செய்து விடுவார்கள். வேகத்தில் யோசிக்காமல் முடிவு எடுத்துவிடுவார்கள்.

#7
பெண்களின் வழியில் நீங்கள் தவறு செய்யாத வரையிலும் தான் அவர்கள் உங்களுக்கு அன்பானவர், மறக்கும் குணம் கொண்டவர். இயற்கையாக கனிவான மனம் கொண்டவர்கள் என போற்றப்பட்டாலும்.
ஒருமுறை நீங்கள் அவரது வாழ்வில் தவறு இழைத்து விட்டால், அன்று முதல் அவர்கள் எதற்கும் மன்னிக்க மாட்டார்கள். உங்கள் எதிராக கொடூரமாக செயல்படுவார்கள் என ராவணன் கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications











