Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
குழந்தைகள் தினத்தன்று உங்கள் வாழ்க்கையை அழகாக்கும் குழந்தைகளுக்கு இத சொல்ல மறந்துடாதீங்க!
Happy Children's Day 2025 Wishes in Tamil: யாருக்கு தான் குழந்தைகள் பிடிக்காது. மகிழ்ச்சியை வாரி வழங்கும் குழந்தைகளை கொண்டாடும் வகையில், குழந்தைகள் தினம் உலகின் பல நாடுகளில் ஆண்டுதோறும் வெவ்வேறு நாட்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, நவம்பர் 14, 1889 இல் பிறந்தார். இவர் குழந்தைகள் மீது மிகவும் அன்பு கொண்டவராக இருந்ததால், குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். குழந்தைகள் நேருவை பாசமாக 'நேரு மாமா' என்று அழைத்தனர். அவரது நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளை நாம் குழந்தைகள் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ஆம் தேதி இந்தியா முழுவதும் குழந்தைகள் தினம் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு தேசத்தின் உண்மையான பலமாகவும் சமூகத்தின் அஸ்திவாரமாகவும் குழந்தைகளை கருதினார் நேரு.
குழந்தைகள் மீது அவர் கொண்டிருந்த அன்பு மற்றும் அவர்களது முன்னேற்றத்தில் அவர் காட்டிய அக்கறை ஆகியவற்றின் காரணமாக அவரது பிறந்த நாளை இந்தியாவில் குழந்தைகள் தினமாகக் கொண்டாடி வருகிறோம். இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள வாழ்த்துக்களை உங்களுக்கு பிடித்த குழந்தைகளுக்கு குழந்தைகள் தினத்தன்று தெரிவியுங்கள்.

வாழ்த்து 1
இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 2
இன்று குழந்தைகள் தினம் கொண்டாடும் மழலைகள் அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 3
கோயில் எதற்கு தெய்வங்கள் எதற்கு உனது புன்னகை போதும்! அன்பு குழந்தைகளுக்கு குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 4
ஒவ்வொரு குழந்தையும் சிறப்பு மற்றும் தனித்துவமானது. அவர்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கையை உறுதி செய்வதன் மூலம் அவர்களின் குழந்தைப்பருவத்தை மறக்கமுடியாததாக மாற்றுவோம். குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!

வாழ்த்து 5
உங்கள் இல்லத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 6
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பர். குழந்தையின் சிரிப்பில் இறைவனை காண்போம். இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 7
இந்த சிறப்பு நாளில் உலகெங்கிலும் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு அன்பான வாழ்த்துக்கள். குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!

வாழ்த்து 8
அனைத்துக் குழந்தை செல்வங்களும், நாட்டின் வருங்கால தூண்கள். இந்தியாவின் வருங்கால தூண்களுக்கு குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 9
இந்த உலகில் மிகவும் விலைமதிப்பற்ற விஷயம் ஒரு குழந்தையின் முகத்தில் வரும் புன்னகை. உலகிலுள்ள ஒவ்வொரு குழந்தைகளுக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 10
குழந்தைகளின் அன்பு உலகம் என்பது முற்றிலும் மாறுபட்டது. மகிழ்ச்சி உலகில் இருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் குழந்தைகளுக்கு தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 11
பொறாமை, பழிவாங்குதல், ஏமாற்றுதல் போன்ற எந்த எண்ணமும் இல்லாமல் வெகுளியாய் இருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 12
எல்லாருடைய வாழ்க்கையின் இனிமையான காலம் என்றால், அது அவர்களின் குழந்தைப்பருவமாகும். அனைத்து குழந்தைகளுக்கும் மகிழ்ச்சியான குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!



Click it and Unblock the Notifications