Latest Updates
-
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்.. -
சர்க்கரை நோயாளிகளுக்கான டாப் 5 காய்கறிகளை பட்டியலிட்ட டாக்டர்! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
நெல்லை ஸ்டைல் தலக சாம்பார் ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க - ஒரு வாரம் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது! -
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க..
Ileana D'Cruz: திடீரென்று கர்ப்பமாக இருப்பதை அறிவித்து அதிர்ச்சியளித்த இலியானா: இதற்கு அவர் தான் காரணமா?
Ileana D'Cruz: நடிகை இலியானா டி குரூஸ் 'நண்பன்' திரைப்படத்தில் தனது அழகான ஒல்லியான இடுப்பால் பல ரசிகர்களைக் கவர்ந்தவர். இவர் தெலுங்கில் நிறைய திரைப்படங்களை நடித்திருந்தாலும், தமிழிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இலியானா இன்று காலை இரண்டு போட்டோக்களை வெளியிட்டு, ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார். அதாவது தான் கர்ப்பமாக இருப்பதை தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோக்களின் மூலம் தெரிவித்துள்ளார்.
இலியானா இன்ஸ்டாவில் தனது கர்ப்பத்தை போட்டோக்களின் மூலம் தெரிவித்ததும், அவரது தயார் சமீரா டி குரூஸ் "எனது புதிய பேரக் குழந்தையை விரைவில் உலகிற்கு வரவேற்கிறோம்" என்று பதிலளித்திருந்தார். மேலும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இலியானாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் சிலர் இவரது வாழ்க்கைத் துணையை அறிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இலியானா அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட போட்டோக்கள் இவை தான்.
சில மாதங்களாக நடிகை இலியானா டி குரூஸ் கத்ரீனா கைப்பின் சகோதரரான செபாஸ்டின் லாரன்ட் மைக்கேலுடன் டேட்டிங்கில் இருப்பதாக ஒரு வதந்தி பரவியது. ஏனெனில் மாலத்தீவில் நடந்த கத்ரீனாவின் பிறந்தநாள் பார்ட்டியில், கத்ரீனாவின் சகோதரருடன் இலியானாவும் கலந்து கொண்டார்.
இது தவிர 'காபி வித் கரன்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில், கத்ரீனா கைஃப்பிடம் கரன் ஜோஹர் ஒரு கேள்வி கேட்டார். அது, நீங்கள் மாலத்தீவில் உங்கள் பிறந்தநாளை கொண்டாடும் போது எடுக்கப்பட்ட சில போட்டோக்களைக் கண்டோம். அந்த போட்டோக்களைப் பார்க்கும் போது என் தலையில் ஒருசில கணக்கு ஓடுகிறது. அதுவும் அது சற்று வேகமாக இருப்பது போன்று தெரிகிறது என்றார்.
அதற்கு கத்ரீனா, "கரன் கண்களில் இருந்து எதுவும் தப்ப முடியாது போல் உள்ளதே!" என்று உறுதிப்படுத்தும் வகையில் மறைமுகமாக பதிலளித்தார். கத்ரீனாவின் இம்மாதிரியான ஒரு பதில், இலியானா மற்றும் செபாஸ்டின் உறவை உறுப்படுத்தும் வகையில் உள்ளது.
இருப்பினும் இலியானா இதுக்குறித்து எந்த ஒரு அறிவிப்பும் தெரிவிக்கவில்லை. விரைவில் இலியானாவே இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்று நம்புவோம்.



Click it and Unblock the Notifications
