Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
முகேஷ் அம்பானியின் 15000 கோடி பங்களாவை விட மிகப்பெரிய அரண்மனையை கட்டிய இந்திய அரசர் யார் தெரியுமா?
இந்தியாவின் முகேஷ் அம்பானியின் 15000 கோடி மதிப்புள்ள அதிநவீன சொகுசு பங்களாவை விட ஆடம்பரமான ஒரு கட்டிடம் உள்ளது என்றால் அது லட்சுமி விலாஸ் அரண்மனைதான். இந்தியாவின் மிகப்பெரிய வசிப்பிடமாக கருதப்படும் லட்சுமி விலாஸ் அரண்மனை குஜராத்தின் வதோதராவில் அமைந்துள்ளது.
இந்த பிரமாண்ட அரண்மனை 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மகாராஜா சாயாஜிராவ் கெய்க்வாட் III அவர்களால் கட்டப்பட்டது. இது இந்தியா மட்டுமல்ல உலகின் மிகப்பெரிய தனியார் இல்லமாகக் கருதப்படுகிறது. இங்கிலாந்து அரச குடும்பத்தினர் வசிக்கும் பக்கிங்ஹாம் அரண்மனையை விட லட்சுமி விலாஸ் அரண்மனை நான்கு மடங்கு பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், மகாராஜா சாயாஜிராவ் கெய்க்வாட் III வீட்டு கழிப்பறைக்கும் பெருமை சேர்த்துள்ளார் என்பதை ஒரு சிலர் மட்டுமே அறிவார்கள்.

உலகின் மிகப்பெரிய தனியார் வீட்டை கட்டிய மன்னர் யார்?
1875 முதல் 1939 வரை பரோடாவின் ஆட்சியாளராக இருந்த மகாராஜா மூன்றாம் சாயாஜிராவ் கெய்க்வாட், தனது திறமையான ஆட்சிக்கும், ஆடம்பர வாழ்க்கைக்கு மட்டுமின்றி, சீர்திருத்தவாத நடவடிக்கைகளுக்கும் பிரபலமானவர். பக்கிங்ஹாம் அரண்மனையை விட நான்கு மடங்கு பெரிய லட்சுமி விலாஸ் அரண்மனையை அவர் கட்டினார் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் வீடுகளுக்குள்ளேயே கழிப்பறைகள் என்ற கருத்தை அறிமுகப்படுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார் என்பது சிலர் மட்டுமே அறிந்த விஷயமாகும். அவர் "தொலைநோக்கு மன்னர்(The Visionary King)" என்றும் அழைக்கப்படுகிறார்.
கடந்த காலங்களில் கிராமப்புறங்களில், திறந்தவெளியில் மலம் கழிப்பது ஒரு பொதுவான நடைமுறையாக இருந்தது. மக்கள் காடுகள், வயல்கள் அல்லது ஆற்றங்கரைகளுக்குச் செல்வார்கள். நாளடைவில் கழிப்பறை குழிகள் மற்றும் கையில் எடுத்துச்செல்லும் தொட்டிகள் போன்ற மாற்று வழிகள் கிடைத்தன, ஆனால் அவை பெரும்பாலும் பணக்கார குடும்பங்களின் வீடுகளில் மட்டுமே காணப்பட்டன.
மகாராஜா சாயாஜிராவ் கெய்க்வாட்-ன் சுகாதார திட்டம்
மகாராஜா மூன்றாம் சாயாஜிராவ் கெய்க்வாட் 1875 முதல் 1939 வரை பரோடா மாநிலத்தை ஆட்சி செய்தார். ஒரு மாநிலத்தின் வளர்ச்சியில் ஆரோக்கியம், கல்வி மற்றும் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை அவர் நன்கு உணர்ந்தவராக இருந்தார். "கழிப்பறை இல்லாத வீடு முழுமையடையாது" என்று அவர் உறுதியாக நம்பினார்.
வீடுகளில் கழிப்பறைகள் கட்ட உத்தரவிட்டபோது மகாராஜா எதிர்ப்பைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது, ஏனெனில் அந்த நேரத்தில் பலர் வீட்டிற்குள் கழிப்பறை இருப்பது தூய்மையற்றது என்று கருதினர். வீட்டிற்குள் கழிப்பறைகள் கட்டுவதற்கு பொதுமக்களின் எதிர்ப்பு தெரிவித்ததை அறிந்த மகாராஜா, புத்திசாலித்தனமாக அரச கருவூலத்திலிருந்து மானிய விலையில் கழிப்பறைகளை வழங்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த முயற்சி பயனுள்ளதாக இருந்ததால், பொதுமக்கள் கழிப்பறைகள் கட்டுவது எளிதாகிவிட்டது, மேலும் எதிர்ப்பு மெதுவாகக் குறைந்தது.
பொது மற்றும் தனியார் தளங்களில் திறந்தவெளி மலம் கழிப்பதைத் தடுக்க மகாராஜா சுகாதார ஆய்வாளர்களை நியமித்தார். அவரது நிர்வாகம் சுகாதாரத்தை மேம்படுத்த பல திட்டங்களை நிறுவியது, இது அவரை இந்தியாவில் நவீன சுகாதார இயக்கத்தின் முன்னோடியாக மாற்றியது.



Click it and Unblock the Notifications
