For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜெகநாத் ரத யாத்திரையின் முக்கியத்துவம்!

By Ashok CR
|

ஒடிசாவில் இருக்கும் பூரியில் ரத யாத்திரை தொடங்கிவிட்டது. ஒடிசாவில் உள்ள மக்கள் பெரிதளவில் எதிர்பார்க்கும் நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும். இந்த இடத்தின் முக்கிய கடவுளான ஜகநாதருக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வான இது, அடிப்படையில் ஓர் தேர் திருவிழாவாகும். ரத யாத்திரையின் போது பூரி கோவிலில் உள்ள தெய்வங்களை தேரில் வைத்து அருகில் உள்ள கோவிலுக்கு யாத்திரையாக கொண்டு செல்வார்கள். கடவுளுடன் கூடிய தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள், கடவுளுக்கு செய்யும் சேவையாக எண்ணி இழுத்து வருவார்கள்.

பூரி கோவிலில் உள்ள இட யாத்திரை 5000 வருடம் பழமையானதாகும். இந்தியாவில் உள்ள அநேகமான ஜகநாத கோவில்களில் ரத யாத்திரை என்ற இந்த திருவிழா ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது. ஆனால் ஒடிசாவில் உள்ள பூரியில் இது மிகவும் பகட்டாரவாரத்துடன் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஜெகநாதர், பாலபத்ரா மற்றும் சுபத்ரா ஆகிய மூன்று கடவுள்களின் சிலைகளை ஏற்றி செல்ல மரத்தில் புதிய ரதங்கள் செய்யப்படும்.

இதுப்போன்று வேறு: கடந்த வருட ரத யாத்திரையின் படங்கள்!

இந்த ரத வேலையை அக்ஷய திரிதியை அன்று தச்சர்கள் தொடங்குவார்கள். வண்ணமயமான வர்ணங்கள் பூசப்பட்ட இந்த ரதம், சிகப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிற கவிகையால் மூடப்பட்டிருக்கும். பொதுவாக ஜெகநாதரின் ரதம் சிவப்பு மற்றும் மஞ்சள் கவிகையை கொண்டிருக்கும். பாலபத்ராவின் ரதம் சிவப்பு மற்றும் பச்சை கவிகையை கொண்டிருக்கும். சுபத்ராவின் ரதம் சிவப்பு மற்றும் கருப்பு கவிகையை கொண்டிருக்கும்.

ரத யாத்திரை 2014 என்பது தவற விடக்கூடாத ஒரு கண்கொள்ளா காட்சியாகும். சரி இப்போது இந்த ரத யாத்திரையின் முக்கியத்துவத்தைப் பற்றி பார்ப்போமா...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Is So Special About Rath Yatra?

The Rath Yatra 2014 is just round the corner. The Rath Yatra in Puri is popular throughout the world. Take a look as to what is so special about the Rath Yatra.
Desktop Bottom Promotion