Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
50 ஆண்டுகளுக்கு பின் 2024ல் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு பண மழை கொட்டப்போகுது...
Navpancham Rajyoga 2024 After 50 Years: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் மாறுகின்றன. அப்படி மாறும் போது சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் குரு, சூரியன் மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள் 2024-ல் இரட்டை நவபஞ்ச ராஜயோகத்தை உருவாக்குகின்றன. இந்த இரட்டை நவபஞ்ச ராஜயோகமானது சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கவுள்ளது. இதனால் இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் நல்ல நிதி நன்மைகளையும், தொழிலில் நல்ல முன்னேற்றங்களையும் காணவுள்ளார்கள். அதோடு வெற்றி மேல் வெற்றியைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த இரட்டை நவபஞ்ச ராஜயோகமானது மங்களகரமானதாக இருக்கப் போகிறது. முக்கியமாக அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நிதி நிலையில் நல்ல முன்னற்றம் ஏற்படப் போகிறது. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சிலர் ஜனவரி 14 ஆம் தேதிக்குள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த சில நல்ல செய்திகளைப் பெறலாம். வெளிநாடு செல்ல வேண்டுமென்ற ஆசையைக் கொண்டிருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இரட்டை நவபஞ்ச ராஜயோகமானது நற்பலன்களை வாரி வழங்கும். முக்கியமாக வருமானத்தில் உயர்வு ஏற்படும். வேலை மற்றும் வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழில்நுட்பம், ஆசிரியர் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு இக்காலகட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏற்கனவே நீங்கள் முதலீடுகளை செய்திருந்தால், இக்காலத்தில் அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் திருமணமானவர்கள் தங்கள் திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இரட்டை நவபஞ்ச ராஜயோகமானது அற்புதமான பலன்களை வழங்கும். அதுவும் நீண்ட நாட்களாக நீதிமன்ற வழக்குகள் நடந்து கொண்டிருந்தால், இக்காலத்தில் அதில் வெற்றி கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரத்திலும் நல்ல வெற்றியைப் பெறக்கூடும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வைப் பெறலாம். சிலர் விரும்பிய இடமாற்றத்தைப் பெற வாய்ப்புள்ளது. புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறு. வணிகர்களுக்கு நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











