Latest Updates
-
4 முட்டை இருந்தா இந்த செட்டிநாடு ஸ்டைல் குருமாவை டக்குனு பண்ணுங்க... தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்...! -
அழகான இதயமும், தூய்மையான ஆன்மாவும் கொண்ட 4 ராசிகள் இவர்கள்தான்... உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க...
பிணத்துடன் உறவுக் கொண்டு கர்ப்பமான சவக்கிடங்கு ஊழியர்!
பிணத்துடன் உறவுக் கொண்டு கர்ப்பமான சவக்கிடங்கு ஊழியர், 60-க்கும் மேற்ப்பட்ட பிணங்களுடன் உடலுறவு கொண்டார் என வைரலாகி வரும் செய்தி உண்மையா, பொய்யா?
வைரல் மற்றும் டிரென்ட்டிங் என்ற இரண்டு வார்த்தைகள் சுற்றி பின்னப்படும் ஒரு வாழ்வியல் ஓட்டத்தில் நாம் இன்று ஓடி வருகிறோம். பலர் சேர்ந்து செய்யும் ஒரு விஷயம் இன்டர்நெட்டில் டிரென்ட் ஆகிறது. பலரை ஈர்க்க ஒருசில பரப்பிவிடும் ஒரு விஷயம் வைரல் ஆகிறது.

அப்படி ஒருசில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததாக நம்பப்பட்ட ஒரு விஷயம், சமீப ஒரு சில நாட்களாக மீண்டும் இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது. சவக்கிடங்கில் பணியாற்றி வந்த பெண் பிணத்துடன் உறவுக் கொண்டு கர்ப்பமானார் என்ற செய்தி தான் அது.
இது உண்மையா? பொய்யா? எங்கு நடந்தது, குற்றம் சாட்டப்பட்ட அந்நபர் யார் என்பது பற்றி இனிக் காணலாம்...

புகார்!
சவக்கிடங்கில் பணியாற்றும் பெண் ஊழியர், அடக்கம் செய்ய வைத்திருந்த பிணத்துடன் உடலுறவில் ஈடுப்பட்டு கர்ப்பமானது தெரிய வந்ததால் கைது செய்யப்பட்டார்.

சம்பவம்!
சமீப தினங்களாக இன்டர்நெட்டில் வைரலாகி வரும் இந்த சம்பவம், உண்மையில் நடந்தது கடந்த நவம்பர் 11, 2010-ல். டெட் சீரியஸ் என்ற செய்தி இணையம் தான் முதன்முதலில் இந்த சம்பவம் குறித்த செய்தியை வெளியிட்டது.
அந்த செய்தியில் சவக்கிடங்கு ஊழியை பிணத்துடன் உடலுறவில் ஈடுப்பட்டு கருத்தரித்தார் என கூறப்பட்டிருந்தது.

மௌர்னிங் குளோரி!
மௌர்னிங் குளோரி சவக்கிடங்கு இடத்தில் தான் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. சவக்கிடங்கில் பிணங்களை குளிப்பாட்டி வைக்கும் நடைமுறை இருக்கிறது.
சில சமயங்களில் இதுபோன்ற நிகழ்வுகளின் போது சடலங்களில் விறைப்பு உண்டாகும் வாய்ப்பிருக்கிறது என கூறப்படுகிறது. இது போன்ற சமயத்தில் தான் அந்த பெண் சடலத்துடன் உடலுறவுக் கொண்டார் என குற்றம் சாட்டப்பட்டதாக செய்திகளில் வெளியாகியுள்ளன.

பல சடலங்களுடன் உறவு?
அந்த பெண் பல சடலங்களுடன் உறவில் ஈடுப்பட்டுள்ளார் என்றும். 17 -71 வயது வரையிலான 60 சடலங்களுடன் அவர் உறவில் ஈடுப்பட்டதாகவும் அந்த பெண் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது, என்ற செய்திகளும் பரவி வருகின்றன.

உண்மையா? பொய்யா?
பிணத்துடன் உறவுக் கொண்டு கர்ப்பமான சவக்கிடங்கு ஊழியர், 60-க்கும் மேற்ப்பட்ட பிணங்களுடன் உடலுறவு கொண்டார் என வைரலாகி வரும் செய்தி பொய் என்றும், அந்த பெண்ணுக்கு பிறந்த மகனின் தந்தை ஒரு கார் விபத்தில் கடந்த 2015-ல் தான் இறந்தார் என்றும் கன்சாஸ் சிட்டி மிசூரி போலீசார் கூறியுள்ளனர்.

இன்டர்நெட் மாயை!
இன்டர்நெட்டில் பல பழைய, புதைந்த செய்திகள் எல்லாம் திடீர், திடீர் என விஸ்வரூபம் எடுப்பது சாதாரணம். அதில் பலவன, அவரவர் சொந்த கலவைகளுடன் தான் பதிவு செய்யப்படுகின்றன. அவற்றில் இதுவும் ஒன்று.



Click it and Unblock the Notifications











