நடராஜர் சிலையை ஏன் வீட்டில் வைக்கக் கூடாது தெரியுமா?

திருமுறைகளும், தேவாரம், திருவாசகம் ஆகியவையும் நடராஜரின் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவையும், இவை அனைத்துமே மாய தோற்றங்கள் என்பதை பக்தர்களுக்கு விளக்குகின்றன. நடராஜரின் நடன அசைவுகளை பற்றி விளக்குவதே நாட்டிய சாஸ்திரம் என சொல்லப்படுகிறது. சைவர்களின் மிக முக்கியமான சிவ வழிபாட்டு வடிவங்களில் ஒன்றாகவே நடராஜரின் வடிவம் கருதப்படுகிறது.

நடராஜரைச் சுற்றியுள்ள நெருப்பு வட்டம் அண்ட நெருப்பைக் குறிக்கிறது, இது வாழ்க்கை மற்றும் இறப்பு சுழற்சியைக் குறிக்கிறது. எனவே, படைப்பு மற்றும் அழிவின் அடையாளமான சிவபெருமானின் நடராஜர் சிலையை வீட்டில் வைத்திருப்பது மங்களகரமானதாக கருதப்படுவதில்லை.

Dont keep Nataraja statue at home why

நடராஜர் சிலையை ஏன் வீட்டில் வைக்கக் கூடாது?

வாஸ்து சாஸ்திரப்படி, சிவனின் நடராஜர் வடிவம் என்பது அழிவுடன் தொடர்புடையதாகும். இதனால் நடராஜரின் படம், ஓவியம், சிலை ஆகியவற்றை வீட்டில் வைக்கக் கூடாது என சொல்லப்படுவதுண்டு. இந்து சாஸ்திரங்களும், வேதங்களும் நடராஜரை கலை திறனின் அடையாளமாகவும், பெருமான் தன்னை மறந்து ஆடுவதை போலவும் குறிப்பிடுகின்றன. இந்த நடனக் கோலம் என்பது காண்பவரை பரவசமடைய செய்து, அழகான தோற்றத்துடன் இருந்தாலும் இது சிவனின் கோபத்தை குறிப்பதாகவே சொல்லப்படுவதால் வீட்டின் பூஜை அறையில் நடராஜரின் சிலையை அல்லது வடிவத்தை வைக்காமல் இருப்பதே நல்லது என வாஸ்து நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்..

வீட்டில் நடராஜர் சிலையை வைப்பதற்கான விதிகள்

ஒருவேளை நடராஜரின் சிலையை வீட்டில் வைக்க விரும்பினால் அது ஆக்ரோசமான ரூபமாக இல்லாமலும், மிக சிறிய அளவில் இருக்கும் வகையிலும் பார்த்துக் கொள்வது நல்லது. அதே போல் நடராஜரின் சிலையை வீட்டில் வைப்பதாக இருந்தால் அந்த இடத்தில் நடராஜரின் சிலையை மட்டுமே வைக்க வேண்டும். மற்ற தெய்வங்களின் சிலையை நடராஜர் சிலையுட்ன சேர்த்து வைக்கக் கூடாது. நடராஜர் சிலையை ஒரு போதும் தரையில் வைக்கக் கூடாது. நடராஜர் சிலையை எப்போதும் மேஜை அல்லது அதற்காக தனியாக ஒரு மேடை அமைத்து அதன் மீது மட்டுமே வைக்க வேண்டும். மகிழ்ச்சியான தோரணையில் இருக்கும் நடராஜர் சிலையை பரிசளிக்கலாம்.

வீட்டில் நடராஜப் பெருமானின் சிலை இருந்தால், வாஸ்து படி நடராஜப் பெருமானின் சிலையை எப்படி வைக்கலாம் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

1. சிவபெருமானின் மகிழ்ச்சியான தோரணையில் நடராஜர் சிலை வைக்கப்பட்டால் , கவலைப்பட ஒன்றுமில்லை. சிவகாம சுந்தரி (பார்வதியின் மிக அழகான வடிவம்) வீட்டில் வைக்கப்பட்டுள்ள நடராஜரின் சிலைக்கு அருகில் வைக்கப்பட வேண்டும், ஏனெனில் சிவன் தனது சிறந்த பாதி இல்லாமல் மகிழ்ச்சியாக இல்லை என்று நம்பப்படுகிறது.

2. நடராஜர் சிலைக்கு அருகில் விநாயகப் பெருமானோ அல்லது வேறு எந்த தெய்வங்களோ மட்டும் வைத்திருக்கக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்து தெய்வங்களின் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பித்தளை சிலைகளை அடுத்தடுத்து வைப்பதை தவிர்க்க வேண்டும்.

3. நடராஜர் சிலையை எப்போதும் வடகிழக்கு மூலையில் வைத்து உயரமான இடத்தில் அல்லது மேஜையில் வைக்க வேண்டும்.

4. நடராஜர் சிலையைச் சுற்றியுள்ள பொருட்களைக் கவனித்துக் கொள்ளுங்கள். சிலையைச் சுற்றி பெல்ட், காலணிகள், பைகள் போன்ற தோலால் செய்யப்பட்ட எதுவும் இருக்கக்கூடாது, இது சிலையின் ஆற்றல் சூழலில் எதிர்மறையை உருவாக்கும்.

5. தினமும் சிலையை சுத்தம் செய்து மலர்களால் அலங்கரிக்கவும். மாதம் ஒருமுறையாவது குறிப்பாக பிரதோஷ காலத்தில் பூஜை செய்வது நல்லது.

Story first published: Thursday, July 4, 2024, 21:41 [IST]
Desktop Bottom Promotion