Latest Updates
-
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம்
வாரத்தின் இந்த நாளில் மட்டும் கடன் வாங்கிறாதீங்க... இல்லனா உங்க வாழ்க்கை முழுக்க நீங்க கஷ்டப்படுவீங்க...!
செவ்வாய் கிழமை வாரத்தின் முக்கிமான நாட்களில் ஒன்றாகும். மரபுரீதியாக இந்த நாட்களில் சில விஷயங்களை செய்வது பாவச்செயலாக கருதப்படுகிறது. செவ்வாய்கிழமையன்று நகங்களையோ முடியையோ வெட்டக்கூடாது என்று பலமுறை கேள்விப்பட்டிருப்பீர்கள்.
உண்மையில் சிலர் இந்த நாளில் அசைவம் சாப்பிடுவதைக் கூட தவிர்க்கிறார்கள். இதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா? செவ்வாய் கிழமையில் ஏன் சில பொருட்களை கடன் வாங்கக்கூடாது என்பதையும், கடன் வாங்குவது, நகம் வாங்குவது போன்ற சில செயல்களுக்கு அந்த நாள் ஏன் மிகவும் சாதகமற்றதாக கருதப்படுகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஏன் செவ்வாய் கிழமைகளில் கூடாது?
இது பல நூற்றாண்டுகளாக உள்ளது, இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. செவ்வாய்கிழமை போர் மற்றும் மோதலின் நாளாக அறியப்படுவது முக்கிய காரணங்களில் ஒன்றாகும். மேலும் இந்த நாளில் கடன் வாங்குவது உங்கள் வாழ்க்கையில் துரதிர்ஷ்டத்தைத் தரும் என்று மக்கள் நம்புகிறார்கள். மேலும், யாரிடமாவது ஒரு பொருளைப் பெற்றாலோ அல்லது ஒருவரிடம் ஒரு பொருளைக் கடனாகக் கொடுத்தாலோ அது துரதிர்ஷ்டத்தைத் தரும் என்பது நம்பிக்கை.
காரணம்
செவ்வாய்க்கிழமையில் கடன் வாங்கக்கூடாது என்பதற்கு பல காரணங்கள் உள்ளது, ஆனால் மிகவும் பிரபலமான விளக்கங்களில் ஒன்று செவ்வாய் ஒரு காலத்தில் போரின் கடவுளான செவ்வாய் கிரகத்துடன் தொடர்புடையது. இந்த நாளில் கடன் வாங்குவது உங்கள் வாழ்க்கையில் குழப்பத்தையும் அழிவையும் கொண்டுவரும் என்பது நம்பிக்கை.
செவ்வாய்க்கிழமை ஏன் இவற்றை செய்யக்கூடாது?
- செவ்வாய்கிழமையன்று நீங்கள் ஒருவரிடமிருந்து எதையும் எடுத்துக் கொண்டால், நீங்கள் நிதி துரதிர்ஷ்டத்தை எதிர்கொள்ள நேரிடும். நீங்கள் பண இழப்பைச் சந்திக்கலாம் மற்றும் பணத்திலும் செல்வத்திலும் இழப்பை அனுபவிக்கலாம்.
- உங்கள் வாழ்க்கையில் எதிர்மறை ஆற்றல் மற்றும் துரதிர்ஷ்டம் அதிகரிக்கலாம்.
- செவ்வாய் கிழமை கடன் வாங்குவது நடத்தையில் மாற்றத்திற்கு வழிவகுக்கும். நீங்கள் தவறான செயல்களுக்கு பலியாகலாம்.
- செவ்வாய் கிழமையில் நீங்கள் கடன் வாங்கினால், நீங்கள் தீராத கடன் சிக்கலில் மாட்டிக்கொள்ள வாய்ப்பு உள்ளது. மேலும் நீங்கள் இந்த நாளில் வாங்கும் கடனை அடைக்க முடியாமல் போகலாம்.
செவ்வாய் கிழமை கடன் வாங்குவது உங்களுக்கு எப்படி தீங்கு விளைவிக்கும்?
செவ்வாய் பெரும்பாலும் புதிய முயற்சிகளைத் தொடங்க அல்லது கடன் வாங்க ஒரு நல்ல நாளாகக் கருதப்படுகிறது. இருப்பினும், செவ்வாய்க்கிழமை கடன் வாங்குவது துரதிர்ஷ்டவசமாக கருதப்டுவதற்கு பல காரணங்கள் உள்ளன.
- இந்த நாளில் பணம் அல்லது பிற பொருட்களைக் கடனாகப் பெறுவதில் உள்ள அபாயங்கள் உங்கள் நிதிநிலைக்கு பெரும் தீங்கு விளைவிக்கும்.
- செவ்வாய் தங்கள் ஜாதகத்தில் தவறான இடத்தில் கொண்டவர்களுக்கு துரதிர்ஷ்டத்தை ஈர்க்கிறது. எனவே, செவ்வாய் கிழமையில் எந்தவொரு நிதி முடிவையும் எடுப்பது உங்கள் நிதிநிலையில் சிக்கல்களை எதிர்கொள்ள வைக்கலாம்.
- நீங்கள் வியாபாரம் செய்பவராக இருந்தால், இந்த நாளில் எந்த ஒப்பந்தமும் செய்யாமல் இருப்பது நல்லது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, செவ்வாய் கிழமை உங்கள் வியாபாரத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். எனவே, இந்த நாளில் நீங்கள் யாருக்காவது கடன் கொடுக்க நினைத்தால், அவ்வாறு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
- செவ்வாய் கிழமை கடன் வாங்குவது அதனை திருப்பி செலுத்துவதை தாமதமாக்குகிறது. எனவே, மாணவர்களும், வேலையில் இருப்பவர்களும் யாரிடமிருந்தும் எதையும் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
- நீங்கள் புதிய ஆடைகளை அணிந்தாலோ அல்லது நெருங்கிய நபரிடம் இருந்து ஒன்றை எடுத்துக் கொண்டால், அது உங்களுக்கு தீங்கு விளைவிப்பதோடு, உங்கள் வாழ்க்கையில் கடினமான நேரங்களை அனுபவிக்கச் செய்யும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
