Latest Updates
-
பாபா வங்கா கணிப்பு படி 2026 முதல் 2030 வரை உலகில் என்னென்ன மோசமான சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
செவ்வாயால் உருவாகும் சக்திவாய்ந்த ருச்சக யோகம்: மே மாதம் இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டபோகுது -
2 வெள்ளரிக்காயும், 1 கப் ரவையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போறாங்களாம் -
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 8 மாதம் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜ்ஜின் மேல் இந்த பொருட்களை ஒருபோதும் வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை அதிகரிக்கும்.. -
Malai Ice Cream: கொளுத்துற வெயிலுக்கு வெறும் 4 பொருளை வெச்சு குளுகுளு-ன்னு இப்படி ஐஸ்க்ரீம் செய்யுங்க.. -
வெயிலால் உங்க கை கருப்பா மாறுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்..
நடராஜர் சிலையை ஏன் வீட்டில் வைக்கக் கூடாது தெரியுமா?
திருமுறைகளும், தேவாரம், திருவாசகம் ஆகியவையும் நடராஜரின் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவையும், இவை அனைத்துமே மாய தோற்றங்கள் என்பதை பக்தர்களுக்கு விளக்குகின்றன. நடராஜரின் நடன அசைவுகளை பற்றி விளக்குவதே நாட்டிய சாஸ்திரம் என சொல்லப்படுகிறது. சைவர்களின் மிக முக்கியமான சிவ வழிபாட்டு வடிவங்களில் ஒன்றாகவே நடராஜரின் வடிவம் கருதப்படுகிறது.
நடராஜரைச் சுற்றியுள்ள நெருப்பு வட்டம் அண்ட நெருப்பைக் குறிக்கிறது, இது வாழ்க்கை மற்றும் இறப்பு சுழற்சியைக் குறிக்கிறது. எனவே, படைப்பு மற்றும் அழிவின் அடையாளமான சிவபெருமானின் நடராஜர் சிலையை வீட்டில் வைத்திருப்பது மங்களகரமானதாக கருதப்படுவதில்லை.

நடராஜர் சிலையை ஏன் வீட்டில் வைக்கக் கூடாது?
வாஸ்து சாஸ்திரப்படி, சிவனின் நடராஜர் வடிவம் என்பது அழிவுடன் தொடர்புடையதாகும். இதனால் நடராஜரின் படம், ஓவியம், சிலை ஆகியவற்றை வீட்டில் வைக்கக் கூடாது என சொல்லப்படுவதுண்டு. இந்து சாஸ்திரங்களும், வேதங்களும் நடராஜரை கலை திறனின் அடையாளமாகவும், பெருமான் தன்னை மறந்து ஆடுவதை போலவும் குறிப்பிடுகின்றன. இந்த நடனக் கோலம் என்பது காண்பவரை பரவசமடைய செய்து, அழகான தோற்றத்துடன் இருந்தாலும் இது சிவனின் கோபத்தை குறிப்பதாகவே சொல்லப்படுவதால் வீட்டின் பூஜை அறையில் நடராஜரின் சிலையை அல்லது வடிவத்தை வைக்காமல் இருப்பதே நல்லது என வாஸ்து நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்..
வீட்டில் நடராஜர் சிலையை வைப்பதற்கான விதிகள்
ஒருவேளை நடராஜரின் சிலையை வீட்டில் வைக்க விரும்பினால் அது ஆக்ரோசமான ரூபமாக இல்லாமலும், மிக சிறிய அளவில் இருக்கும் வகையிலும் பார்த்துக் கொள்வது நல்லது. அதே போல் நடராஜரின் சிலையை வீட்டில் வைப்பதாக இருந்தால் அந்த இடத்தில் நடராஜரின் சிலையை மட்டுமே வைக்க வேண்டும். மற்ற தெய்வங்களின் சிலையை நடராஜர் சிலையுட்ன சேர்த்து வைக்கக் கூடாது. நடராஜர் சிலையை ஒரு போதும் தரையில் வைக்கக் கூடாது. நடராஜர் சிலையை எப்போதும் மேஜை அல்லது அதற்காக தனியாக ஒரு மேடை அமைத்து அதன் மீது மட்டுமே வைக்க வேண்டும். மகிழ்ச்சியான தோரணையில் இருக்கும் நடராஜர் சிலையை பரிசளிக்கலாம்.
வீட்டில் நடராஜப் பெருமானின் சிலை இருந்தால், வாஸ்து படி நடராஜப் பெருமானின் சிலையை எப்படி வைக்கலாம் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...
1. சிவபெருமானின் மகிழ்ச்சியான தோரணையில் நடராஜர் சிலை வைக்கப்பட்டால் , கவலைப்பட ஒன்றுமில்லை. சிவகாம சுந்தரி (பார்வதியின் மிக அழகான வடிவம்) வீட்டில் வைக்கப்பட்டுள்ள நடராஜரின் சிலைக்கு அருகில் வைக்கப்பட வேண்டும், ஏனெனில் சிவன் தனது சிறந்த பாதி இல்லாமல் மகிழ்ச்சியாக இல்லை என்று நம்பப்படுகிறது.
2. நடராஜர் சிலைக்கு அருகில் விநாயகப் பெருமானோ அல்லது வேறு எந்த தெய்வங்களோ மட்டும் வைத்திருக்கக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்து தெய்வங்களின் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பித்தளை சிலைகளை அடுத்தடுத்து வைப்பதை தவிர்க்க வேண்டும்.
3. நடராஜர் சிலையை எப்போதும் வடகிழக்கு மூலையில் வைத்து உயரமான இடத்தில் அல்லது மேஜையில் வைக்க வேண்டும்.
4. நடராஜர் சிலையைச் சுற்றியுள்ள பொருட்களைக் கவனித்துக் கொள்ளுங்கள். சிலையைச் சுற்றி பெல்ட், காலணிகள், பைகள் போன்ற தோலால் செய்யப்பட்ட எதுவும் இருக்கக்கூடாது, இது சிலையின் ஆற்றல் சூழலில் எதிர்மறையை உருவாக்கும்.
5. தினமும் சிலையை சுத்தம் செய்து மலர்களால் அலங்கரிக்கவும். மாதம் ஒருமுறையாவது குறிப்பாக பிரதோஷ காலத்தில் பூஜை செய்வது நல்லது.



Click it and Unblock the Notifications











