Latest Updates
-
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா?
தமிழ் புத்தாண்டுக்கு பூஜை பாத்திரங்கள் பளபளன்னு மின்ன வேண்டுமா..? அப்படினா இதை ட்ரை பண்ணுங்கள்..!
சித்திரை மாதம் முதல் நாளை, புது வருடப்பிறப்பு விழாவாகக் கொண்டாடுகிறோம். சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கத் தொடங்குவது இந்த சித்திரை மாதத்தில் தான். வருடப் பிறப்பன்று நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் அந்த வருடம் முழுவதும் நமது வாழ்க்கையை வளப்படுத்தும் என்பது ஐதீகம். அதனால் அன்று தமிழர்கள் அனைவரும் வீட்டில் பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.
அப்படி பூஜை செய்வதற்கு முன்பு பூஜையறையையும், பூஜை பாத்திரங்களையும் சுத்தம் செய்வதை பெண்கள் வழக்கமாக கொண்டிருப்பார்கள். இவ்வாறு சுத்தம் செய்து வைக்கும் பூஜை பாத்திரங்கள் ஓரிரு நாட்களில் கருத்து விடுகின்றன. அல்லது கருப்பு அடைந்து மங்கலாக தொற்றமளிக்கும். இவற்றை எளிதாக அகற்றி பூஜை பொருட்களை புதியது போல் பளபளவென்று மாற்ற வீட்டில் இருக்கும் இந்த 3 பொருட்கள் போதும்...அது என்னென்ன பொருட்கள்? அவற்றை எப்படி பயன்படுத்தி சுத்தம் செய்வது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

1. பூஜை சம்பந்தமான விஷயங்களை செய்யும் பொழுது மிகவும் கவனமாக செய்ய வேண்டும். வீட்டை சுத்தம் செய்வது, பூஜை அறையை சுத்தம் செய்வது, பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய் கிழமையில் செய்வது என்பதை தவிர்த்து விடவும். அதுவும் இதுபோல புருவருட பிறப்பு, அமாவாசை, மாத பிறப்பு வரும் போது வெள்ளி அல்லது செவ்வாய் கிழமையில் வந்தால் அதற்கு முன்பே சுத்தம் செய்தல் நல்லது.
2. அப்படி வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய் கிழமையில் செய்தால் நமது வீட்டில் உள்ள அதிர்ஷ்ட தேவதை வெளியேறி விடுமாம். எனவே இது போன்ற தினங்களில் பூஜை செய்ய வேண்டிய வேலை இருந்தால் அதற்கு ஒரு முதல் நாளே சுத்தம் செய்யும் வேலைகளை முடித்து வைத்து விடுங்கள்.
3. முதலில் பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு முன்னர் அவற்றில் இருக்கும் எண்ணெய் பிசுக்குகளை ஒரு துணி வைத்து துடைத்துக் கொள்ள வேண்டும்.
4. பின்னர் இவை அனைத்தையும் ஒரு அகன்ற பாத்திரத்தில் வைத்து, அந்த பாத்திரங்கள் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி எலுமிச்சைப்பழ அளவு புளியை அதில் கரைத்துவிட வேண்டும்.
5. பிறகு இந்த பாத்திரத்தை அடுப்பை பற்ற வைத்து சூடுபடுத்த வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்து பாத்திரங்களில் உள்ள எண்ணெய் பிசுக்குகள் அனைத்தும் பிரிந்து வரும்.
6. அதற்குப் பின்னர் அடுப்பை அனைத்து பாத்திரங்களை சுடு தண்ணீரில் இருந்து வெளியே எடுக்க வேண்டும்.
7. பிறகு ஒரு சிறிய கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் அளவு ஹேண்ட்வாஷ் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் 2 ஸ்பூன் பல் துலக்கும் பேஸ்ட் மற்றும் ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக அறிந்து அதன் சாறை இவற்றுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
8. பிறகு தண்ணீரை சுத்தமாக துடைத்து விட்டு வீட்டில் சாதாரணமாக பயன்படுத்தும் விபூதியை ஒரு துணியில் லேசாக தொட்டு பூஜை பாத்திரங்கள் முழுவதையும் துடைத்து விட்டால் பூஜை பாத்திரங்கள் நல்லா பளபளப்புடன் மின்னும். அதுமட்டுமல்லாமல் அவ்வளவு சீக்கிரமாக கருக்காமல் இருக்கும்.
9. சிலர் வெள்ளியிலான பூஜை பாத்திரங்கள் வைத்திருப்பார்கள். அவை சிறிது காலத்தில் மங்கிவிடும், நிறம் கறுத்துக் காணப்படும். வெள்ளி உலோகத்தில் ஏற்படும் வேதியியல் வினைகளே இதற்குக் காரணம். அவற்றை எப்படி சுத்தம் செய்வது என்றும் இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
10. ஓர் அகன்ற பாத்திரத்தில் எலுமிச்சை பழத்தை பிழிந்துவிடவும். அதில் சிறிதளவு உப்பு சேர்த்து, அதனுடன் வெந்நீர் சேர்த்துக் கலந்து வைக்கவும். அதில் வெள்ளிப் பொருள்களை ஊறவைத்து 5 நிமிடங்கள் கழித்து எடுத்து, வெள்ளைத் துணி கொண்டு துடைக்கவும். அழுக்குகள் நீங்கும்.
11. ஒரு சிறிய கிண்ணத்தில் சோப் பவுடர் சேர்த்து, அதில் வெந்நீர் ஊற்றி கலந்து வைக்கவும். இதில் வெள்ளிப் பொருள்களை ஊற வைக்கவும். இதை 5 - 7 நிமிடங்களுக்குப் பின் எடுத்து பிரஷ் கொண்டு தேய்த்து, மிருதுவான காட்டன் துணியால் துடைத்தால் பளிச்சென இருக்கும்.
12. வினிகர், தண்ணீர் மற்றும் பேக்கிங் சோடா ஆகியவை சேர்ந்த கலவை வெள்ளிப் பொருள்களுக்கு மிகச் சிறந்த பராமரிப்பு முறை. ஒரு கிண்ணத்தில், வெதுவெதுப்பான நீரில் 1/2 கப் வெள்ளை வினிகர், 2 தேக்கரண்டி பேக்கிங் சோடா எனக் கலக்க வேண்டும். மிகவும் ஒளி மங்கிய வெள்ளிப் பொருள்களை, இரண்டு முதல் மூன்று மணி நேரம் அதில் ஊற வைக்கவும். பின் அவற்றை எடுத்து குளிர்ந்த நீரில் அலசி உலர்த்தவும்.



Click it and Unblock the Notifications











