நிர்வாணப்படுத்தி, சங்கிலியால் கட்டிவைத்து புனர்வாழ்வு மையத்தில் பாலியல் வன்கொடுமை!

ஐதராபாத் புனர்வாழ்வு மையத்தில் 32 வயதுமிக்க பெண் ஒருவர் சங்கிலியால் கட்டிவைத்து, நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை உட்படுத்தப்பட்டுள்ளார்.

காந்தி என்று ஒரு நாள் பெண் நடு இரவில் சுதந்திரமாக நடந்து செல்கிறாளோ என்ற ஒரு நாடு முழு சுதந்திரம் பெறும் என கூறியிருந்தார். அந்த வகையில் பார்த்தால் நமது நாடு இன்றளவும் அடிமையாக தான் இருக்கிறது.

பெண்களுக்கு தெருக்களில் செல்ல மட்டும் தான் சுதந்திரம் இல்லை என பார்த்தால்..., புனர்வாழ்வு மையங்களில் கூடவும் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

இதோ! ஐதராபாத் புனர்வாழ்வு மையத்தில் கொடுமையான முறையில் சித்திரவதைக்கு ஆளான பீகார் பெண்ணின் நிலை...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடந்த 2014!

கடந்த 2014!

கடந்த 2016 டிசம்பர் 6ம் நாள் இவரை உள்ளூர் தெரு ஒன்றில் கண்டு மீட்கப்பட்டு போலீசார் ஐதராபாத் அரம்கர் புனர்வாழ்வு மையத்தில் ஒப்படைத்தனர்.

யார் இவர்?

யார் இவர்?

இந்த பெண் பீகாரை சேர்ந்தவர் என அறியப்படுகிறது. இவரது பெயர் ரேணுகா என்றும். இவரது வயது 32 இருக்கும் எனவும் குறிப்புகளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

வன்கொடுமை!

வன்கொடுமை!

புனர்வாழ்வு மையத்தில் ரேணுகாவை ஆடைகளை இன்று நிர்வாணப்படுத்தியும். அவரை ஒரு மோசமான தரையில் சங்கிலியால் கட்டி வைத்து பாலியல் வன்கொடுமை செய்து சித்திரவதை செய்துள்ளனர்.

யார் என்றே தெரியாது?

யார் என்றே தெரியாது?

பல நாட்களாக தொடர்ந்து சித்திரவதை அனுபவித்து வரும் ரேனுகாவிற்கு யார் இதை செய்கிறார்கள் என்றே தெரியாது. ஆனால், அங்கிருக்கும் நபர்களில் தான் சிலர் இவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி வந்துள்ளனர்.

இருட்டிய பிறகு!

இருட்டிய பிறகு!

மாலை இருட்டிய பிறகு யாரோ வருகிறார்கள் என தெரியும். வந்து எனது ஆடைகளை இழத்து தவறான முறையில் தீண்ட செய்வார்கள். இருட்டாக இருப்பதால் யார் என அறிய முடியவில்லை.

ஒருமுறை நான் அவர்களை இருட்டில் தாக்க முயன்றேன். ஆனால், தவறுதலாக வேறு யாரையோ அடித்து விட்டேன் என ரேணுகா கூறுகிறார்.

பெண் பாதுகாப்பு...

பெண் பாதுகாப்பு...

பெண்களுக்கு தெருக்களில் செல்ல தான் சுதந்திரம் இல்லை என்றால்/ புனர்வாழ்வு மையத்தில் கூடவா? என்ற பெரும் அச்சத்தை மக்கள் மத்தியில் இந்த நிகழ்வு உண்டாக்கியுள்ளது.

நம் நாட்டில் நாளுக்கு, நாள் பெண் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகிவருவதை இந்த நிகழ்வு வெட்டவெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion