அந்தப்புரத்தில் 350 பெண்கள் முதல் ஹிட்லரின் ஆடம்பர கார் பரிசு வாழ்ந்த இந்தியாவின் வினோத அரசர் யார் தெரியுமா?

இந்திய வரலாற்றில் பல கம்பீரமான மற்றும் விசித்திரமான அரசர்கள் இருந்துள்ளனர். சில அரசர்கள் தீவிரமாக போர்களில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் சில அரசர்கள் ஆடம்பர வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்றவர்களாக இருந்தார்கள், ஆனால் ஒரு இந்திய அரசர் நம் கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தார்.,

அவர் 350 பெண்களை தனது அந்தப்புரத்தில் வைத்திருந்தார், மேலும் ஒரு நாளுக்கு 20 பவுண்டு உணவுகளை உட்கொண்டார். அவர்தான் பாட்டியாலா சமஸ்தானத்தின் மகாராஜா பூபிந்தர் சிங், அவர் இந்திய வரலாற்றின் மிகவும் ஆடம்பரமான இந்திய அரசர்களில் ஒருவராக இருந்தார்.

Indian King Who Got a Lavish Car From Adolf Hitler

புகழ்பெற்ற பாட்டியாலா அந்தப்புரம் முதல் புகழ்பெற்ற பாட்டியாலா நெக்லஸ் வரை, இந்த ஆடம்பர நிகழ்வுகளுக்குப் பின்னால் இருந்தவர் பூபிந்தர் சிங். 1891 ஆம் ஆண்டு ஜாட் சீக்கிய புல்கியன் வம்சத்தில் பிறந்த பூபிந்தர் சிங், தனது ஒன்பதாவது வயதில் அரியணை ஏறினார்.

விளையாட்டில் ஆர்வம்

லாகூரில் உள்ள Aitchison கல்லூரியில் படித்த அவர், விளையாட்டுகளில் குறிப்பாக கிரிக்கெட் மற்றும் போலோவில் ஆர்வமுள்ளவராக விளங்கினார், அதை அவர் தனது வாழ்நாள் முழுவதும் ஆர்வத்துடன் தொடர்ந்தார். அவரது ஆட்சி அதிகாரபூர்வமாக 1910 இல் தொடங்கியது, அவர் இந்தியாவின் வைசிராய் மூலம் முழு அதிகாரத்துடன் ஆட்சியாளராக செயல்பட்டார்.

மகாராஜா பூபிந்தர் சிங்கின் வினோத உணவுப் பழக்கம்

அவர் ஒரு நாளைக்கு 20 பவுண்டுகள் உணவை உட்கொண்டார், மேலும் தேநீர் நேர சிற்றுண்டியாக 2 கோழிகளை சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். லாரி காலின்ஸ் மற்றும் டொமினிக் லாபியர் ஆகியோர் தங்கள் "நள்ளிரவில் சுதந்திரம்" என்ற புத்தகத்தில் மகாராஜாவின் உணவுப்பழக்கத்தை பற்றி எழுதியிருந்தார்கள். மகாராஜா பூபிந்தர் சிங் ஒரு குருவியின் மூளையை சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

மகாராஜா பூபிந்தர் சிங்கின் அரண்மனை

மகாராஜா பூபிந்தர் சிங் உடல் வேட்கையில் தீவிர ஆர்வம் கொண்டவராக இருந்தார், அவர் அதற்காகவே ஒரு அரண்மனையை உருவாக்கினார், அந்த அரண்மனையில் 350 பெண்கள் இருந்தனர். மேலும், அவர் பிரான்ஸ் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்களின் குழுவை வைத்திருந்தார், அவர்கள் அரசரின் விருப்பத்திற்கு ஏற்ப பெண்களின் உடலில் மாற்றங்களை செய்தனர். தனது விருப்பங்களை நிறைவேற்ற அவர் எவ்வளவு தூரம் செல்வார் என்பதை இந்த சம்பவம் நிரூபித்தது.

"பாட்டியாலாவில், மகாராஜா தனது அந்தப்புரத்தில் தனக்கு பிடித்த பெண்களை தனது பனிக்கட்டி நீச்சல் குளத்தைச் சுற்றி நிற்க வைப்பார் என்று கூறப்பட்டது, அவர் நீந்தும் போது இடையில் அவர்களிடமிருந்து விஸ்கியை வாங்கி குடிப்பார்" என்று பூபிந்தர் சிங் பற்றிய ஜேம்ஸ் ஷெர்வுட்டின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுஉள்ளது.

1935 ஆம் ஆண்டு, ஜெர்மன் அதிபர் அடால்ஃப் ஹிட்லர் பூபிந்தர் சிங் ஜெர்மனிக்கு விஜயம் செய்தபோது அவருக்கு ஒரு ஆடம்பரமான மேபாக் காரை பரிசளித்தார், ​​இது மகாராஜா பூபிந்தர் சிங்கின் வாழ்க்கை பற்றிப் பேசப்படும்போது குறிப்பிடப்படும் முக்கியமான சம்பவங்களில் ஒன்றாகும். இந்த நேர்த்தியான வாகனம் மகாராஜாவிற்கும் ஜெர்மன் தலைவருக்கும் இடையிலான சிறப்பு பிணைப்பைக் குறிக்கிறது.

Desktop Bottom Promotion