Just In
- 3 hrs ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- 8 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 11 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 12 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
Don't Miss
- News அரசியல் வாழ்க்கையே ஓவர்? தாமரையை நம்பி போய் சேற்றில் சிக்கிட்டாரே.. இளம் தலைக்கு பாஜக வைத்த ஆப்பு
- Movies டாடா பட நடிகை அபர்ணா தாஸின் ஹல்தி கொண்டாட்டம்..களைகட்டிய திருமணம்!
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
செயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொண்ட பாலிவுட் பிரபலங்கள்!!!
என்ன தான் பணம் சம்பாதித்தாலும், அவர்களுக்கு குழந்தை இல்லாவிட்டால், சம்பாதித்தும் எந்த ஒரு புண்ணியமும் இல்லை. குழந்தை பாக்கியம் பெறுவது என்பது மிகப்பெரிய வரம் என்று சொல்லலாம். ஏனெனில் குழந்தை பெற முடியாமல் இவ்வுலகில் பலர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மேலும் அதற்காக பல தம்பதிகள் கோவில் கோவிலாக எல்லாம் ஏறி இறங்கியிருப்பார்கள்.
திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான பிரபல இந்திய நடிகைகள்!!!
ஆனால் இன்றைய நவீன மருத்துவ உலகில், செயற்கை முறையில் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க முடியும். அப்படி நம் பாலிவுட்டில் பல பிரபலங்கள் செயற்கை முறையில் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளனர். அதில் சிலர் வெளிச் சோதனை முறை கருக்கட்டல் (IVF) முறையையும், இன்னும் சிலர் IVF வாடகைத்தாய் மூலம் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளனர்.
நடிகைகளுடனான உறவினால் கட்டிய மனைவிக்கு துரோகம் செய்த இந்திய பிரபலங்கள்!!
இங்கு செயற்கை முறையில் குழந்தைப் பெற்றுக் கொண்ட பாலிவுட் பிரபலங்களை பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!
வெளிச் சோதனை முறை கருக்கட்டல் (IVF)
இந்த முறைப்படி, ஆணின் விந்தணுவை கருமுட்டையுடன் நன்கு ஒன்றிணையச் செய்து, பின் தாயின் கருப்பைக்குள் செலுத்தி வளரச் செய்வதாகும்.
IVF வாடகைத்தாய் (IVF Surrogacy)
இந்த முறைப்படி, கருமுட்டை மற்றும் விந்தணுவானது, மற்றொரு பெண்ணின் கருப்பைக்குள் உட்செலுத்தப்பட்டு பெற்றெடுக்கும் முறை. இந்த முறையில் பிறக்கும் குழந்தைக்கு வாடகைத்தாயின் குணாதிசயங்கள் நிச்சயம் இருக்காது.
ஃபராஹ் கான் மற்றும் ஷிரிஷ் குந்தர்
ஷிரிஷ் குந்தர் 40 வயது இருக்கும் ஃபராஹ் கானை திருமணம் செய்து கொண்டார். பின் இரண்டு வருடங்கள் குழந்தையைப் பெற்றெடுக்க முயற்சித்து தோல்வியைத் தழுவினர். இறுதியில் ஃபராஹ் கான் IVF முறையை தேர்ந்தெடுத்து, 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி, மூன்று குழந்தையை பெற்றெடுத்தார்.
அமீர் கான் மற்றும் கிரண் ராவ்
நடிகர் அமீர் கானுக்கு தன் முதல் மனைவியின் மூலம் இரண்டு குழந்தை ஏற்கனவே உள்ளது. ஆனால் தனது இரண்டாவது மனைவியான கிரண் ராவ்வுடன் IVF முறையின் மூலம் அசாத் என்னும் அழகான ஆண் குழந்தையை 2011 ஆம் ஆண்டு பெற்றெடுத்தார். மேலும் அமீர் கான், குழந்தை பெற்றெடுக்க முடியாமல் தவிக்கும் தம்பதியரை, இம்முறையின் மூலம் குழந்தையைப் பெற்றெடுக்குமாறு வலியுறுத்துகிறார்.
சோகைல் மற்றும் சீமா கான்
சோகைல் கான் மற்றும் சீமா, முதல் குழந்தை பிறந்து 10 வருடங்கள் கழித்து இரண்டாம் குழந்தையைப் பெற்றெடுக்க முடிவெடுத்தனர். மேலும் அதற்காக IVF வாடகைத்தாய் முறையை தேர்ந்தெடுத்து, இரண்டாம் குழந்தையை 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பெற்றெடுத்தனர். இந்த தம்பதியருக்கு 1998 ஆம் ஆண்டு திருமணமானது குறிப்பிடத்தக்கது.
மகேஷ் மற்றும் ஹஸீனா ஜெத்மலானி
பாலிவுட்டின் மற்றொரு பிரபலமான கான் குடும்பம் தான் இது. ஃபேஷன் டிசைனரான ஹஸீனா மற்றும் வக்கீலான மகேஷ், IVF முறை மூலம் இரட்டையர்களைப் பெற்றெடுத்தனர். மேலும் இவர்களுக்கு முதல் குழந்தை பிறந்து 10 வருடங்களுக்கு பின் இந்த இரட்டையர்கள் பிறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாருக்கான் மற்றும் கவுரி கான்
பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் மற்றும் கவுரி கான் தம்பதியினருக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது தெரியும். ஆனால் திடீரென்று அவர்கள் ஒருநாள் குழந்தை ஒன்றை பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு அழைத்து வந்தனர். அந்த குழந்தை யார் என்று பார்த்தால், அக்குழந்தை IVF வாடகைத்தாய் மூலம் பெற்றெடுத்த குழந்தை என்று தெரிய வந்தது.