Latest Updates
-
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்!
குரு-ராகுவால் உருவான சண்டாள தோஷம்: ஜூன் 21 முதல் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
Guru Rahu Made Chandal Dosh: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இயக்கம் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கிரகங்கள் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் ஒரே ராசியில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கை நிகழும்.
அப்படி கிரகங்களின் சேர்க்கை நிகழும் போது, அதனால் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். இப்படி உருவாகும் யோகங்கள் நற்பனை அளித்தால், அது யோகங்கள் என்றும், அதுவே கெடுபலனை அளித்தால், அது தோஷம் என்றும் அழைக்கப்படுகிறது.

அந்த வகையில் 2023 ஏப்ரல் 21 ஆம் தேதி குரு பகவான் மேஷ ராசியில் நுழைந்தார். அந்த ராசியில் நுழையும் போது, ஏற்கனவே அந்த ராசியில் ராகு பயணித்து வந்ததால், குரு மற்றும் ராகுவின் சேர்க்கையால் குரு சண்டாள யோகம் அல்லது சண்டாள தோஷம் உருவானது. இந்த தோஷத்தின் போது குரு வலிமையிழந்தும், ராகு வலிமையாகவும் இருப்பார்.
இந்நிலையில் குரு மற்றும் ராகுவின் சண்டாள தோஷம் நீங்கவுள்ளது. ஏனெனில் குரு பகவான் அஸ்வினி நட்சத்திரத்தில் இருந்து பரணி நட்சத்திரத்திற்கு செல்கிறார். இதனால் ராகு அஸ்வினி நட்சத்திரத்தில் இருப்பதால், இந்த சண்டாள தோஷம் நீங்குகிறது. இந்த தோஷம் நீங்குவதால் 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு குரு சண்டாள தோஷம் நீங்குவதால், ஜூன் 21 முதல் நல்ல காலமாக இருக்கும். மேலும் மிதுன ராசியின் லக்ன வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. அதே வேளையில் பத்ரா ராஜயோகமும் உருவாகிறது. இதனால் வியாபாரம் செய்பவர்களுக்கு இனி நல்ல லாபம் கிடைக்கும்.
மேக்கப், எலக்ட்ரானிக் போன்றவற்றில் வேலை செய்பவர்களுக்கு இனிமேல் அற்புதமாக இருக்கும். பழைய முதலீடுகளால் நல்ல ஆதாயம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டால், பணியிடத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.
கடகம்
சண்டாள யோகம் நீங்குவதால், கடக ராசிக்காரர்களுக்கு ஜூன் 21 முதல் அற்புதமாக இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணம் சம்பாதிப்பதில் கவனம் அதிகரிக்கும். பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது. எதிர்பாராத பண பலன்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றமும் வெற்றியும் கிடைக்கும். உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வேலைகளை வெற்றிகரமாக முடித்து, உயர் அதிகாரிகளின் மனதில் நல்ல இடத்தைப் பிடிப்பீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஜூன் 21 முதல் நிதி ரீதியான நன்மைகள் கிடைக்கவுள்ளது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கப் போகிறது. குடும்ப சூழல் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் அனைத்து வேலைகளையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பு அதிகரிக்கும்.
தடைபட்ட பல வேலைகள் இனிமேல் வெற்றிகரமாக செய்து முடிக்கப்படும். மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க விரும்பினால், அந்த ஆசை நிறைவேறும். புதிய தொழில் தொடங்க திட்டமிட்டிருந்தால், அதற்கான நல்ல லாய்ப்புகள் கிடைக்கும். தந்தையின் முழு ஆதரவும் இனிமேல் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications