Latest Updates
-
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்!
20 வருடமாக கொஞ்சம் கொஞ்சமாக வங்கியில் திருடிய நிஜ லக்கி பாஸ்கர்... எத்தனை கோடி திருடியிருக்காங்க தெரியுமா?
சமீபத்தில் வங்கிகளின் பின்னணியில் நடைபெறும் பொருளாதார குற்றங்கள் குறித்த திரைப்படங்கள் அதிகமாக வருகிறது. 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் ஒரு வங்கி ஊழியர் எப்படி பணத்தை திருடுகிறார் என்பதை சுவாரஸ்யமாக காட்டி ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்தது. சுவாரஸ்யமாக இருந்தாலும் அது வெறும் திரைப்படம் மட்டுமே. ஆனால் ஒரு பெண் நிஜ லக்கி பாஸ்கராக பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார்.
ஜப்பானின் டோக்கியோவைச் சேர்ந்த 46 வயது வங்கி ஊழியர் ஒருவர், பல ஆண்டுகளாக செய்து வந்த ஒரு துணிச்சலான குற்றத்தால் அனைவரையும் திகைக்க வைத்துள்ளார். MUFG வங்கியில் பணிபுரிந்த யுகாரி இமாமுரா, வங்கியின் லாக்கர்களில் இருந்து ரூ.55 கோடி மதிப்புள்ள தங்கத்தைத் திருடி, அவரின் நிறுவனத்துக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளார். அவர்தான் அந்த நிஜ வாழ்க்கை லக்கி பாஸ்கர்.

யார் இந்த பெண்?
ஜப்பானைச் சேர்ந்த வயதான பெண்மணியான யுகாரி, பல கிளைகளில் உள்ள லாக்கர்களை நிர்வகிக்கும் பணியைப் பெற்றதன் மூலம் இந்த கதை தொடங்கியது. அவசரநிலைகளுக்காக வைக்கப்பட்டிருந்த நகல் சாவிகளை அணுக அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மேலாளரின் சாவியின் நகலை ரகசியமாக உருவாக்கினார், இதனால் எளிதில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அவரால் தவிர்க்க முடிந்தது. ஏப்ரல் 2020 மற்றும் அக்டோபர் 2024 க்கு இடையில், லாக்கர்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை குறிவைத்து, யுகாரி தனது கொள்ளையை மிக நுணுக்கமாகச் செயல்படுத்தினார்.
ஒரு சாதாரண வங்கி வேலையில் கிடைக்கும் சம்பளத்தில் நினைத்து பார்க்க முடியாத ஆடம்பர வாழ்க்கையை அவர் வாழ்ந்தார். அவர் கொஞ்சம் கொஞ்சமாக திருடிய செல்வத்தின் மூலம் தன்னால் வாங்க முடியாத பொருட்களை அவர் வாங்கினார். அவருடைய திடீர் மாற்றமும், ஆடம்பர வாழ்க்கையும் உடன் பணிபுரிபவர்களுக்கு சந்தேகங்களை எழுப்பியது, இது டோக்கியோ காவல்துறையினரின் முழுமையான விசாரணைக்கு வழிவகுத்தது. விசாரணையில் உண்மைகள் வெளிவந்தபோது, அவருடைய குற்றத்தின் அளவும் அதன் மதிப்பும் வங்கியையும், அதன் வாடிக்கையாளர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
யுகாரியின் செயல்களால் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் மதிப்புமிக்க பொருட்கள் சேதமடைந்துள்ளதாகவும், காணாமல் போயுள்ளதாகவும் ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு லாக்கர் நிர்வாகத்தில் வெளிப்படையான பாதுகாப்பு குறைபாடுகளை அடிக்கோடிட்டுக் காட்டியது, இதனால் வங்கிகள் தங்கள் கொள்கைகளை மறு மதிப்பீடு செய்யத் தூண்டின. யுகாரி இப்போது சட்ட நடவடிக்கையை எதிர்கொள்கிறார், இதனால் அவரின் வாழ்க்கை இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.
எப்படி கொள்ளையை அரங்கேற்றினார்?
கிளையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சாவிகளைத் திருடுவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்தி யுகாரி இமாமுரா தனது சொந்த சாவியைப் பயன்படுத்தி அவற்றை நகலெடுத்தார். பின்னர் அவர் இந்த போலி சாவிகளைப் பயன்படுத்தி லாக்கர்களை அணுகினார், அங்கு அவர் நகைகள் மற்றும் தங்கக் கட்டிகளைத் திருடத் தொடங்கினார்.
வாடிக்கையாளர்கள் தங்கள் லாக்கர்களை பார்க்க வரும்போது, மின் தடை ஏற்பட்டதாக அவர்களுக்குத் தெரிவிப்பார், பின்னர் திரும்பி வருமாறு அறிவுறுத்துவார். இப்படி சென்ற வாடிக்கையாளர்கள், ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை மீண்டும் அங்கு செல்வதில்லை, இதனால் அவர் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு கணிசமான அளவு நகைகள் மற்றும் பணத்தைத் திருடத் தொடங்கினார். இதை அவர் கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கும் மேல் செய்து வந்துள்ளார்.



Click it and Unblock the Notifications
