Latest Updates
-
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க
வாசலிலேயே காத்திருந்த 9 கோடி மதிப்புள்ள புதையல் கடைசி வரை கண்ணுக்கேத் தெரியாமல் போன சோகம்..என்னாச்சு தெரியுமா?
ஒரு சிறிய ருமேனிய கிராமத்தில், ஒரு வயதான பெண் அவருக்கேத் தெரியாமல் பல ஆண்டுகளாக ஒரு புதையலை வைத்திருந்துள்ளார். கதவு மூடாமல் இருக்க அவர் வைத்திருந்தது 3.5-கிலோகிராம் (7.7 எல்பி) அம்பர் கட்டியாகும், இப்போது தோராயமாக 1 மில்லியன் யூரோ (சுமார் ரூ. 9 கோடி) மதிப்புடையது.
கோல்டி கிராமத்தில் உள்ள ஒரு உள்ளூர் ஓடையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த அம்பர் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகப்பெரிய ஒன்றாகும். அந்தப் பெண்ணின் மரணத்திற்குப் பிறகு, அவரின் உறவினர் ஒருவர் கல்லின் முக்கியத்துவத்தை கண்டறிந்த போதுதான் அதன் உண்மையான மதிப்பு தெரியவந்தது.

கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருந்த அதிர்ஷ்டம்
அந்தப் பெண், ஒரு ஓடையின் அருகே அம்பரைக் கண்டுபிடித்து, அதன் மதிப்பைப் பற்றிஅறியாமல், பல ஆண்டுகளாக அதைத் தன் வீட்டு வாசலிலேயே போட்டு வைத்துள்ளார். ஒருமுறை அவர் வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள் கூட, இந்த புதையலின் மதிப்பை அடையாளம் காணாமல், வீட்டிலிருந்த பிற நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
1991 இல் அவர் இறந்த பிறகு, ஒரு உறவினர் இந்த கல்லை மரபுரிமையாகப் பெற்றார் மற்றும் அது வெறும் கல் அல்ல என்று சந்தேகிக்கத் தொடங்கினார். அந்தக் கல்லை ருமேனிய அரசாங்கத்திற்கு விற்றபோது அவருடைய சந்தேகம் உறுதியானது. வல்லுநர்கள் விரைவாக அதை ஒரு தேசிய பொக்கிஷமாக அறிவித்து, மேல் ஆய்வுக்காக போலந்தின் கிராகோவில் உள்ள வரலாற்று அருங்காட்சியகத்திற்கு அனுப்பினர்.
மில்லியன் ஆண்டு கால சரித்திரம்
இந்த அம்பர் 38.5 முதல் 70 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று போலந்து நிபுணர்கள் உறுதிப்படுத்தினர். இந்த கல் இப்போது புசாவ் மாகாண அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது, அங்கு அது அனைவரின் கவனத்தைப் பெற்றுள்ளது.
அருங்காட்சியகத்தின் இயக்குனர் கூறுகையில், "இந்த கண்டுபிடிப்பு விஞ்ஞான மட்டத்திலும் அருங்காட்சியக மட்டத்திலும் பெரும் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது," இது உலகின் மிகப்பெரிய அம்பர் துண்டுகளில் ஒன்றாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
ருமேனியாவின் பணக்கார ஆம்பர் பாரம்பரியம்
ருமேனியா உலகின் அம்பர் வைப்புகளில் முக்கியமான இடத்தில் உள்ளதாக அறியப்படுகிறது, குறிப்பாக புசாவ் கவுண்டியில். இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட அம்பரால் அது காணப்படும் பகுதிக்கு "ருமானிட்" அல்லது "புசாவ் ஆம்பர்" என்ற பெயரைப் பெற்றது.
ஒரு காலத்தில் மிகவும் மதிப்புமிக்க தளமாக இருந்த ஸ்ட்ராம்பா அம்பர் சுரங்கம், லாபம் குறைந்ததால் இறுதியில் அரசாங்கத்தால் மூடப்பட்டது. இருப்பினும், இப்பகுதி இன்னும் ஒரு குறிப்பிட்ட அளவு இயற்கை இருப்பைக் கொண்டுள்ளது, அங்கு மதிப்புமிக்க அம்பர் தொடர்ந்து கண்டுபிடிக்கப்படுகிறது.
வேர்ல்ட் ரெக்கார்ட் அகாடமியின் கூற்றுப்படி, கோல்ஷி மியூசியம் கலெக்ஷனில் 200 பதப்படுத்தப்பட்ட மற்றும் மூல அம்பர் துண்டுகள் உள்ளன, அவை சில கிராம்கள் முதல் கிலோக்கள் வரை எடை கொண்டவை. இந்த துண்டுகள் மஞ்சள் மற்றும் சிவப்பு முதல் பழுப்பு மற்றும் கருப்பு வரை நம்பமுடியாத 162 ஷேட்களில் உள்ளன. சில அம்பர் துண்டுகளில் பூச்சிகள், ஓட்டுமீன்கள் மற்றும் பறவை இறகுகள் போன்ற பழங்கால புதைபடிவங்கள் உள்ளன, அவை அவற்றின் வரலாற்று முக்கியத்துவத்தை அதிகரிக்கின்றன.



Click it and Unblock the Notifications
