அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம்

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில் இந்தியாவிற்கு ஒரு மிகப்பெரிய நல்ல செய்தி கிடைத்துள்ளது. இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடந்து வரும் போரினால் எண்ணெய் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தும், ஹார்முஸ் முனை மூடப்பட்டதால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மிகப்பெரிய நற்செய்தியை இந்தியா பெற்றுள்ளது.

India Hits A Gold Jackpot Massive Amount of Gold in Andhra Pradesh

ஆந்திரப் பிரதேசத்தில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மாபெரும் தங்கச் சுரங்கம் விரைவில் தனது செயல்பாடுகளைத் தொடங்க உள்ளது. இந்த தங்கச் சுரங்கம் அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் 1,000 கிலோ தங்கம் வரை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இந்த சுரங்கம் பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் பெரிய அளவிலான தங்கச் சுரங்கத் தொழிலின் மீள்வருகையைக் குறிப்பதாகவும், இந்தியா ஆண்டுதோறும் இறக்குமதி செய்யும் தங்கத்தின் அளவை கணிசமாக குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கம்

சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் அமையப்போகும் முதல் பெரிய தனியார் தங்கச் சுரங்கமான 'ஜொன்னகிரி தங்கத் திட்டத்தை' தொடங்கிவைக்க தென்னிந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசம் தயாராகி வருகிறது. இந்த திட்டத்திற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே மாதத் தொடக்கத்தில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இத்திட்டத்தை முறைப்படி நாட்டிற்கு அர்ப்பணிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் எந்த இடத்தில் உள்ளது?

இந்த தங்கச் சுரங்கம், கர்நூல் மாவட்டத்தில் உள்ள எர்ரகுடி, பகிடிராய் மற்றும் ஜொன்னகிரி ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் அமைந்துள்ளது. ஏறத்தாழ 600 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள சின்ஹா திட்டம், ஆய்வு நிலையிலிருந்து மேம்பட்ட கட்டுமான நிலைக்கு முன்னேறி, தற்போது உற்பத்தி நிலையை எட்டி வருகிறது.

இந்த பகுதியில் எவ்வளவு தங்கம் உள்ளது?

ஆந்திரப் பிரதேச சுரங்கங்கள் மற்றும் புவியியல் துறையின்(Andhra Pradesh Department of Mines and Geology) கூற்றுப்படி, இந்த பகுதியில் 13.1 டன் தங்கம் இருப்புள்ளதாகச் சான்றளிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த பகுதியில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகள், இங்குள்ள மொத்த தங்கத்தின் அளவு 42.5 டன் வரை எட்டக்கூடும் என்பதைக் காட்டுவதால், இது இந்திய வரலாற்றில் மிகப்பெரிய கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.

இந்த தங்கச் சுரங்கம் யாருடையது?

இந்தியாவின் பிரபல சுரங்கத் தொழில் அதிபர் பி. பிரபாகரனும் அவரது குடும்பத்தினரும், 'Thriveni Earthmovers', 'Prakar' மற்றும் 'Lloyds Metals and Energy' ஆகிய நிறுவனங்களின் வாயிலாக 'Jonnagiri' திட்டத்தை முன்னின்று நடத்தி வருகின்றனர். 'Geomysore Services (India)' நிறுவனத்தின் 70 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகள், 'Thriveni Earthmovers' மற்றும் 'Lloyds Metals and Energy' ஆகிய நிறுவனங்களின் நிர்வாக இயக்குநரான பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினரின் வசம் உள்ளன.

இந்தியாவின் தங்க இறக்குமதி

இந்தியா தற்போது ஆண்டுதோறும் சுமார் 1,000 டன் தங்கத்தை இறக்குமதி செய்து வருவதால், கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாகத் தங்கத்தை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா திகழ்கிறது. எனவே இந்த கண்டுபிடிப்பு வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது. 2025-26 நிதியாண்டில், தங்கத்தின் விலை உயர்வால், தங்க இறக்குமதி சாதனை அளவாக 71.98 பில்லியன் டாலரை (721.03 டன்கள்) எட்டியுள்ளது.

பங்குச்சந்தை மாற்றம்

Geomysore Services India Pvt Ltd நிறுவனம், இந்த சுரங்கத்தை மேம்படுத்துவதற்காக ₹400 கோடிக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்துள்ளது. இந்த சுரங்கம் அடுத்த 15 ஆண்டுகளுக்கு, ஆண்டுதோறும் 1,000 கிலோ வரையிலான சுத்திகரிக்கப்பட்ட தங்கத்தை உற்பத்தி செய்வதை இலக்காகக் கொண்டுள்ளது. முதல் ஆண்டில் 400 கிலோகிராம் தங்கத்தை வெட்டியெடுப்பதன் மூலம், சுமார் 60% EBITDA லாப வரம்புடன், ₹300 கோடி முதல் ₹350 கோடி வரையிலான வருவாயை ஈட்ட முடியும் என்று அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது. Deccan Gold Mines நிறுவனத்தின் 'ஜொன்னகிரி' (Jonnagiri) திட்டம் தொடக்க நிலையை நெருங்கியதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் பங்கு விலைகள் 16% வரை உயர்ந்தன. கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும், Deccan Gold Mines பங்குகளின் மதிப்பு 24% அதிகரித்துள்ளது. இந்த திட்டம் தொடங்கப்பட்ட பிறகு இதன் மதிப்பு மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, April 23, 2026, 10:16 [IST]
Desktop Bottom Promotion