Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
உலகின் அழிவுக்கு இந்த 5 விஷயங்களில் ஒன்றுதான் காரணமாக இருக்கப்போகுதாம்... என்னென்ன தெரியுமா?
உலகின் முடிவு என்பது தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகும், ஆனால் அது எப்போது எப்படி என்பதுதான் தெரியாத ரகசியமாகும். உலகின் அழிவு எப்படி இருக்கும் என்று பல நூற்றாண்டுகளாக மனிதர்களை பயமுறுத்தி வருகிறது. பூமியின் இறுதி அத்தியாயம் எப்படித் தொடங்கும் என்று இன்னும் சரியாகத் தெரியவில்லை, ஆனால் அதைப்பற்றி பல்வேறு கோட்பாடுகள் வெளிவந்துள்ளன.
இந்த கோட்பாடுகள் ஒவ்வொன்றும் உலகம் எவ்வாறு முடிவுக்கு வரும் என்பது குறித்து வெவ்வேறு பார்வைகளைக் கொண்டுள்ளன. இந்த கோட்பாடுகள் அண்ட நிகழ்வுகளிலிருந்து மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளுக்கான காரணங்கள் வரை வேறுபடுகின்றன. உலகம் எப்படி முடிவடையும் என்ற பழைய கேள்விக்கு இந்த கோட்பாடுகளில் ஒன்று பதிலாக இருக்கலாம்.

விண்கற்களால் ஏற்படும் பேரழிவு
உலகின் முடிவைப் பற்றிய மிகவும் பிரபலமான கோட்பாடுகளில் ஒன்று விண்கற்களால் ஏற்படும் பேரழிவாகும். சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய சிறுகோள் மோதியதால் டைனோசர்கள் அழிந்துவிட்டன என்று நம்பப்படுவதால், மனிதர்களின் அழிவும் அப்படியே இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. தற்போது அப்படி ஒரு நிகழ்வு நடந்தால் அது பேரிழப்பை ஏற்படுத்தும். இந்த மோதல் ஒரு பெரிய அளவிலான ஆற்றலை வெளியிடும், இது உலகளாவிய அழிவு, தீ மற்றும் சுனாமிகளை ஏற்படுத்தும்.
வளிமண்டலத்தில் பரவும் தூசி மற்றும் குப்பைகள் சூரிய ஒளியை கூட தடுக்கலாம், இது கடும் குளிர்கால விளைவுக்கு வழிவகுக்கும், இதன் விளைவாக காலநிலை மாறும் மற்றும் பூமியில் உள்ள பெரும்பாலான உயிர்களை அழிக்கக்கூடும். அத்தகைய பேரழிவைத் தடுக்க நாசாவும் பிற விண்வெளி நிறுவனங்களும் தற்போது பூமிக்கு அருகில் உள்ள பொருட்களைக் கண்காணித்து வருகின்றன.
எரிமலை வெடிப்பு
மிகப்பெரிய எரிமலை வெடிப்புகள், உலகின் முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என்று ஒரு கோட்பாடு கூறுகிறது. வழக்கமான எரிமலை வெடிப்புகளிலிருந்து இவை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும், இந்த எரிமலைகள் மிகப்பெரிய அளவில் மாக்மா, சாம்பல் மற்றும் வாயுக்களை வளிமண்டலத்தில் வெளியிடுகின்றன. கடைசியாக அறியப்பட்ட சூப்பர் எரிமலை வெடிப்பு சுமார் 74,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேசியாவில் உள்ள டோபா கால்டெராவில் ஏற்பட்டது, மேலும் இது உலகளவில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இப்போது ஒரு சூப்பர் எரிமலை வெடித்தால், அது "Volcanic Winter" வழிவகுக்கும். இதிலிருந்து வெளிப்படும் சாம்பல் சூரிய ஒளியைத் தடுக்கும் மற்றும் வெப்பநிலையை பாதாளத்திற்கு தள்ளும், இது விவசாயம் மற்றும் உணவு விநியோகத்தை கடுமையாகப் பாதிக்கும், இதனால் உலகம் முழுக்க பட்டினி அதிகரிக்கும். சூப்பர் எரிமலை வெடிப்புகள் மற்றும் அவற்றின் சாத்தியமான உலகளாவிய தாக்கம் புவியியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.

வானிலை மாற்றங்கள்
காடுகளை அழித்தல் மற்றும் அதிக ரசாயன பயன்பாடு உள்ளிட்ட மனித நடவடிக்கைகளால் ஏற்படும் காலநிலை மாற்றம் பூமியில் உயிரினங்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறலாம். உலகளாவிய வெப்பநிலையின் தொடர்ச்சியான அதிகரிப்பு பனிக்கட்டிகளை உருகச் செய்கிறது, இது கடல் மட்டத்தை உயர்த்துகிறது, மேலும் தீவிர வானிலை மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
இது செய்யப்படாவிட்டால், காலநிலை மாற்றம் பூமியின் சில பகுதிகளை உயிரினங்கள் வாழ முடியாததாக மாற்றும், மேலும் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும். சூறாவளி, வறட்சி மற்றும் வெப்ப அலைகள் போன்ற கடுமையான காலநிலை நிகழ்வுகளால் உலகம் கொஞ்சம் கொஞ்சமாக முடிவுக்கு வரும்.
அணு ஆயுதப்போர்
தற்போது உலகின் மிகவும் பயமுறுத்தும் சூழ்நிலைகளில் ஒன்று, அணு ஆயுதப்போர் நடைபெறுவதற்கு உள்ள சாத்தியமாகும். அணு ஆயுதங்களின் வெடிப்புகள் உடனடி அழிவு மற்றும் மிகப்பெரிய உயிர் இழப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் நீண்டகால சுற்றுச்சூழல் பாதிப்பையும் ஏற்படுத்தும்.
"Nuclear Winter" என்ற கருத்து, எரியும் நகரங்கள் மற்றும் காடுகளின் புகை சூரிய ஒளியைத் தடுக்கும், அதன் மூலம் உலக வெப்பநிலையைக் குறைக்கும். இது விவசாயத்தின் வீழ்ச்சிக்கும், உணவுப் பற்றாக்குறைக்கும், உலகம் முழுவதும் பரவலான பஞ்சத்திற்கும் வழி வகுக்கும். கூடுதலாக, அணுசக்தி வீழ்ச்சியின் கதிர்வீச்சினால் ஏற்படும் உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் பேரழிவை ஏற்படுத்தலாம்.
செயற்கை நுண்ணறிவு
செயற்கை நுண்ணறிவால் உலகம் முடிவுக்கு வரலாம் என்று ஒரு கோட்பாடு கூறப்படுகிறது. பல ஹாலிவுட் திரைப்படங்களிலும் கூறப்பட்டுள்ளது. மனித வாழ்க்கையின் பல அம்சங்களை இது எளிதாக்கப் போகிறது என்றாலும், சில வல்லுநர்கள் ஒரு சூப்பர் புத்திசாலித்தனமான இயந்திரம் உருவாக்கும் ஆபத்துகள் மனித அறிவை விட அதிகமாக இருக்கும் என்றும், AI அதன் கட்டுப்பாட்டை மீறினால் அல்லது வளர்ச்சியடைந்தால் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றனர். உலகின் மிகப்பெரிய செல்வந்தரான எலோன் மஸ்க் செயற்கை நுண்ணறிவிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார், இதே கருத்தை பல நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.



Click it and Unblock the Notifications











